இந்திய முஸ்லிம்களில் சாதி

கேள்வி:

*எங்கள் ஊர் பக்கம் ராவுத்தர் குடும்பதிலிருந்து மற்ற இன முஸ்லிம்களுக்குப் பெண் கொடுப்பதோ எடுப்பதோ இல்லை. இதைத் தட்டி கேட்ட என்னை "நீ முஸ்லிமே இல்லை" எனக் கூறி சண்டை போட்டனர். யாரிடம் குறையுள்ளது. பல பிரிவுகள் பிரிவினைகள் இருப்பது வருத்தமில்லையா?*

முதலில் ஒரு இஸ்லாமியனைப் பார்த்து இன்னொரு இஸ்லாமியன் நீ முஸ்லிமே இல்லை என்று சொல்வதற்கு எந்த அதிகாரத்தையும் இறைவன் அவருக்குக் கொடுக்கவில்லை

குடும்பப் பெயர் என்று ஏதேனும் வைத்துக்கொள்ளலாம். அது ராவுத்தரோ மரைக்காயரோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
நீ உயர்வு நான் உயர்வு என்றாலோ இடையில் மண உறவுகள் இல்லை என்றாலோ அந்த நிமிடம் அவர்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்கள் இல்லை.
அவர்களையே காபிர்கள் என்று அழைப்பார்கள்.
*
மார்க்கம் என்றால் அது சாதிகளை எல்லாம் ஒன்றாக ஆக்க வேண்டும்
இறைவன் என்றால் அவன் மார்க்கங்களை எல்லாம் ஒன்றாக ஆக்க வேண்டும்
இனி மற்ற சிந்தனைகளை எல்லாம் உங்களிடமே விட்டுவிடுகிறேன்

*
இந்த ஜமாத்தார்கள் என்று கூறிக்கொண்டு அடித்துக்கொண்டு ஆளாளுக்குப் பிரிகிறார்கள் என்றால் அவர்கள் எவருமே இஸ்லாமியர்கள் இல்லை!
ஆனால் ஜமாத்தார்கள் என்று ஊருக்கும் மார்க்கத்துக்கும் தொண்டு செய்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையான இஸ்லாமியர்கள்!

*
Jamal Mohamed கவிஞர்அவர்களே.
ராவுத்தருக்கும்.
லெபைக்கும்என்னவித்தியாசம்.
>>>>>>>>>>>
இந்து முறைப்படி பிரிக்கப்பட்டார்கள். செய்யும் தொழிலைக்கொண்டு பிரிக்கப்பட்டார்கள்
ராவுத்தர் - அரசாங்கப் பணி செய்பவர்கள், வீரர்கள்
மரைக்காயர் - கப்பல் வணிகம் செய்பவர்கள்
லெப்பை - சமூகச் சேவை செய்பவர்கள், மதச் சேவை செய்பவர்கள்
இதை அள்ளிக் குப்பையில் போட்டுவிட்டு இஸ்லாமியர்கள் என்று சொன்னால் மட்டுமே அவர்கள் இஸ்லாமியர்கள். இல்லாவிட்டால் காபிர்கள்!

*
>>>சன்னி, சியா, வஹ்ஹாபி எனப்பட்ட பிரிவுகள் எல்லாம் தனது அடிப்படை கொள்கையில் மாறுபட்டவர்கள்.<<<
பொது நீரோடையிலிருந்து விலகியவர்கள். பொது நீரையிலேயேதான் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்பவர்கள் மட்டுமே உண்மையான இஸ்லாமியர்கள்.
பிரிந்தவன் பிரியட்டும் நான் மட்டும் குர் ஆனைக் கொண்டு மட்டும் சரியாகச் செல்கிறேன் நான் எந்தப் பிரிவும் இல்லை நான் இஸ்லாமியன் என்று மட்டும் சொல்ல வேண்டும், அவனே உண்மையான இஸ்லாமியன்.
மற்றபடி இறைவனுகும் தனி மனிதனுக்கும் நேருக்கு நேர் தொடர்பு உண்டு. அது பல்லாயிரம் வகையாய் இருக்கும். அதில் யாரும் ஏதும் சொல்வதற்கில்லை. சொல்லவும் வழியில்லை!

*
உலக அரங்கில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று தீய சக்திகள் முழங்கிக்கொண்டே இருக்கின்றன.
எது உண்மை என்று சொல்ல வந்ததே என் முதல் மடல்.
ஆனால் மக்கள் மதச் சண்டையில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள் 
அதோடு எந்தப் புரிதலுமே இல்லாதவர்கள்தாம் அதிகம் ஓங்கி ஒங்கிக் கத்துகிறார்கள் 
ஆயினும் பலரும் பயனடையும் வண்ணம் நிறைய செய்திகளைக் கொண்டு சேர்த்துவிட்டேன்.
99.99% பேர் இணக்கமாக இருப்பதின் அவசியத்தைப் புரிந்துகொண்டார்கள்.
வன்முறையற்று வாழும் வழியைப் புரிந்துகொண்டார்கள்.
ஒரு சிலர் மட்டும் வில்லன்களாகவே நிற்கிறார்கள். அப்படி இருக்கத்தானே செய்வார்கள்.
அவர்களைக் கிள்ளி எறிந்துவிட்டு வன்முறையற்ற இணக்கமான சமுதாயம் வளர்க்க என் பங்கினை சிறப்பாகச் செய்வேன்.
அது இந்த உலகத்துக்கு அவசியமானது.
அதையே ஒவ்வொரு கவிஞனும் செய்ய வேண்டும்.
செய்யாவிட்டால் அவன் கவிஞனே அல்ல!

*
இஸ்லாம் என்ற பொது ஓடையிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் தனிப்பெயர் சூட்டிக்கொண்டு தன்னுடையது பிரிந்த தனியோடை என்று காட்டிக்கொள்பவன் உண்மையான இஸ்லாமியன் அல்ல. அவன் குர் ஆனை அவமதிக்கிறான் என்றே பொருள்.

*
Padmanabhamn Sivathanupillai குர்ஆனைமதிக்காவிட்டால் என்ன? குடியாமுழுகிவிடும்.
இந்திய முசுலிம்கள்யாரும்
சரியத்தை மதிக்காமல்
இந்தியத் தண்டனைச்
சட்டத்தை மதித்தே வாழ்கிறார்கள்.
புகாரி என்று பெயர்
தாடியில்லை மீசைஇருக்கிறது.
>>>>>>
இந்தியாவில் வாழும் முஸ்லிம் இந்திய சட்டத்டை மதித்தே வாழ்வான். அப்படித்தான் வாழவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது
கனடாவில் இருக்கும் முஸ்லிம் கனடிய சட்டத்தை மதித்தே வாழ்வான். அப்படித்தான் வாழவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது
குர் ஆனை மதிக்காவிட்டால் குடிமட்டுமல்ல பிறப்பே மூழ்கிப் போய்விடும் ஓர் இஸ்லாமியனுக்கு
நீங்கள் கீதையை மதிக்காவிட்டால் குடிமூழ்கிப் போகாதவராய் இருக்கலாம். அப்படியே இருங்கள். ஆனால் உங்களைப் போலல்ல இறைபக்தியுடையவர்கள்.
எனக்கு மீசை இருக்கக் கூடாதா 
சில நேரம் நீங்கள் எழுதுவதைக் கண்டால் full ல fullலா இருப்பீங்களோ என்று ஐயம் வருகிறது    
*
ஆண் செல்லக்கூடிய ஆனால் ஒரு பெண் செல்லக் கூடாத இடம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? குர் ஆனில் அப்படி ஏதும் தடையில்லை!

*
இந்த சூபிகள் என்பவர்கள், வகாபிகளிடம் வெறுத்துப்போய் உருவானவர்களாய் இருப்பார்கள்.
எதை எடுத்தாலும் தொடாதே போகாதே செய்யாதே என்று இஷ்டத்துக்கு அடிப்படைவாதச் சட்டம் போட்டுவிட்டு தாங்கள் மட்டும் எல்லாம் அனுபவித்து மக்களை வெறுப்பேற்றியதால், இந்த சூபிகள் உருவாகி இருப்பார்கள்.
நாங்கள் இசையை விரும்புகிறோம் என்று அவர்கள் சொல்லத் தொடங்குவதிலிருந்தே பாதிப்பு தெரிகிறது.
இஸ்லாத்தில் இசை கூடாது என்று சில மடையர்கள் சொல்லித் திரிகிறார்கள்.
குர் ஆனில் காட்டுங்கள் என்றால் ஓடி ஒழிந்துவிடுவார்கள்
*
>>பெண்கள் உடை விஷயம் தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது <<< ஆணின் ஆடை விசயத்திலும் அப்படியே இணையாகக் குர் ஆனில் சொல்லப்பட்டுள்ளது.
ஒழுக்கமான ஆசை என்பதே இஸ்லாத்தின் அறம். அது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான். உடல் அமைப்பின்படி மறைக வேண்டியவை குறிப்பிடப்படிருக்கும். அவ்வளவுதான் வேறுபாடு.
*
இப்போதெல்லாம் எங்கு நோக்கினாலும் ஹதீகள்தான் முதல் இடத்தில் பாவம் குர் ஆன் ஏறெடுத்தும் பாராத நிலையில்....
ஒரு இஸ்லாமியனுக்கு ஹதீதுகளுக்குத்தான் பொருள் தெரியும். அதைத்தான் அவன் பொருள் தெரிந்து வாசிக்கிறான்.
குர் ஆனை அரபு மொழியில் வெறுமனே பொருள் தெரியாமல்தான் ஓதுகிறான். அதுதான் நன்மை என்றும் நம்புகின்றான். ஆதாயம் தேடி ஓதும் மனிதர்களே மிக மிக அதிகம்
குர் ஆனில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று பெரும்பாலான முஸ்லிம்களுக்குத் தெரியவே தெரியாது என்பதே உண்மை

*
Padmanabhamn Sivathanupillai ஏ.ஆர் ரகுமான் அதுபோல் பெரியார் தாசன் இளயராஜா மகன்
இவர்களைப்போல் இஸ்லாத்தில் இணைந்து விட்டால் பிரச்சனை இல்லை.
மத நல்லிணக்கமென்றால்
பிறமதத்தவர் முசுலிமாக
மாறுவது, அல்லது இணைந்து வாழ்வது.
யார் கவிஞ்ஞன் என்ற உங்களின் விளக்கம் அபாரம். பாரதியை யயாரென்று சொல்வீர்கள்.
>>>>>>
>>>மத நல்லிணக்கமென்றால்
பிறமதத்தவர் முசுலிமாக
மாறுவது,<<<
உங்களை மதம் மாறச் சொல்லி நான் கேட்டேனா? ஏன் இப்படி வயதுக்கு ஏற்பகூட கதைக்கமாட்டேன் என்கிறீர்கள்?
உங்கள் வயதுக்கு நீங்களாவது மரியாதை தரலாமே?
ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழவில்லை. கனடாவில் வாழ்கிறேன்.
பரிசுத்தமான இஸ்லாமியர்களாகவே எல்லோரும் வாழ்கிறோம்.
பரிசுத்தமான இந்துக்களாகவே எல்லோரும் வாழ்கிறோம்
பரிசுத்தமான கிருத்துவர்களாகவே எல்லோரும் வாழ்கிறோம்
எங்களிடம் இணக்கம் இருக்கிறது 99%
எங்களிடம் வன்முறை கிடையாது 99%
இங்கே அறவாழ்வுதான் 99 சதவிகிதம்.
நல்ல ஒழுக்கங்களோடு உயர்வாக வாழ்கிறோம் 99%
நான் லஞ்சம் வாங்கியதில்லை லஞ்சம் கொடுத்ததில்லை இங்கே.
திருடியதில்லை திருட்டுக்கொடுப்பதும் இல்லை 99%
இப்படியாய் மதங்கள் சொல்லும் அறம் அனைத்தையும் கொண்டவர்களாய் நாங்கள் இருக்கிறோம்.
நான் இங்கே மணிக்கணக்காய் கணினிமுன் அமர்ந்து எழுதுவது எனக்காக அல்ல. உங்களுக்காக.
அதை ஒரு நொடியேனும் உணர்ந்துபாருங்கள். இன்னமும் அறிவில்லாமல் இணக்கமில்லாமல் குதர்க்க குணத்தோடு அலையாதீர்கள்
>>>வன்முறையற்ற இணக்கமான சமுதாயம் வளர்க்க என் பங்கினை சிறப்பாகச் செய்வேன்.
அது இந்த உலகத்துக்கு அவசியமானது.
அதையே ஒவ்வொரு கவிஞனும் செய்ய வேண்டும்.
செய்யாவிட்டால் அவன் கவிஞனே அல்ல!<<<
இதில் துளியும் மாறாமல் பாரதி இருந்தான். ஆக உங்களுக்கு பாரதியையும் தெரியாது
உங்கள் பெயரில் ஏன் சாதிப் பெயர் என்று கேட்டேன் உங்கள் பதில் வரவே இல்லை
உங்களுக்கு இணக்கமாய் இருப்பது பிடிக்காதா என்றேன் பதிலில்லை
வெறுமனே வெறுப்பைக் கொட்டுகிறீர்கள்
அன்பும் தெரியவில்லை அதன் அவசியமும் புரியவில்லை. உங்களைக் கொண்டு இந்த சமுதாயம் அடையும் துயர் மிக அதிகமானது. உங்களின் பிறவி சாத்தானின் பிறவியாய் இருக்கிறது
காலையில் அமர்ந்து இப்படிக் கடுமையாய் எழுதுவதை நான் ஆழமாய் வெறுக்கிறேன். ஆனால் நீங்கள் அர்த்தமற்ற வெறுப்பின் பாராங்கல். உங்களை அசைக்க முயல்வது பரிசுத்தமான அறம் என்பதலால் இப்படி எழுதுகிறேன்

*
Mohamed Imran Bin Issadeen உங்களுக்கு பதில் சொல்லும்முன் உங்களிடம் சில கேள்விகள். அந்த கேள்விகளுக்கான பதில் உங்களிடமிருந்து வந்தபின் நான் பதில் சொன்னால்தான் அது உங்களைச் சரியாகச் சென்றடையும் என்பதால் மட்டுமே இந்தக் கேள்விகள்.
1. குர் ஆன் ஹதீது இவற்றுக்கான ஒற்றுமை என்ன வேற்றுமை என்ன?
2. குர் ஆன் தொகுத்த வரலாறு என்ன ஹதீத் தொகுத்த வரலாறு என்ன?
3. ஹதீதுகள் எந்தக் காலகட்டத்தில் தொகுக்கப்பட்டன யாரால் தொகுக்கப்பட்டன?
4. ஹதீதுகள் மொத்தம் எத்தனை, அவற்றுள் அங்கீகரிக்கப்பட்டவை எத்தனை? ஏன்?
5. ஹதீதுகள் சுன்னாக்களிடம் மட்டும்தான் இருக்கிறதா அல்லது சியாக்களிடமும் உள்ளனவா?
இந்தக் கேள்விகள் போதும். உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள். இது சிறப்பான உரையாடலாக அமைய இறைவன் துணை நிற்பானாக!
*
Padmanabhamn Sivathanupillai என் ஜாதிப்பெயரை இணைத்தவன் நானல்ல.அதைக்கடவுளின் பெயரால் செய்தவன் மனு
இன்றுவரையிலுமென்றில்லை காலாகாலத்திற்கும் பாரதநாட்டில் நிலையாய் நீடித்திருக்கும்படிச் செய்
திருப்பவன் நவீன மனு
என்றறியப்படும் அம்பேத்கர்
>>>>>>>
சிவதானு என்பதோடு நிறுத்திக்கொள்ள உங்களுக்கு ஒரு நிமிடம் போதுமே 
என் தந்தை பெயரை அசன்பாவா ராவுத்தர் என்று எழுதினார்கள்.
நான் அன்புடன் புகாரி என்று எழுதுகிறேன்
புகாரி அசன்பாவா ராவுத்தார் என்றா எழுதுகிறேன்?
>>>Gnana Suriyan தான்னைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என எண்ணுவதில் எனக்கு உடன்பாடு இல்லை
மேலும் அவரது சாதி அடையாளம் என்ன குற்றம் செய்தது
அவரது பெயர் சாதியைக் குறித்து நிற்பது போலவே தான் அப்துல் கலாம் என்பதில் மதம் குறிக்கப்படுகிறது
சாதி மதம் பேதங்களின் ஊற்று எனவே கலாம் பெயரை மாற்ற வேண்டும் என எண்ண வேண்டுமா என்ன
எம்மைப் பொருத்தவரையில் அவரது பெயரில் உள்ள சாதி என்னை உறுத்தவில்லை அவரை அப்படியாகவே நான் ஏற்கிறேன்<<<<
சாதியை பெயரில் ஏந்திப் பிடிப்பதில் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது.
நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று சொல்லும் அரசியல்.
மதத்தில் அப்படியல்ல. இது உயர்ந்த மதம் இது தாழ்ந்த மதம் என்று எதையும் சொல்லிவிடமுடியாது.
சிவப்பிள்ளை என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன்
குருசாமி ஐயர் என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன்
சீனிவாசன் பறையன் என்று எழுதிப் பார்த்ததில்லை
முருகேசன் சக்கிலியன் என்று எழுதிப் பார்த்ததில்லை
கணபதி தோட்டி என்று எழுதிப் பார்த்ததில்லை.
ஆகவேதான் பாரதியைப் போல பெரியாரைப் போல பாகுபாடுகளை உரத்துச் சொல்லும் சாதியின் பெயரை ஏன் இடுகிறீர்கள் என்று கேட்டேன்.
(நான் பிறமதம் தாக்கிப் பேசுவதில்லை. இங்கேயும் அப்படித்தான். என்னிடம் வந்த கேள்விக்கான பதில் மட்டுமே இது. நான் இணக்கம் பாராட்டுபவன். நான் எல்லா மதங்களையும் அள்ளி அனைப்பவன். எல்லா உயிர்களையும் என்னுயிர் போல எண்ணுபவன். வன்முறை விரும்பாதவன்.)

*
சாதியை பெயரில் ஏந்திப் பிடிப்பதில் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது.
நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று சொல்லும் அரசியல்.
மதத்தில் அப்படியல்ல. இது உயர்ந்த மதம் இது தாழ்ந்த மதம் என்று எதையும் சொல்லிவிடமுடியாது.

சிவப்பிள்ளை என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன்
குருசாமி ஐயர் என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன்
சீனிவாசன் பறையன் என்று எழுதிப் பார்த்ததில்லை
முருகேசன் சக்கிலியன் என்று எழுதிப் பார்த்ததில்லை
கணபதி தோட்டி என்று எழுதிப் பார்த்ததில்லை.
ஆகவேதான் பாரதியைப் போல பெரியாரைப் போல பாகுபாடுகளை உரத்துச் சொல்லும் சாதியின் பெயரை ஏன் இடுகிறீர்கள் என்று கேட்டேன்.
(நான் பிறமதம் தாக்கிப் பேசுவதில்லை. இங்கேயும் அப்படித்தான். என்னிடம் வந்த கேள்விக்கான பதில் மட்டுமே இது. நான் இணக்கம் பாராட்டுபவன். நான் எல்லா மதங்களையும் அள்ளி அனைப்பவன். எல்லா உயிர்களையும் என்னுயிர் போல எண்ணுபவன். வன்முறை விரும்பாதவன்.)
*
திருக்குறளுக்கு ஏராளமான உரைகள் உண்டு. அதில் கலைஞர் கருணாநிதியின் உரை அவர் சார்ந்த பெரியார் இயக்கத்தை ஒட்டியே விளக்கம் தரப்பட்டு வரும்.
இன்னொரு விளக்கம் அதீத பக்தியுடையவரின் விளக்கம், அது மதம் சார்ந்து சொல்லிப் போகும்.
வள்ளுவரே சொல்வதுபோல, மெய்ப்பொருள் காண்பது மட்டுமே அறிவு
*
இந்த இஸ்லாமிய உரையாடல்களை வேறு ஒரு பக்கத்திற்கு மாற்ற வேண்டும். அன்புடன் புகாரி பக்கம் ஏகமாய் நிரம்பி வழிகிறது.
நான் இணக்கம் பேசத்தான் வந்தேன். நான் வன்முறை களையத்தான் வந்தேன். இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் இல்லை என்று சொல்லத்தான் வந்தேன்.
இப்போது எங்கேயோ நிற்கிறேன்

*
>>>அவர்கள் முன்னிலையில் அந்த தொகுத்த கித்தாபை அவைகள் சரியானது என்றால் எதுவும் அழியாமல் இருக்கட்டும், தவறானது என்றால் அழிந்து போகட்டும் என்று கூறி ஏரியில் விசினார்கள்.
அது பாதுகாப்பாக அவர்களுக்கு திரும்ப கிடைத்தது என்று எங்கள் ஊரில் வருடம்தோரும் ஜாவியாவில் ஹதிது கூறக் கேட்டுள்ளேன்<<<
முதலில் ஒரு இஸ்லாமியன் ஒரு விசயத்தை முழுமையாக நம்பவேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இருக்கக் கூடாது.
இஸ்லாம் மூடநம்பிக்கைகளே இல்லாத அறிவியல் மார்க்கம்.
இதை இஸ்லாமியன் தான் இல்லை என்று சொல்வதுபோல நடந்துகொள்கிறான். அதுதான் மிகக் கொடுமையான ஒன்று.
இஸ்லாமியர்களே, போலிக் கதைகளை நம்பாதீர்கள். எதைக் கேட்கிறீர்களோ அதையெல்லாம் குர் ஆன் என்ற வைரத்தால் அறுத்துப் பாருங்கள்.
அண்ணல் நபியின் பொய்கள் கலக்காத வாழ்க்கையும் அவரின் சத்தியமான உயரிய கருத்துக்களையும் கொண்டு அலசுங்கள்.
போலிகளும் பொய்களும் உங்கள் அறிவின் வெளிச்சத்தில்தான் உதிர்ந்துபோக வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன். இஸ்லாம் மூடநம்பிக்கைகளே இல்லாத அறிவியல் மார்க்கம். அதை உயிருடன் புதைத்துவிடாதீர்கள்.
*
Gnana Suriyan மலம் அள்ளுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது
ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும்
>>>>>>>
இதெல்லாம் நடந்துவிட்டால், பிறகு சாதி ஒரு செத்த பாம்புதான். ஆனால் இப்போது அது ஐந்து தலை கருநாகம். அதை உணருங்கள்.
உங்கள் எண்ணம் சரி. ஆனால் பாம்புக்குப் பல்தேய்த்து விடுகிறீர்கள்.
*
பிற மதத்தை விமரிசிக்கத் தேவையில்லை. உங்கள் மதத்தின் நல்ல வற்றை உரக்கச் சொல்லுங்கள். உங்கள் மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அழிக்கப் போராடுங்கள்.
இந்தச் செயலைக் கண்டு நீங்கள் செய்வதையே பிற மதத்தவரும் பின் பற்றுவார்கள்.
நல்லவை பாராட்டப்படும்போது, தீயன தானே உதிரும்
*
மார்க்கம் என்பது அன்பும் அறமும் கொண்டு வாழ மக்களுக்குப் போதிப்பது. கட்டாயப்படுத்துவது.
ஒழுக்கமான வாழ்க்கை, உயர்வான வாழ்க்கை ஒவ்வொருவரும் வாழ்ந்து மனித நேயம் பாராட்டவே மார்க்கம்.
மார்க்கத்தின் விதிகள் வெறும் விதிகள் அல்ல, தூயமையான சமுதாயத்தை உருவாக்க தரப்பட்ட கட்டளைகள்.
*
அறிவுக்கேற்ப பொருள் விளங்கிக்கொள்வதே தொடக்கம்.
ஆனால் அது தொடக்கம்தான்.
ஒண்ணாம் வகுப்பு மட்டுமே பி ஹெச் டி ஆகிவிடமுடியாது.
பி ஹெ டி க்கு இன்னும் உழைப்பு வேண்டும். தேடித் தேடி அலையவேணுட்ம். மணிக்கணக்காய் நாள்கணக்காய் கடின உழைப்பைத் தரவேண்டும்.
அறிஞர்களின் கருத்துக்களை எல்லாம் கற்க வேண்டும்.
பின்னும் அலச வேண்டும்
அலசிய வண்ணமேஇருத்தல் வேண்டும்.
புதிய ஒளி தென்படும்போது பழைக இருட்டைக் களைய வேண்டும்.
*
அறிந்தவன் அறியாதவனுக்குச் சொல்லித்தருவதை இஸ்லாம் போற்றுகிறது.
அறிந்தவன் இறைவனுக்குச் சமம் என்று நினைத்தால் அங்கே இஸ்லாம் காணாமல் போய்விடுகிறது
*
இன்னொரு முக்கியமான கேள்வி.
நீங்கள் ஏதேனும் குதர்க்கத்துக்காகவே கேள்விகள் கேட்பீர்கள். அறிந்து கொள்ளும் நிலைப்பாடு அல்ல உங்களுடையது.
இதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
ஆகவே நான் உங்களுக்கான பதிலில் மட்டும் விளக்கம் எழுதுவதைவிட, எதிர் அம்பு விடுவதே சரி என்று கண்டிருக்கிறேன்.
ஆனால் பலருக்கும் தெளிவான விளக்கங்களை எழுதுவேன்.
இதை இப்போது ஏன் சொல்கிறேன் என்றால், உங்கள் இஸ்லாத்தின் வெறுப்புக்கான காரணம் இந்த நான்கு மனைவிமார்கள் என்ற ஒன்றுமாத்திரம்தானா?
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
நீங்கள் நாடிய குணங்கள் எல்லாம் என்னென்ன அதை முதலில் சொல்லுங்கள்.
பிறகு குற்றம் நாடியவற்றைப் பரிசீலிக்கலாம்!
*
மூடநம்பிக்கையோடு எவனாவது உரையாடினால் அவன் இஸ்லாமியன் அல்ல, அப்படியான ஒரு போர்வையில் இருக்கிறான் என்று கண்டுகொள்ளலாம்

*
மெய்ஞான தேடல்!
அப்படியென்றால் என்ன?
அறிவுக்கும் மெய்ஞானத்திற்கும் உள்ள இடைவெளியை வெகுவாக உடைத்துவிட்டது இஸ்லாம்.
மெய்ஞானம் என்பது கற்பனையில் திளைக்கும் அறிவு.
மெய்யான அறிவு என்பது பகுத்தறிவில் வளர்ந்து திளைத்திருப்பது.
மெய்ஞானத் தேடல் என்பது பொய்யை நோக்கிய தேடலே!
*
ஒரு சர்தார் என்னிடம் வருகிறார். அவர் தலையில் ஒன்றை அணிந்திருக்கிறார். கையில் வாள் வைத்திருக்கிறார், முகத்தில் தாடி நீண்ட கூந்தல். கையில் வளையம். அவற்றுக்கான விளக்கங்கள் அவர் நாவில்.
அவருடன் உரையாடும்போது, ஓர் இஸ்லாமியன் என்ன செய்யவேண்டும்?
அவரைக் கேலியும் கிண்டலும் செய்யவேண்டுமா?
இது கூடாது என்று உபதேசிக்க வேண்டுமா?
அவரைவிட்டு விலகிச் செல்லவேண்டுமா?
அவருடன் விரோதம் பாராட்டவேண்டுமா?
அவரை வெறுக்க வேண்டுமா?
இல்லை.... இது எதுவுமே இல்லை.
உன் வழி உனக்கு
என் வழி எனக்கு
என்றே செல்லவேண்டும்.
உன் வழியில் நீ உறுதியாய் இருப்பதே உன் நம்பிக்கைக்கு நீ செய்யும் உயர்ந்த செயல்.
*
நண்பா தமிழில் எழுதுங்கள். நீங்கள் தமிழர்தானே?
நான் தமிழில் எழுதுவதையே விரும்புகிறேன்.
நான் ஆங்கிலத்தை அலுவலகத்தோடு விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன் என் தமிழோடு கொஞ்சி விளையாட
















 












 


நால்வகை ஹதீதுகள்

ஒரு ஹதீதை ஏற்கலாமா ஏற்கக்கூடாதா என்ற பரிசீலனையில் ஹதீதுகள் இஸ்லாமிய அறிஞர்களால் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன.

1. ஆதாரப்பூர்வமானவை - ஸஹீஹ்
2. இட்டுக்கட்டப்பட்டது - மவ்ளூவு
3. விடப்படுவதற்கு ஏற்றது - மத்ரூக்
4. பலவீனமானது - ளயீப்

முதல் வகை ஹதீதுகளை மட்டுமே முஸ்லிம்கள் ஏற்று நடக்க வேண்டும். மற்ற மூன்று வகை ஹதீதுகளையும் விட்டுவிடவேண்டும்.

"தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது" என்று முகம்மத் நபி கூறினார் என்பது திர்மிதீயில் உள்ள முதலாவது ஹதீத்.

1. நபிகள் நாயகத்திடமிருந்து நேரடியாக இதைக் கேட்டவர் இப்னு உமர் என்ற நபித்தோழர்.
2. இப்னு உமரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர் முஸ்அப் பின் ஸஃது.
3. முஸ்அப் பின் ஸஃதுவிடமிருந்து கேட்டவர் ஸிமாக்.
4. ஸிமாக் என்பாரிடமிருந்து கேட்டவர்கள் இருவர். 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா
5.1. இஸ்ராயீலிடமிருந்து கேட்டவர் வகீவு
5.2. அபூ அவானாவிடமிருந்து கேட்டவர் குதைபா
6.1. வகீவுவிடமிருந்து கேட்டவர் ஹன்னாத்
6.2. குதைபாவிடமிருந்து கேட்டவர் திர்மிதீ
7. ஹன்னாத்திடமிருந்து கேட்டவர் திர்மிதீ

இந்த அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடர் ஒரு ஹதீதை ஆதாரப்பூர்வமானது என்று அறிவிக்க அவசியமானது.

இந்தச் சங்கிலித் தொடரில் உள்ளவர்கள் அனைவரும்

1. நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.
2. உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3. நேர்மையில் சந்தேகமற்றவர்களாக இருக்க வேண்டும்
4. அவர்களுக்கு அறிவிப்பவரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.

இவற்றில் தேரினால்தான் அதை ஆதாரப்பூர்வமான ஹதீதுகள் ஆகும்.

அத்துடன் மிக முக்கியமாக ஹதீதின் கருத்துகள் குர்-ஆனுக்கு முரண்படும் வகையில் இருக்கக் கூடாது.

அப்படி இல்லாமல். ஹதீதின் தரம் தெரியாமலா அந்த ஹதீத் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர், இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா? என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

நான்கு லட்சம் ஹதீதுகளை இமாம் புகாரி திரட்டினார். ஆனால் அவற்றுள் நான்காயிரத்துக்கும் சற்று அதிகமான ஹதிதுகளை மட்டுமே ஏற்கப்பட்டன. 

அதாவது ஒரே ஒரு விழுக்காடு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்படியானால் எந்த அளவுக்குத் தீயவர்கள் ஹதீதுகளில் கலப்படம் செய்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்க்கலாம்.

இமாம் புகாரியைப் பொருத்தவரை தான் தொகுத்தவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை ஆதாரப் பூர்வமானவை ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவை என்ற கருத்தையே கொண்டிருந்தார்.

தவறான ஹதீதை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விசயம் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

அதுபோலவே, ஆதாரப்பூர்வமானவை என்று அறிவிக்கப்பட்ட ஹதீதுகள் கால ஓட்டத்தில் நம்பகத்தன்மை இல்லாதவை என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.

அதற்கான முக்கிய அளவுகோள் குர்-ஆனோடு ஒப்பிட்டு அதன் கருத்துக்களை நோக்குவதுதான்.

குர்-ஆனோடு எந்த வகையில் முரண்பட்டாலும் அவற்றை மறுதளிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினுடைய கடமை.

 குர்-ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீதுகள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹதீதுகள் விடயத்தில் மெளனம் காத்து விட வேண்டும்.  

ஹதீதுகள் முக்கியம் என்று குர்-ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

மனம் போன போக்கில்

வாழ்த்துக்கள் சிந்து! 
உன்னை நினைத்துப் பெருமைப் படுவதை நான் கௌரவமாகக் கருதுகிறேன்!
உன்னைக் கண்டு வளரப்போகும் பெண் வீராங்கனைகளுக்கு இப்போதே மலர் தூவுகின்றேன்!
பூப்பந்தாடும் பூ
நீ புயல் பந்தாடி வென்றதோ வெள்ளிக் கின்னம்!
முதலடியே இத்தனை நெருக்கத்தில் என்றால் உன் அடுத்த அடி எப்படி இருக்கும்?
உன்னைக் கண்டாவது இந்தியா மதவிரோதங்களைக் கைவிட்டு சாதியப் பாகுபாடுகளைக் கழுவித் துடைத்துவிட்டு ஊழலை எரித்துவிட்டு பெருமைகொள்ளும் தளங்களில் வளரட்டும் கண்மணி!
வாழ்த்துகிறேன் உன்னை மீண்டும் மீண்டும்!
இந்த வாழ்த்து உனக்கே உனக்கானதல்ல, உன்னைக் கண்டு உயரப்போகும் அத்தனை நல்வீரப் பெண்களுக்கும்!

(ஒலிம்பிக் வெள்ளிக்கோப்பை வாங்கிய பூப்பந்தாட்டப் புயல்)

*
தங்கங்களாகத் தாங்களே இருப்பதால் வெள்ளியும் வெண்கலமும் போதும் என்று நினைத்தார்களோ
அல்லது தங்கத்தை ஆண்களுக்கென்று விட்டுவைத்தோம் என்று அடக்கத்தோடும் நக்கலோடும் சொல்லப் போகிறார்களோ                                           
*
*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்*
ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் "என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன். மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்" என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்.
*அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா? என்று கேட்டார்.*
இல்லை என பதில் சொன்னார்.
*அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.*
இல்லை என பதில் சொன்னார்.
*அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா? என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.*
இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.
*யாருக்கும் பயனில்லாத, நல்ல விஷயமுமில்லாத நேரடியாக நீங்கள் பார்க்காத, என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.*
நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.
நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.
நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.
பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.
*உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.*
*மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை.*
எனவே வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்.
வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.
நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.
நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள்.
மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.
*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.*

