சிட்டுக் குருவியின்
சிறகுகள் தொட்டேன்

கைக்குள் அள்ளி
காற்றுக்கும் நோகாமல்
அப்ப்ப்படியே பொத்திக்கொள்ள
உள்மனப் பிஞ்சு உடைந்து தவித்தது

குவிந்து குவிந்தே பீறிட்ட இதழ்கள்
முத்த ராகங்களைச மூச்சழிய இசைக்க
மொத்த நரம்புகளிலும்
முரசுகொட்டித் துடித்தன

பஞ்சு பஞ்சுப் பரிசங்களில்
பறிகொடுத்த நெஞ்சக்குழி
இறகின் முடிக்கூட்டில்
இமை மூடிய கிறக்கவிழி

தத்திய குருவியின்
பொன்னழகில் லயித்திருந்தேன்
பொத்திய மறுநிமிடம்
பறந்தே போனது

எப்படி மறந்தேன்
இப்போது அறிந்தேன்
சிட்டுக்குருவியின்
சிறகினைத் தொட்டால்...

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்