20160813

Abdul Sukkur இன்றைய நெருக்கடியே பொய்களை பிரச்சாரங்கள் வழி
உண்மையாக்கி மக்களை ஏமாற்றுவது தான்.
>>>>>>>>>>>>>
பொய் ஒருக்காலும் உண்மை ஆகாது.
முட்டாள்கள் நிறைந்திருந்தால், பொய்தான் எப்போதும் உண்மையாய் ஆகும்.
உண்மை, அறிவோடு அழுதுகொண்டு வெளியேதான் நிற்கும்.

*
Padmanabhamn Sivathanupillai நீங்கள் சொல்லும் கடவுளை வணங்காதவனெல்லாம்
ஊங்களுக்கு காபிருகளா.?
>>>>>>>>>>>>>>>>>>>>
காபிர் என்று வேற்றுமொழியில் சொல்லிப் பார்க்காமல் தமிழிலேயே சொல்லிப் பாருங்கள் ”கடவுளை வணங்காதவர்கள்” என்று. பிழை தெரிந்தால் சுட்டுங்கள் !
மொழியில் என்ன இருக்கிறது.
நாத்திகன் என்றால் என்ன பொருள் தமிழில்?
(நாஸ்திகன்)
நாசம் செய்பவன் என்று பொருள்.
காபிர் என்றால் நாசம் செய்பவன் என்று பொருள் அல்ல. கடவுளை மறுப்பவன் என்று மட்டுமே பொருள்.

*
Saravanan Mds கடவுள் நம்பாதவனா மசூதிய இடித்தான்.. சகோ இருப்பதை விட்டு பறப்பதை தேடுங்கள் அது உங்கள் விருப்பம்... கடவுள் என்பது கடந்து போ உள்ளே என்பதே... எந்த கடவுள் மருப்பாளனும் குண்டு வைக்கல கொலை பன்னல...
>>>>>>>>>>>>>>>
ஆமாம் கடவுளை நம்பாவதன் தான் மசூதியை இடித்தான்.
அவனுடையது உண்மையான கடவுள் நம்பிக்கை இல்லை.
அவன் கடவுள் மறுப்பாளனும் இல்லை.
கடவுள் மறுப்பாளனுக்கு கோவில் மாதாகோவில் மசூதிகளை இடிப்பதில் விருப்பமில்லை.
அவற்றை எல்லாம் இடிப்பவன், மூர்க்கன், முரடன், முட்டாள், வக்கிரக் காரன், சுயநலவாதி, கடவுள் பக்தி இல்லாதவன், மார்க்கம் சொல்லும் அறம் இல்லாதவன்.
ஒரு சொல்லில் சொல்வதானால் அவன் மனிதனே அல்ல.
அவன் மக்களாட்சி அரசால் முற்று முழுதாக அழிக்கப்படவேண்டியவன்

*

No comments: