எங்கள்
உணர்வில் உயிரில்
கலந்திருப்பது
தமிழ்
அதை உங்கள்
சின்னஞ்சிறு
கைக்குட்டையால்
துடைத்தெறிந்துவிட முடியாது

வீழ்வது
எதுவாக இருப்பினும்
வாழ்வது
தமிழாகவே இருக்கும்
தமிழர்தம்
நெஞ்சாங்குழிப் பேழைகளில்

கவிஞர் புகாரி
தமிழ் ஆங்கிலம் இந்தி தமிழ்நாடு இந்தியா

கடந்த வருடம் நான் டொராண்டோ ’பாங்க் ஆஃப் மான்றியலில்’ ஒன்றரை ஆண்டு ஒப்பந்தப் பணி செய்தேன். அங்கே எனக்கு ஒரு நண்பன் வாய்த்தான். அவன் ’கனடியன் டயரில்’என்னோடு வேலை செய்தவன்தான். மான்றியல் வங்கியிலும் என்னோடு வேலை செய்தான்.

அவன் பெயர் வருண், பஞ்சாப்காரன். பழகுவதற்கு இனிமையானவன்.  நாங்கள் ஆங்கிலத்தில்தான் பேசிக்கொள்வோம். ஒரு நாள் ‘நீ நல்லே இருக்கே’ என்றான். 'வருண், என்னாச்சு எப்படித்தெரியும் உனக்குத் தமிழ்' என்றேன். எனக்குத் தமிழ் தெரியாது. இந்த வரி மட்டும்தான் தெரியும், நான் தமிழ்நாட்டில் 5 வருடங்கள் வேலை செய்தேன் என்றான்.

5 வருடங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இரண்டு வருடங்கள் கொச்சின் - கேரளாவிலும் வேலை செய்திருக்கிறான். ஆனால் அவனுக்குத் தமிழும் தெரியாது மலையாளமும் தெரியாது. இந்தி தெரியும் ஆங்கிலம் தெரியும். அவ்வளவுதான்.

அவன் பஞ்சாபி என்றாலும் டெல்லிதான் அவனது வாழ்விடம்.

அவன் இன்னொரு தகவலையும் சொன்னான். நான் மட்டுமல்ல, ஏராளமான வட இந்தியர்கள், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெகுகாலம் பணி செய்கிறார்கள் என்றான். ஏன் என்றேன். கணினித் துறையில் தென் இந்தியாதானே கொடி கட்டிப் பறக்கிறது என்றான். எனக்குக் கிடைத்த முதல் வேலையே தமிழ்நாட்டில்தான் என்றான்.

இந்தியா மட்டும் நேற்று பிறந்த மொழியான இந்தியை விட்டுவிட்டு பழம்பெரும் மொழியான தமிழை, நாடு முழுவதும்  கல்வி மொழியாய் ஆக்கி இருந்தால், எத்தனை நன்றாக இருக்கும்?

செம்மொழியான தமிழ் மொழி இந்திய ஆட்சி மொழி என்றால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு எத்தனை உயர்ந்துவிடும்?

அடர்ந்தியான இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட சிந்து சமவெளி நாகரிகம் கண்ட ஒரு மொழியை ஏற்பதால் இந்தியாவின் பழம்பெரும் பண்பாடு கலாச்சார மெல்லாம் எப்படியெல்லாம் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கும்?

என்றெல்லாம் பட்டியல் இட்டு, நான் ஆதங்கப்படவில்லை பேராசை கொள்ளவில்லை.

ஒரு பெரிய உண்மையைச் சாட்சியோடு உணர்ந்தேன்.

ஆங்கிலம் எங்கள் கல்வி மொழி அதுவே எங்கள் அலுவல் மொழி எனும்போது வருணுக்கும் எனக்கும்தான் எத்தனை நெருக்கம்? நான் தமிழ் அவன் பஞ்சாபி என்பது மறந்துபோய், அதற்காக அடித்துக்கொள்ளாமல் இந்தியர்களாய்த் தோள்சேர்ந்து நிற்கிறோம்.

நான் என் பள்ளியில் இருமொழி படித்தேன். ஆங்கிலம் + தமிழ்.
வருண் அவன் பள்ளியில் இருமொழி படித்தான். ஆங்கிலம் + இந்தி. ஒரு மலையாளி அவன் பள்ளியில் இருமொழி படிக்கிறான். ஆங்கிலம் + மலையாளம். ஒரு தெலுங்கன் அவன் பள்ளியில் இருமொழி படிக்கிறான். ஆங்கிலம் + தெலுங்கு.

இந்தியா செழுமையான பாரம்பரியங்களைக் கொண்டது. அதன் செழுமையில் மிகப் பெரும் செழுமை அதன் மொழி வளம். ஒவ்வொரு மொழியுமே உயர்ந்த மொழி. எந்த மொழியின் மீதும் எந்த மொழியும் ஏறி மிதித்து அழிக்கப்பார்க்கும் கேடு இந்தியாவை அழித்துவிடும்.

ஐரோப்பாவைப் போல தமிழ்நாடு தனி நாடு, கேரளா தனிநாடு, ஆந்திரா தனிநாடு, பஞ்சாப் தனிநாடு, வங்காளம் தனி நாடு. என்று அத்தனையும் தனித்தனி நாடுகளாய் இருந்தால்தான் அவரவர் தாய் மொழியைக் காப்பாற்ற அவர்களால் முடியும், அல்லாமல் சேர்ந்து ஒற்றுமையாய் ஒரே நாடாக இருந்தால் நடுவண் அரசின் இந்தி மொழி மாநில மொழிகளை அழித்துவிடும் என்றால் அங்கே மிகப் பெரும் பிழை இருக்கிறது. பிழையல்ல குற்றம் இருக்கிறது  குற்றமும் அல்ல கொடுங்கோல் இருக்கிறது.

உலகில் ஏராளமான மொழிகள் உண்டு. எல்லோரும் தாராளமாகப் படிக்கலாம். யார் தடுத்தார்? ஆனால் இதைத்தான் படிக்க வேண்டும் என்று நடுவண் அரசு இந்தி மொழியைத் தூக்கிக்கொண்டு வந்தால் தீப்பொறிதான் பறக்கும், இரத்த ஆறுதான் ஓடும், நாடுகள் வெட்டுப்பட்டுத் துண்டுகளாகித்தான் போகும்.

வெறுப்புதான் எகிறும் ஒற்றுமைதான் சுக்குநூறாகும்.

இதற்கு மேல் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?

மொழி வெறியைக் கைவிடு இந்திய நடுவண் அரசே!

அன்புடன் புகாரி

201202 ரிதா காதுகுத்து

ரிதாவின் காதுகுத்து

காது குத்துன நத்தக் குட்டி ஐசு திங்கிறா
ஆமா ஐசு திங்கிறா - அவ
காதப் பாத்துத் தோடப்பாத்து கண்ணு சொக்குறா
ஆமா கண்ணு சொக்குறா

மாலுவனு மாலுக்குள்ள ஆளு போனிச்சு
இந்த ஆளு போனிச்சு
குட்டி ஆளு போனிச்சு
சின்ன ஆளு போனிச்சு - அங்க
காது ரெண்டும் ஓட்டையாயி திரும்பி வந்துச்சு
ஆமா திரும்பி வந்துச்சு

கண்டதுக்கும் கத்திக் கத்தி ஊரக் கூட்டுவா
நல்லா ஊரக் கூட்டுவா - ஆனா
காது குத்தும் போது மட்டும் சிரிச்சி வெக்கிறா
இவ சிரிச்சிக் வெக்கிறா

ஊரு ரொம்ப கெட்டுப் போச்சு ஒண்ணும் புரியல
ஆமாம் ஒண்ணும் புரியல - இவ
அழகப் பாத்து ஆடும் ஆட்டம் தாங்க முடியல
அடடா தாங்க முடியல

மறத்துப் போற மருந்தத் தேடி தாயி ஓடுறா
பாவம் தாயி ஓடுறா - ஆனால்
காதுத்தோட நெனைச்சு நெனைச்சு பொண்ணு மயங்குறா
சும்மா பொண்ணு மயங்குறா

தூளியில ஆடுனவ தோடு போட்டுட்டா
ஆமாம் தோடு போட்டுட்டா - தெனம்
தோடப் பாத்துத் தோடப் பாத்துத் தூக்கம் மறக்குறா
ஆமாம் தூக்கம் மறக்குறா

நாட்டு நெலமை இப்படியா ஆயிப் போச்சுடா
ஆமாம் ஆயிப் போச்சுடா - இந்த
நண்டும் குஞ்சும் ஊரை விக்க வெக்கம் ஆச்சுடா
நமக்கு வெட்கம் ஆச்சுடா

20140222
அழகு தமிழில்
ஆண்டாளை எடுத்துரைத்த
வைரமுத்துவை
பச்சைச் சொல் கக்கி
கொடுவாள் நீட்டி
சுடுரத்தம் கேட்டு
பித்துத் தலைகொண்ட
ஜோம்பிகளாய்க்
கொன்று தின்றீர்கள்

வருத்தம் தெரிவித்தபின்னும்
வறுத்தெடுத்தீர்கள்

ஆனால்
தமிழ்த்தாய் வாழ்த்தையே
அவமதித்த மடாதிபதி
விஜயேந்திரரை
என்ன செய்தீர்கள்?

தமிழ்த்தாய்வாழ்த்தை அவமதிப்பது
தமிழை அவமதிப்பதல்லவா
தமிழை அவமதிப்பது
தமிழ்க் கவிதாயினி
ஆண்டாளை அவமதிப்பதல்லவா?

ஆண்டாளின் பக்தர்களென்று
காட்சிதந்தவர்கள்
உண்மையில்
ஆண்டாள் பக்தர்கள்தாம்
என்றால்
உங்களின் நஞ்சுச் சொற்கள்
எங்கே
நரபலி வெட்டரிவாள்கள்தாம்
எங்கே எங்கே

உங்கள்
அரசியல் கூத்துக்கு
ஆட்சி பிடிக்கும் ஏய்ப்பிற்கு
ஏனடா ஆண்டாளை
பலியிட்டீர்கள்?

கவிஞர் புகாரி
யார் சொன்னது
தமிழ்
வயிற்றுமொழி  இல்லை
என்று

தமிழன்
தமிழ்நாட்டில்
தமிழ் படித்தால்
இல்லைதான்

ஆனால்
ஆங்கிலேயன்
ஆர்வர்டில்
தமிழ் படித்தால்
உண்டல்லவா

அன்புடன் புகாரி
20180123
மிகுந்த வறுமையில்...

செல்வத்தால்
புலம்பெயர் நாட்டில்
ஏழைகள் என்று
எவருமே இல்லை

ஆனால்
தமிழ்ப் பிள்ளைகளுக்குத்
தமிழ் வேண்டுமா
என்பதில்
மிகுந்த வறுமையில்
இருக்கிறார்கள்



பாலைக்
கறந்துகொண்டே
காம்பறுக்கும்
உறவானாலும்

அம்மா
அம்மா
என்பதைத்தவிர

வேறென்ன
சொல்லப்போகிறது
பசு
அன்பின் மணி மணிவண்ணன், ஹார்வர்ட் தமிழ் இருக்கை நான் துவக்கம் முதலாகவே, ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் நடுவிலேயே நின்று கொண்டிருந்தேன். நாலும் தெரிந்த என் இனிய தமிழ்பற்று நண்பர்களாகிய நீங்கள் எல்லோரும் ஏதேனும் சிறந்த பயன்பாட்டைச் சொல்லி என்னை ஆதரவின் பக்கம் இழுப்பீர்கள் என்று நம்பினேன். ஆகையினால்தான் நான் தொடர்ந்து கேள்விகள் கேட்டேன். ஆனால் என்னை மீண்டும் அதே நிலைக்கே கொண்டு வந்து விட்டுவிட்டீர்கள் ஆகவே இப்போதும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை. நான் ஆதரிக்க இந்த இருக்கை எந்த பெரிய நல்லதையும் செய்யப் போவதில்லை நான் எதிர்க்க இந்த இருக்கை எந்த ஒரு கேட்டையும் தமிழுக்குச் செய்துவிடாது என்றும் நம்புகின்றேன். அப்படியே கேடிழைத்தாலும், அது வடமொழியர் செய்ததுபோல கேடாக்க வழியே இல்லை என்றும் நம்புகின்றேன். தமிழ் அறிந்த தமிழனுக்கு இயலாது தமிழே அறியாத ஆங்கிலேயனுக்குத்தான் இயலும் என்று தமிழர்கள் கைப்பட எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுக்கிறோமே என்ற கேட்டினைத் தவிர வேறு கேடு எனக்குப் பெரிதெனத் தெரியவில்லை. உண்மைத் தமிழர்களின் ஆறு மில்லியன் டாலர்களும் அயராத சேவைகளும் ஆங்கிலேயரின் பல்கலைக் கழகத்திற்கு ஒரு நன்கொடையாகிப் போகட்டும். நம்மூர் அரசியல்காரன் ஒருசில நிமிடத்தில் சம்பாதிக்கும் அற்பத் தொகைதான் அது. ஓர் இருக்கைக்காக கடைக்கோடித் தமிழனும் தன் ஏழ்மையிலும் பொருள் தந்து உதவி இருக்கிறான். அத்தனை உயர்வாய் அவன் தமிழை மதிக்கிறான் என்ற எண்ணமே தமிழுக்குச் சிம்மாசனம் எனக்குக் கண்களில் நீர். தமிழ் இருக்கை என்பது இரு கை ஓசை அல்ல ஒரு கை ஆசை தமிழுக்குச் சிலர் ஊட்டுகிறார்கள் தமிழால் சிலர் ஊட்டப்படுகிறார்கள் இந்த இருக்கைப் பணியில் நான் பெரிதும் நேசிக்கும் மிக உயர்ந்த, சிறந்த, நல்ல தமிழர்கள் இருக்கிறார்கள். அதைக் கண்டே நான் பலகாலும் மௌனமாகவே இருந்திருக்கிறேன். அந்த மௌன நாட்களிலும் எனக்குள் பெரும் சூராவளி உள்ளே சுற்றிக்கொண்டேதான் இருந்தது. இன்றைய பாழ்நிலை நாட்களில், நாம் தமிழுக்குச் செய்யக் கூடையன எத்தனையோ இருந்தும் ஏன் இப்படி ஏன் இப்படி ஏன் இப்படி என்றே குமைவேன்! தாய்நிலத் தெருக்களிலும் தமிழ்வளர்ப் பாடங்களிலும் புலம்பெயர்க் கூடுகளிலும் புதுப்பிஞ்சு நாவுகளிலும் தமிழை அழகாக வளர்க்க, வாழச் செய்ய இந்த இனிய உயர்ந்த தமிழர்கள் ஒன்று கூடட்டும் ஒருநாள். அந்த நாளுக்காகக் காத்திருப்பேன் தத்தளித்துத் தவிக்கிறாள் தமிழ்த்தாய் ஆழ்கடல் விழுந்து உப்புநீர் விழுங்கி மூச்சுமுட்டி தத்தளித்துத் தவிக்கிறாள் தமிழ்த்தாய் கை கொடுத்துக் காப்பாற்ற ஒற்றைத் தமிழனும் இங்கில்லையாம் தத்தளித்துத் தவிக்கிறாள் தமிழ்த்தாய் கரையோரக் கூடத்தில் தங்க இருக்கை ஒன்று அவசர அவசரமாய்த் தயாராகிறதாம் தாயவளோ தத்தளித்துத் தவிக்கிறாள் நடுக்கடலில் மஞ்சள் பூசிக் குங்குமம் இட்டு மாலைகள் சூடி மலர்கள் தூவி பறை மேளம் கொட்டி மேற்கத்தியக் குத்தாட்டம் ஆடிக் களிக்க கரையோரக் கூடத்தில் தங்க இருக்கை ஒன்று அவசர அவசரமாய்த் தயாராகிறதாம் தாயவளோ தத்தளித்துத் தவிக்கிறாள் நடுக்கடலில் கை கொடுத்துக் காப்பாற்ற ஒற்றைத் தமிழனும் இங்கில்லையாம் அன்புடன் புகாரி
தத்தளித்துத் தவிக்கிறாள்
தமிழ்த்தாய்

ஆழ்கடல் விழுந்து
உப்புநீர் விழுங்கி
மூச்சுமுட்டி

தத்தளித்துத் தவிக்கிறாள்
தமிழ்த்தாய்

கை கொடுத்துக்
காப்பாற்ற
ஒற்றைத் தமிழனும்
இங்கில்லையாம்

தத்தளித்துத் தவிக்கிறாள்
தமிழ்த்தாய்

கரையோரக் கூடத்தில்
தங்க இருக்கை ஒன்று
அவசர அவசரமாய்த்
தயாராகிறதாம்

தாயவளோ
தத்தளித்துத் தவிக்கிறாள்
நடுக்கடலில்

மஞ்சள் பூசிக்
குங்குமம் இட்டு
மாலைகள் சூடி
மலர்கள் தூவி
பறை மேளம் கொட்டி
மேற்கத்தியக் குத்தாட்டம்
ஆடிக் களிக்க

கரையோரக் கூடத்தில்
தங்க இருக்கை ஒன்று
அவசர அவசரமாய்த்
தயாராகிறதாம்

தாயவளோ
தத்தளித்துத் தவிக்கிறாள்
நடுக்கடலில்

கை கொடுத்துக்
காப்பாற்ற
ஒற்றைத் தமிழனும்
இங்கில்லையாம்

அன்புடன் புகாரி

அண்ணல் காந்தி
சுட்டுக் கொல்லப்பட்டார்

மறந்தே போன
ஒரு பழைய செய்தி

கட்டிக்காக்கும்
காவலர்கள் சுடப்பட்டு
தெருக்கள்தோறும் ஜோம்பிகளாய்

கண்கள் கட்டப்பட்ட
நீதி தேவதைகள் சுடப்பட்டு
முச்சந்திகளில் சவப்பெட்டிகளாய்

மனிதநேயம் தேடும்
நல்லிணக்கங்கள் சுடப்பட்டு
நட்டநடுவீதிகளில்
உறை ரத்தக் குன்றுகளாய்

மொத்தத்தில்
இந்தியா சுடப்பட்டு
குற்றுயிரும் குறையுயிருமாய்

கேட்டுக் கேட்டுப் பழகிப்போன
செய்திகளால்
எந்தப் புதுச்செய்திகளும்
அதிர்ச்சி அளிப்பதாகவே
இல்லை

இந்தியா வாழ்கிறது
இந்தியர்கள் மாண்டுவிட்டார்கள்



ஆயிரம் இருக்கைகள் அமைத்து
ஆய்வதைக் காட்டிலும்
சால உறு தவ நனி கூர் கழிச்
செயல் ...

ஆங்கோர் தமிழனுடன்
தமிழில் உரையாடி ...

தாய்நிலத் தெருக்களிலும்
தமிழ்வளர்ப் பாடங்களிலும்

புலம்பெயர் கூடுகளிலும்
புதுப்பிஞ்சு நாவுகளிலும்

வாழும் மொழியென
தமிழை
வாழவைப்பதே

அன்புடன் புகாரி
நான் ஆன்மிக அரசியலை விரும்புகிறேன்.
அது உண்மையான ஆன்மிக அரசியலாக இருக்க வேண்டும் என்று ஏங்குகிறேன்
ஆன்மிக அரசியலென்றால் அப்பழுக்கில்லாத அறம் ஆட்சி செய்யும் அரசியல் என்று பொருள்
எவனுமே இல்லாத நிலையில் அதை ஏன் நாம் ரஜினிக்குக் கொடுக்கக் கூடாது
வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுகிறோம்?
மாற்று இல்லா நிலையில் வேற்று ஆள் ஆளட்டும் தமிழகத்தை
அன்புடன் புகாரி
உனக்குள்ளேயே உன் சிறையா, பெண்ணே?

கர்ப்பப் பைதான்
பெண்ணின் வீழ்ச்சியா?

நீ ஆடினால் ஆட்டம்
அவள் ஆடினால் கூட்டமா?

ஒரு புனிதத்தைப்
புற்று நோயாய் மாற்றியது
யார்?

அவளதை
அப்படியே வெட்டியெறியத்
துணிந்துவிட்டால்
மனித இனம்
முற்றாக முடிந்துபோகுமே

தேக
மூர்க்கத்தாலும்
ஆண்களே உருவாக்கிய
சமூகச் சதியாலும்
வேட்டையாடாதீர்கள்
பெண்களை

உயிர்களைப் பெற்று
உயிராய் வளர்த்தெடுக்கும்
உன்னத உயிர்கள்
பெண்கள்
TNTJ மற்றும் 'அஹ்லு குர்ஆன்' ஆட்கள் உங்களைக் கூப்பிடுகின்றார்கள். - Adirai Ahmad
*
யார் அவர்கள்?
அவர்கள் ஏன் உங்களிடம் கூவி என்னை அழைக்கிறார்கள் 
அவர்களிடம் சொல்லுங்கள், நான் எந்தக் குறுகிய வட்டத்தினுள்ளும் சிக்க மாட்டேன்.
குறுகிய வட்டத்தினுள் சிக்கி இருப்பவர்களுக்கு மட்டுமே நான் வினோதமானவன்.
குறுகிய வட்டத்தினர் குமைவதற்கெல்லாம் நான் மசிந்துவிடமாட்டேன் என்றும் சொல்லுங்கள்.
லட்சம் குறுகிய வட்டங்கள் இருப்பினும், அத்தனைக் குறுகிய வட்டத்தையும் உள்ளடக்கிய பெருவட்டம் நான்.
இறைவனே என் எல்லை
அவனைக் காட்டித் தந்த நபி பெருமானாரே என் வழிகாட்டி
இதை உரத்துச் சொல்லுங்கள்!
அன்புடன் புகாரி

201405 குர்-ஆன் பாடல்

இஸ்லாமியப் பாடல் - குர்-ஆன் குர்-ஆன்

குர்-ஆன்.... குர்-ஆன்
ஏகனின் அருளே... ஏகனின் அருளே...

குர்-ஆன்.... குர்-ஆன்
ஏகனின் அருளே... ஏகனின் அருளே....

அருள்வழி... திருமொழி....
திருமொழி... அருள்வழி...

இறைவனின் ஒளிவழி
நபிகளின் குரல்வழி
நிறையுதே.....

*

அன்றுமுதல் இன்றுவரை
ஆயிரம் பேச்சு
அவனருளில் வந்ததெல்லாம்
காத்துல போச்சு

நாளும் ஓதுவார்
பொழுதும் ஓதுவார்
நூலில் ஒரு கேள்வி என்றால்
ஓடி ஒதுங்குவார்

யாரும் ஓதவே
ஓதி விளங்கவே
நாயன் குர்-ஆன்
நபிவழியே வந்ததல்லவா 

அன்றுமுதல் இன்றுவரை
ஆயிரம் பேச்சு
அவனருளில் வந்ததெல்லாம்
காத்துல போச்சு

உன் நாவினிலே தவழ்ந்தால்
    வெகு காலம் நெஞ்சில் வாழும்
உன் கண்களிலே நிறைந்தால்
    சிறு உள்ளம் பெரியதாகும்
உன் கருத்தினிலே பதிந்தால்
    இந்த வையம் கையில் அடங்கும்
உன் பெட்டிக்குள்ளே பூட்டியதால்
    பேரருளை இழந்தாய்

அந்த ஏக இறைவன் தந்த
    அருள் வேத நூல் இது
அட இன்று மூடி வைத்தால்
    பின் என்று திறப்பது 
ஒரு பாதை இன்றி பயணம் இன்றி
    எந்த இடத்தைச் சேர்வது

நாளும் ஓதுவார்
பொழுதும் ஓதுவார்
நூலில் ஒரு கேள்வி என்றால்
ஓடி ஒதுங்குவார்

யாரும் ஓதவே
ஓதி விளங்கவே
நாயன் குரான்
நபிவழியே வந்ததல்லவா 

குர்ஆன் வாழ்க்கை கொண்டு வருது
யாரும் வாசல்மூட வேண்டாம்
வெறும் பயத்தை நெஞ்சில் பூட்டி
யாரும் ஓடி ஒளிய வேண்டாம்

இது ஏகன் அவன் ஈகை
யாரும் விழிகள் மூட வேண்டாம்
நபி வாழ்ந்து தந்த வாழ்வை
எவரும் மறந்துபோக வேண்டாம்

அந்த வானம் திறந்த வாசல்
ஏன் சாவி தொலைக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில்
ஏன் வாழ மறுக்கிறாய்

நீ விளக்கம் தேடி ஓதும்போது
இறைவன் கண்கள் ஆகிறான்
நீ விளங்கிக் கொண்டு ஓதும்போது
இறைவன் உனக்குள் வாழ்கிறான்

நாளும் ஓதுவார் பொழுதும் ஓதுவார்
நூலில் ஒரு கேள்வி என்றால் ஓடி ஒதுங்குவார்
யாரும் ஓதவே ஓதி விளங்கவே
நாயன் குரான் நபிவழியே வந்ததல்லவா 

அன்றுமுதல் இன்றுவரை ஆயிரம் பேச்சு
அவனருளில் வந்ததெல்லாம் காத்துல போச்சு
அன்றுமுதல் இன்றுவரை ஆயிரம் பேச்சு
அவனருளில் வந்ததெல்லாம் காத்துல போச்சு

(பாடகர் தாஜுதீன் வேறு மெட்டில் பாடியது வெகு சிறப்பு)
ஏறுதழுவுதல் - ஜல்லிக்கட்டு
விலங்குகளோடு விளையாடுவது்
இயற்கையோடு இயைந்த வாழ்வு
மனிதனும் மனிதனும்
மல்யுத்தம் செய்வதுபோல்
காளைகளோடும் மல்லுக்கு நின்றால்
பிழையே இல்லை
ஆனால்
அன்பு பாராட்டாமல்
பாசத்தோடு விளையாடாமல்
மிருகம் என்று தாழ்வாய் எண்ணி
வதை செய்து கொன்றால்
அது மரணக்குற்றம்தான்
ஈரக் கையுடன் எழுதுகிறேன்

உயிரை
இழக்கவே முடியாது
ஆனால்
இழந்துதான் ஆகவேண்டும்

மரணம்
தோற்பதே இல்லை


துக்கத்தைப்
பெறவே முடியாது
ஆனால்
பெற்றுத்தான் ஆகவேண்டும்

கொடுந்துயர் 
வலுக்கட்டாயமானது

கண்மூடி மண்மூடி
முடிந்தாயிற்று

நெற்றிமூடி நித்திரைமூடி
அழுதாயிற்று

நெஞ்சுமூடி நினைவுமூட
வழியில்லை

காட்சிமூடி கண்ணீர்மூட
முடியவில்லை

செய்திகேட்டதும்
நெருப்பில் ஏறிப் 
பறந்து வந்தேன்

ஈமச்சடங்கு செய்துவிட்ட
ஈரக்கையுடன் 
எழுதுகிறேன்


நீங்கள்
மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட
கோட்டைகளில் இருந்தாலும்
மரணம்
உங்களை வந்தடைந்தே தீரும்
- குரான் 4:78

இன்னாலில்லாஹி
வ-இன்னா இலைஹி ராஜிவூன்

இறைவனிடமிருந்து 
வந்தோம்
இறைவனிடமே 
செல்கிறோம்

இறைவன் அவனைத்
தன் மடியில் 
ஏந்திக்கொள்ளட்டும்

ஆமீன்


அன்பின் இக்பால் ஹசன்,

>>>வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால் நபிமொழி என்பது வஹியின் மற்றொரு வடிவம்.<<<

பார்த்தீர்களா நான் முன்பே சொன்னேன். குர்-ஆனுக்கு இணைவைப்பதும் இறைவனுக்கு இணைவைப்பதும் ஒன்றுதான் என்று. இப்போது நீங்களே குர்-ஆனுக்கு இணைவைக்கிறீர்கள். இது மகா பிழையல்லவா?

>>> "அவர் தன் இஷ்டப்படி எதையும் கூறுவதில்லை.
இது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை." - 53 : 3,4<<<<

இதை எப்படிப் புரிந்துகொண்டீர்கள்? பிழையாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள்.

அன்று குர்-ஆன் வசனங்கள் இறங்கியபோது அரபு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது நீ உன் சொந்தச் சரக்கில் கூறும் கட்டுக்கதை. இதை இறைவனின் வாக்கு என்று பிதற்றாதே என்று கடுமையாகச் சாடினார்கள். அப்போது வந்த வசனம் இது.

இதன் படி நபிபெருமானார் குர்-ஆன் வசனம் என்று சொல்வது அவரின் இஷ்டப்படி கூறுவதில்லை. அது அவருக்கு வஹி மூலமே அறிவிக்கப்பட்டது.

>>>"உங்கள் தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
எதை விட்டு தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்." - 59 : 7<<<<

இதையும் நீங்கள் பிழையாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். நபி பெருமானார் முன் மாதிரியாக வாழ்ந்தார் என்பது ஐயமின்றி உண்மை. ஆனால் அவர் குர்-ஆனைத்தான் பின் தொடர்ந்தார். குர்-ஆன் வழிதான் நடந்தார். தனக்கு ஒன்று மக்களுக்கு ஒன்று இரண்டு வழிகளை அவர் கடைபிடிக்கவில்லை. அதைத்தான் இந்த வசனம் சொல்கிறது.

அதுமட்டுமல்ல, நீங்கள் குர்-ஆனை அப்படியே பின்பற்றி நடக்கிறீர்கள் என்றால் நீங்கள் நபிவழி நடக்கிறீர்கள் என்றுதான் பொருள். ஏனெனில் நபிபெருமானார் குர்-ஆனைப் பின்பற்றி நடந்தார். குர்-ஆன் வசனம் வர வர அதன்படியே அச்சுபிசகாமல் நடந்தார். நீங்களும் குர்-ஆன் வழி நடந்தால் அப்படியே நபிவழி நடக்கிறீர்கள் என்று பொருள்.

>>>>இறைத்தூதர் நமக்கு கொடுத்ததையும் தடுத்ததையும் நபிமொழிகளின் மூலமாகத்தான் விளங்க முடியும். <<<<

குர்-ஆன் மூலமாகத்தான் விளங்கமுடியும். குர்-ஆன் உங்களுக்குப் புரியாத பட்சத்தில் நபி பெருமானாரின் விளக்கங்களைப் பின்பற்ற வேண்டும். அது குர்-ஆனுக்கு மாற்றாக இருக்காது. இருக்கவும் கூடாது.

என்ன ஒரு சங்கடம் என்றால் நபி பெருமானார் வாழ்ந்த காலத்தில் அவர் சொன்னதெல்லாம் மிகச் சரியாக இருந்தன. அவரின் மறைவுக்குப் பின் அவர் இப்படிச் சொன்னார் அப்படிச் சொன்னார் என்று ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றையும் கூறத் தொடங்கிவிட்டனர். அதனால்தான் பல லட்சம் ஹதீதுகள். அவற்றுள் சில தவிர பல லட்சம் பதர்கள்.

சில ஹதீதுகளை மறுப்பது  நபி பெருமானாரை மறுப்பதல்ல, நபி பெருமானார் சொன்னார் செய்தார் என்று சொல்லும் சிலரின் பிழையான கூற்றை மறுப்பது.

>>>அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்று.<<<

மிகவும் சரி. ஏனெனில் குர்-ஆனின் ஒவ்வொரு வரியையும் தன் வாழ்க்கையாக்கிக்கொண்டார் நபி பெருமானார். அதைத்தான் நீங்களும் செய்யவேண்டும். செய்தால் நீங்கள் நபி பெருமானாரைப் பின்பற்றுகிறீர்கள் என்று பொருள். இறைவனை வணங்குகிறீர்கள் என்று பொருள். வணங்குவது என்பது ஏற்பது என்றும் பொருள்படும்

அன்புடன் புகாரி