*

>>>குஷ்பூவை குடும்பப் பெண் தரத்திற்கு காணமுடியுமானால்
தெய்வமாகவும் காணலாம்.
தாசி அபஞ்சிக்கு கம்பன் அடிமை.<<<
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அடிமையாய் இருங்கள்.
கலைஞரின் அடிமையாய் இருங்கள்
அம்மாவின் அடிமையாய் இருங்கள்
ரஜினியின் அடிமையாய் இருங்கள்
தலயின் அடிமையாய் இருங்கள்
குஷ்புவின் அடிமையாய் இருங்கள்
பறத்தையின் அடிமையாய் இருங்கள்
கொலைகாரனின் அடிமையாய் இருங்கள்.
ஆனால் இவர்களை எல்லாம் கடவுளாக்கி அழியாதீர்கள்.
அறம் என்பதன் பொருள் சுத்தமாகச் செத்துச் சுண்ணாம்பாய்ப் போய்விடும்       
வேந்தன் அரசு >>>நம் வேலையும் தப்பு கண்டுபிடிக்கிறதுதான், சிறக்கவிரும்புவோர் வரவேற்பார்கள். புகழ்ச்சி விரும்புவோர் தவிர்ப்பார்கள்<<<
தப்பு கண்டுபிடிப்பது தவறு கண்டு பிடிப்பது குறைகண்டு பிடிப்பது குற்றம் கண்டுபிடிப்பது எல்லாம் உண்மையில் மிகப் பெரிய வேலை.
எளிதில் கைகூடாத உயர்ந்த கலை.
அதைச் செய்வோரை வெகுவாகப் பாராட்ட வேண்டும்
ஆனால் அதை முதலில் நம்மிடம்தான் நாம் செய்ய வேண்டும்.
அடுத்தவனிடம் *மட்டும்* கண்டால் செய்தால் அது முழு மூடனின் செயல் அறிவிலியின் செயல் அற்பனின் செயல் கேவலப் புழுவின் செயல்!

*
அரசியல் விளையாட்டு என்று ஒரு பிரிவு ஒலிம்பிக்கில் இல்லையா?
இருந்தால் இந்தியா இரண்டாயிரம் மூவாயிரம் என்று தங்கப் பதக்கங்களைத் தட்டிச் செல்லும்

*
கமல் நடிக்கத் தொடங்கிய நாள்முதல் நான் அவரின் ரசிகன்!
இன்று இந்த நாள் வரை எந்த படமாக இருந்தாலும் அதில் கமல் தோன்றினால் என்னால் மகிழ்ச்சியாக உட்கார்ந்து பார்க்க முடியும்.
செவாலியே எல்லாம் அவருக்குப் பெரிய விருது என்று சொல்லிவிடமாட்டேன்.
கமலுக்கு விருது தர யாருமில்லை ஏதுமில்லை என்றே சொல்வேன்.
கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி மட்டுமல்ல உலகத்திற்கே அவர்தான் கலைக்கொடி என்று சொன்னால் அது மிகையாகாது.
உலகநாயகன் என்ற பட்டம்தான் அவருக்கு மிகச் சரி என்று நான் அவ்வப்போது நினைப்பேன்.

*
வேந்தன் அரசு <குர்-ஆன் ஒரு மொத்த நூலாக அப்படியே வந்து இறங்கிவிடவில்லை.>
அதனால்தான் சால்மன் ரஷ்டி ”சாட்டனிக் வெர்சஸ்” என்றார். முதல் வெர்சனை மக்கள் ஏற்காமல் விரட்டிவிட்டார்கள். பின்னர் பிற வெர்சன்கள் வந்தன.
>>>
சாத்தான் என்பது ஒருவருக்குள் இருக்கும் தீய சக்தி. உங்களிடம் சாத்தான் நிறைந்திருக்கிறான் வேந்தன். அதனால் இஸ்லாத்திற்கு யாதொரு கேடும் இல்லை. உங்களுக்கே கேடு!
முகம்மது நபிபெருமானார் அதீத இறைபக்தி யுடையவர். அவர் ஹிரா என்னும் குகையினுள் சென்று ஊனுறக்கமின்றி சில நாட்கள் தொடர்ந்து இருப்பார்.
அவர் இறைவன் அருளியதாய்க் கூறும் வசனங்கள்தாம் இறை வேதங்கள்.
எப்போதெல்லாம் கலக்கம் வருகிறதோ எப்போதெல்லாம் இன்னல்கள் வருகின்றனவோ, எப்போதெல்லாம் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லையோ. அப்போதெல்லாம் அவர் இறைவன் முன் மன்றாடி நிற்பார். கடுந் தியானத்தில் இருப்பார். வரும்போது இறைச் செய்தியோடு வருவார். இதுதான் அவரின் நம்பிக்கை.
மக்கா நகரில் இருந்தபோது வந்த வசனங்களை மக்கி என்பார்கள். அவை ஆரம்பகால வசனங்கள். பின் மதினா வந்தபின் வந்த வசனங்களுக்கு மற்றொரு பெயருண்டு.
நபிபெருமானார் இந்த உலககுக்கு மகா அறத்தைத் தந்திருக்கிறார். தூய்மையான உலகத்தைக் காட்டி இருக்கிறார்க். எல்லோரும் இன்புற்றிருபப்துவே அல்லாது வேறொன்றுமிலலி என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபித்திருக்கிறார்.
நீங்கள் யார்? சல்மான் ருஷ்டியார்?
நிலைதடுமாறிய அறமற்ற நாவுடைய சாத்தான் கைப் பொம்மைகள்தானே?
உலகம் முழுவதும் சுபிட்சமாய் வாழ வழி சொன்னாரா சல்மான் ருஷ்டி?
அல்லது வழிசொன்னீர்களா வேந்தன் அரசு.
சும்மா மூளைக்குள் அரிப்பெடுத்து வம்பளக்கிறீர்கள். வேறென்ன சாதித்துவிட்டீர்கள்.
சாத்தானின் பிடியிலிருந்து விலகுங்கள். உங்கள் உள்ளக் கசடுகளைக் கழுவுங்கள். மனிதனாய் மாறுங்கள்!

*
தந்தையின் உள்ளம் தாயை மட்டுமே உயிரில் ஏற்றிக்கொள்ளும் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை.
’தவமாய்த் தவமிருந்து’ என்ற சேரனின் படம் தந்தையின் பாசத்தைச் சொல்லும் அருமையான திரைப்படம்.
பின் பிரகாஷ்ராஜ் ’அபியும் நானும்’ எடுத்தார்.
மகள் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த வெற்றி என்று இயக்குனர் சேரன் கூறினார்.
எனது மகள் வழக்கில் நீதிபதிகள் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும், பெற்றோருக்கும் கிடைத்த வெற்றி" என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த சேரன், திடீரென கீழே விழுந்து கும்பிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதுதான் தந்தையின் உள்ளம்

*
ஒரு மூன்று பேர்!
பலமுறை புரியவைத்ததையே மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி வார்த்தைகளைப் போட்டுக் கேட்பார்கள்.
சரி இந்த முறை முழு விளக்கமும் தரலாம் என்று பக்கம் பக்கமாக எழுதிச் சொல்லான்லும். அப்போதைக்கு மட்டும் அப்படியே அகன்றுவிடுவார்கள்.
இரு தினங்கள் கழித்து மீண்டும் முருங்கை மரம் ஏறுவார்கள்!
கேள்விகள் மட்டுமே கேட்பார்கள். எந்த ஒரு தீர்வும் தரவே மாட்டார்கள்.
எந்தக் கேள்விக்கும் பதிலும் தரமாட்டார்கள்.
வாய்வன்முறைவேறு எகிறித் தாண்டும்.
என்ன செய்யலாம் இவர்களை    

*
இது சாத்தான்களே நிறைந்த உலகம். இறைவன் மீது அச்சம் கொண்டு அறம் அன்பு அறிவு சென்றால் அத்தனை சாத்தான்களும் அழிந்து இறைவனே நிறைந்த உலகம் மீளப்பெறும்.
இறைவனே நிறைந்த என்பதும் மனிதநேயமே நிறைந்த என்பதும் ஒரே பொருளுடைய இரு சொற்கள் 
*
உங்கள் தாயை மரபணு சோதனை செய்யாமல் தாய் என்று நம்புவது அன்பா? அறமா? அறிவா?
உங்கள் தந்தையை மரபணு சோதனை செய்யாமல் தாய் என்று நம்புவது அன்பா? அறமா? அறிவா?
உங்கள் சகோதரனை மரபணு சோதனை செய்யாமல் தாய் என்று நம்புவது அன்பா? அறமா? அறிவா?

*
Elamuruguporselvi Ramachandran ஆனால் இதெற்கெல்லாம் பின்னால் வேறு ஏதோ உலக சதி அல்லவா நடக்குறது போல் தெரிகிறது! இஸ்லாத்தை இழுப்பது பேருக்குத் தான் இல்லையா ஐயா?!
>>>>
ஆமாம்!
ஓர் உணர்ச்சிப் பூர்வமான விசயத்தை வைத்துத்தான் வீட்டில் அரசியல் செய்கிறார்கள்.
அப்படியேதான் ஊரிலும், நாட்டிலும் உலகத்திலும்.
அந்த அரசியலில் ஆதாயம் அடைபவர்கள் யார் என்று பார்த்தீர்களென்றால், ஏன் என்ற காரணம் சட்டென்று புரிந்துவிடும்   
*
என்னிடம் வரும் அர்த்தமற்ற கேள்விகளுக்கு நான் தரும் ஒரே பதில் இதுதான்!
இந்தக் கேள்விக்கும் எல்லோரும் இணக்கமாக வாழ்ந்து வன்முறையற்ற உலகம் காண்பதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
என்றால் உங்கள் திசை எது?
எதை நோக்கியது உங்கள் பயணம்?
அர்த்தமுள்ள பயணத்தில் நீங்கள் இருக்கிறீர்களா?
அல்லது கேவலமாக பயணத்தில் இருக்கிறீர்களா?
*
வில்லன்களைக் கொண்டுதான் நாம் நல்லதை ஊருக்குச் சொல்லமுடியும்.
ஒரு நல்ல கதையில் கண்டிப்பாக வில்லன்கள் வேண்டும்.
எது பிழை என்பதை வேறு எப்படி மக்களுக்குக் காட்ட முடியும்?

*
நீங்கள் பிழையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். நான் இதுகாறும் எழுதியவற்றை நீங்கள் மீள்வாசிப்பு செய்ய வேண்டும்.
தவிர, விரோதம் என்பது காரணமற்றது என்றால் நான் அதில் ஒன்றுமே செய்யமுடியாது.
விரோதம் என்பது அறியாமையால் என்றால் என்னால் நிறைய செய்ய முடியும்.
ஆக உங்கள் பயணம் வெறுப்பின் பயணம்!
உங்கள் பயணம் அன்பு அறம் அறிவு இணக்கம் வன்முறையற்ற வாழ்வு என்று ஆகும்போது, அவசியம் என்னிடம் வாருங்கள். நான் சொல்லும் ஒவ்வொன்றும் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.
அதுவரை நிச்சயமாகப் புரியாது 

*
Nandha Kumar
என்ன கேட்கிறார்கள்... எதைப்பற்றி என்று சொல்லுங்கள்... முடிந்தால் எனக்குத் தெரிந்ததையும் பகிர்கிறேன்
அவர்களிடமே கேளுங்கள்
ஆக்கப் பூர்வமாக எதையும் கேட்கவே மாட்டார்கள், அது மட்டும் உண்மை.
அவர்களின் கேள்வி எதுவும் இந்த உலக அமைதிக்கோ சிறந்த அறவாழ்விற்கோ நல்லிணக்கத்திற்கோ பண்பட்ட மனித நேயத்திற்கோ ஒரு சிறு கல்லையும் நகர்த்தாது.
அதுமட்டுமல்ல பலமுறை பதிலிட்ட கேள்வியாகத்தான் இருக்கும். புதிதாக ஏதும் இருக்காது
நீங்களே பதில் சொல்லுங்கள்
வன்முறை அற்றவர்களாய் அவர்களை மாற்றுங்கள்
ஓர் ஊர் என்றிருந்தால் அங்கே ஒரு நம்பியார் ஒரு வீரப்பா ஒரு மனோகர் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை நான் மறுக்க வில்லை,
ஆனால் என்னால் எம் ஜி ஆர் வேசம் கட்டமுடியாது 
எம்ஜிஆர் அப்படியே ஓரமா கூட்டிட்டுப் போயி கும்மு கும்முன்னு கும்மி எடுப்பாரு   
*
பெண்களின் உடை
பெண்களின் உடை என்பது அதை அணிகின்ற பெண்களின் விருப்பம்.
சாதி மதம் பண்பாடு கலாச்சாரம் என்று எதையாவது சொல்லி எந்த உடையையும் வலுக்கட்டாயமாக அணிய பெண்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது.
ஊருக்கு ஏற்ப உடை, வீதிக்கு ஏற்ப உடை, வீட்டுக்கு ஏற்ப உடை, தனக்கு ஏற்ப உடை என்று உடுத்தும் பெண்கள் முடிவு செய்யட்டும்.
ஏன் உடையில் ஆணாதிக்கமும் அதன் சுயநலமும் இனம், மதம், சாதி, கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வையில்?
ஆயினும், வன்முறையைத் தூண்டும் உடை பெண்ணுக்கும் ஆணுக்கும் கூடவே கூடாது.
ஒரு பெண்ணால் காட்சி வன்முறை செய்து வலுவற்ற உள்ளங்களை உண்டு இல்லை என்று செய்யமுடியும்.

*
ஒரே ஒரு கேள்வி.
இஸ்லாத்தில் சாதிகள் இல்லை என்பது சரி. சாதிகள் கூடவே கூடாது என்பது சரி. அதுதான் இஸ்லாம் என்பது சரி.
ஆனால் சியா என்பதும் சுன்னா என்பதும் பிரிவுகள் தானே? சாதிகள் தானே? அவர்களுக்குள் திருமண உறவுகள் இல்லைதானே?
இந்தக் கொடுஞ் செயலின் பின் ஓர் இஸ்லாமியன் செல்லலாமா?
தன்னை ஏன் சுன்னா முஸ்லிம் என்று அழைத்துக்கொள்கிறான் ஓர் இஸ்லாமியன்?
நான் இஸ்லாமியன் எனக்குச் சாதி கிடையாது பிரிவு கிடையாது. பிரிந்து போகின்றவன் இஸ்லாமியன் இல்லை என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டாமா?

