மனிதர்களுள் பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது சரியா?
மனிதர்களுள் கல்வி செல்வம் காரணமாக வேறுபாடுகள் இருக்கும். அது மாறிக்கொண்டே வரும்.
ஒரே வீட்டிலேயே ஒருவன் டாக்டராவான் இன்னொருவன் கூலித் தொழிலாளியாவான்.
ஆனால் அடுத்த சுற்றில் டாக்டர் மகன் பலசரக்கு வியாபாரியாகக் கூடும் கூலித் தொழிலாளியின் மகன் மந்திரியாகக் கூடும்.
ஒருவனின் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் சாதி என்பது அப்படியா?
ஒருவன் பிறப்பைக் கொண்டு மேலானவனாகவோ கீழானவனாகவோ ஆகிறான்.
தீண்டாமையால் வாழ்நாள் முழுவதும் தீய்கிறான்.
இதில் ஏதும் நியாயம் உண்டா?
தர்மம் உண்டா?
அறம் உண்டா?
மனிதம் வாழ வழியுண்டா?
அன்புடன் புகாரி

No comments: