பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நெஞ்சினில் பொன்னும் நாவினில் முத்தும்
நிறைந்தச் சின்னவனே - விண்ணை
விஞ்சிடும் பேரொளி பொன்நிலாக் கண்களில்
விளைந்திடும் பூமகனே

எல்லாம் வல்ல இறையருள் ஓங்க
ஏற்றமே வாழ்வாக  - இன்பம்
பிறந்த இந்நாள் இன்னும் இனிதாய்ப்
பிறந்திட வாழ்த்துகின்றேன்

இன்பம் மலரும் பிறந்தநாள்
என்றும் வளரும் பிறந்தநாள்
அன்பில் மிளிரும் பிறந்தநாள்
உள்ளம் குளிரும் பிறந்தநாள்

கண்ணில் ஒளிரும் பிறந்தநாள்
எண்ணம் மணக்கும் பிறந்தநாள்
அன்னை மகிழும் பிறந்தநாள்
தந்தை நெகிழும் பிறந்தநாள்

கண்கள் சிரிக்கும் பிறந்தநாள்
கைகள் அணைக்கும் பிறந்தநாள்
உள்ளம் சிலிர்க்கும் பிறந்தநாள்
உயிரை நிறைக்கும் பிறந்தநாள்

கைகள் ஏந்தும் பிறந்தநாள்
கருணை கேட்கும் பிறந்தநாள்
இன்பம் வழங்கும் பிறந்தநாள்
இறைவன் அருளும் பிறந்தநாள்

ஆண்டுகள் ஆயிரம் உருண்டோட
மீண்டும் மீண்டும் இவ்வினியநாள்
வேண்டும் சுகமுடன் மலரட்டும்

பொன் மகனே வாழ்க
பசுந் தளிரே வாழ்க
மனம் நிறைந்தே வாழ்க
தினம் சிரித்தே வாழ்க

No comments: