ஐ-பேடில் அழகுதமிழ் செல்லினம்

முத்தழகா
முத்து நெடுமாறா
தமிழைக்
கணியுலகக் கன்னத்தில்
முத்து முத்து முத்தங்களாய்
முப்பொழுதும் பதிக்கும்
வித்தகா

மெல்லினம் வல்லினம்
இடையினம் காட்டும்
தமிழழகியின் மடியில்
சொக்கி விழுந்த நான்
இன்னமும்
எழுந்து கொள்ளவே இல்லை

அதற்குள்
உன் செல்லினத்திலும் விழுந்து
சிறைபட்டுப் போவதா?

அடடா
அந்த சிறைக்குள்தான்
எத்தனை எத்தனை லட்சங்களில்
வண்ண வண்ணச் சிறகுகள்?

செல்லினச் சுந்தரா
முத்தெழில் முத்து நெடுமாறா
உனக்கு இத்தமிழனின் நன்றிகள்
காலத்தால் காய்ந்துபோகாத
கோடி கோடிக் கணிப்பூங்கொத்துக்களாக

அன்புடன் புகாரி
20110312