மாப்பிள்ளை வாழ்த்து


பூக்களின்
முகங்களில் பொன்னழகு
பொன்னழகோ
இந்தப் பெண்ணழகோ

கண்ணழகும்
இவள் கனிவழகும்
விண்ணளக்கும்
வனத் தேன்விளைக்கும்

மாமகனே
மணிக் கணித்தளமே
தேவனவன்
உன் கவர் முகத்தில்

ஆனவரை
சுடர் ஏற்றிவைத்தான்
தூயநதிக்
குணம் பூட்டிவைத்தான்

கைகோர்ப்பீர்
உணர் மெய்கோர்ப்பீர்
மனங்கோர்ப்பீர்
என்றும் சுகம்சேர்ப்பீர்

வாழ்வாங்கு
இந்த வான்நிறைத்து
வாழ்கவென்றே
நின்று வாழ்த்துகின்றேன்

No comments: