ஆகாதா

வழிந்தோடும் கண்ணீரில்
ஒதுச்செய்து

அடர்ந்த இருளில்
தவித்துக்கிடக்கும் சூரியனோடு
இணைந்து நிய்யத்துச்செய்து

நடு நடுங்கும்
பத்து விரல்களையும் உயர்த்தி
புறாவின் சிறகுகளாய்
விரித்து

நோண்பும் தொழுகையும்
துவாக்களுமாய் அழுததற்கு
அழுதழுது கரைந்ததற்கு

அளவற்ற அருளாளன்
அருள்பவனாகவே இருக்கிறான்

ஆனால்
அனைத்தும் அறிந்த அவன்
அருளும்
அந்த உயர் அருளை அவமதித்து
மீண்டும் அழுதுகிடப்பது
அறிவின்மை மட்டுமல்ல
அவன் அருளை நிராகரிக்கும்
அவலச் செயலும் ஆகாதா!