*
மார்க்கம் சாதியை அழிக்கிறது. அழித்தது.
ஒரு கருப்பினத்தவர், ஒரு தீண்டத்தகாதவர், ஒரு சிவப்பர், ஒரு கபில நிறத்தவர், பல சாதிகளாய் இருந்தவர்கள் அனைவரையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்தது மார்க்கம்தான்.
எல்லோரும் இங்கே சமம் என்று வணங்கும் இடத்தை மனித நேயம் மிக்கதாய்ச் செய்தது மார்க்கம்தான்
இல்லாதாரை உயர்த்த ஈகையை கட்டாயமாக்கியதும் மார்க்கம்தான்
அட இன்னும் ஆயிரம் சொல்வேன்.
ஆனால் நீங்கள்தான் செவிரராயிற்றே  
உங்கள் காதில் நான் ஏன் ஊதவேண்டும் சங்கு  
ஆளைவிடுங்கப்பா... ஜூட் !!!

*
கனவின் விதையே தையலே
கண்டதும் விழுந்தேன் தையிலே
கவிதை
கவிதை

*
இந்த வேறுபாடுகளை எல்லாம் சொல்லாதீர்கள்.
ஒருவன் பிரிந்தால், நீங்கள் ஏன் நானும் பிரிந்தேன் என்கிறீர்கள்?
நீங்கள் மூல இஸ்லாத்தில்தானே இருக்க வேண்டும்?
சுன்னா என்று ஏன் அழைத்துக்கொள்ள வேண்டும்?
என்றால் பிரிவில் சாதியில் உங்களுக்கும் அதீத விருப்பம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்?   
*
முகம்மது நபி அவர்கள் குர்-ஆனைப் பின்பற்றினார்
குர் ஆனைப் பின்பற்றினால் நாம் முகம்மது நபிபெருமானைப் பின்பற்றியதாய் அர்த்தம்.
குர் ஆன் ஒரு சொல்லும் மாற்றமுடியாமல் பாதுகாக்கப்பட்டது.
குர் ஆன் சத்தியம்
அதைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர்கள்.
நீங்கள் இஸ்லாமியர்தானே?
குர் ஆனின் படி பிரிவுகள் இல்லை. நீங்கள் பிரிந்தால் நீங்கள் இஸ்லாமியர்களே இல்லை.
பிரிவினையைப் பாராட்டும் ஒரு பெயரை நீங்கள் உங்களுக்குச் சூட்டிக்கொண்டால் நீங்கள் குர்-ஆனைவிட்டு விலகுகிறீர்கள் என்று பொருள்தானே?
சிந்தியுங்கள்!

*
பெருங்கல்லை அசைக்கும்போது கொஞ்சம் முக்கல் முனகல் நம்மிடமிருந்து வரத்தான் செய்யும்.
அதற்காக நாம் நம்பிக்கை அற்றவர்கள் அல்ல.
அசைக்கமிடுயாத கல்லையும் உடைத்து அசைப்போம்!




 


 

 



 


சும்மா

பொது அறத்தைப் 
பெரிதும் போற்றுபவர்கள் 
ஆண்கள் அல்ல
பெண்களே

*
அழுகை
ஒரு மிகப்பெரிய
ஆனந்தம்
கொடுந்துயரில் 
இருந்துபாருங்கள்
அழுகையின்
அருமை புரியும்

*


*
அம்மா ஜெயலலிதா மீது போட்ட பொய் வழக்கையும் அவர் முறியடித்து ஊழலே இல்லாத தலைவியாய் பவனி வருகிறார்.
உங்கள் தலைவரோ (கலைஞர்) ஒரு பைசாவும் ஊழல் செய்யாத கண்ணியமிக்கவர்
தமிழ்நாடு இந்த இரு கரைபடியாத அற்புதர்களைக் கொண்டு வளமாக செழுமையாக இந்தியாவில் ஊழலே இல்லாத மாநிலமாக சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது
அதன் உண்மையான குடிமகன் நீங்கள் ஒருவரே.
ஐயா சாமி, ஆளை விடுங்கள். எனக்கு வேலை நிறைய இருக்கு.
வெட்டிப்பேச்சுக்கும் உங்கள் அறமற்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேறு தளம் செல்லுங்கள்.
என் நேரம் பொன்னானது!

*
குடித்துவிட்டுச்
செய்யத் தகுந்த காரியங்கள்
என்னென்ன?
குடித்துவிட்டுச் செய்தால்
எந்த எந்தக் காரியங்களைச்
சிறப்பாகச் செய்யலாம்?
குடிக்காமல் இருக்கும்போது
செய்யவே முடியாது
ஆனால் குடித்தால் சூப்பராகச் செய்யலாம்
என்னும் காரியங்கள் யாவை?

*
தண்ணியடிச்சிட்டு போனபோக்கில் திசையறியாமல் எசகுபிசகா கருத்திடுபவர்கள் என் நட்பு வட்டத்திலிருந்து நீங்களாகவே விலகிக்கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இதை தண்ணியில் இல்லாத நேரத்தில் வாசிக்கவும் 
*

பெண்

இயல்பில்
பெண் தனக்கு விருப்பமானவனுக்குத்தான்
பிள்ளை பெற்றுக்கொள்வாள்
மற்ற ஆண்களெல்லாம் வன்முறையைக்கொண்டே
பெண்களை அடையமுடியும்
இயல்பில்
ஆண் தனக்குப் பிடித்தமான பல பெண்களுடன்
உல்லாசமாக இருப்பான்
தனக்குப் பிடித்தபெண் மறுத்தால்
வன்முறையில் அடையமுயல்வான்
இந்த சிக்கல்களுக்கான தீர்வுதான்
திருமணம்
திருமணம் என்பது
ஆண் பெண் உறவுகளுக்கான
பொது அறம்
திருமணத்தையே சிக்கலாகப் பார்ப்பதுதான்
இன்றைய காலகட்டம்
ஏனெனில்
பெண்ணின் உண்மையான இயல்பும்
ஆணின் உண்மையான இயல்பும்
அங்கே கட்டுப்படுத்தப்படுகின்றன
எல்லைமீறிய சுதந்திரத்தையே நேசிக்கும்
இன்றைய அறிவு வளர்ந்த ஆசை மனங்கள்
எந்தக் கட்டுக்குள்ளும் கிடக்க
விரும்பவே இல்லை
ஆயினும்
திருமணம் என்கிற
பொது அறம் இல்லாவிட்டால்
மீண்டும் உலகம்
காட்டுமிராண்டித்தனமாகவே
ஆகிப்போகும்
வன்முறையையோ
பெண்ணுக்காகவே உருவாகும்
போர்களையோ
யாராலும்
தடுக்கவோ தவிர்க்கவோ
முடியாது
இவை
எல்லாவற்றையும்விட
பிள்ளைகள்
தாயுமற்ற தந்தையுமற்ற
அனாதைகளாக
மனோவியாதியுடன் கூடிய
வன்முறையுடன் மட்டுமே
வளர்வார்கள்

ஞானி அறிஞன்

ஞானி என்றால் 
அறிஞன் என்று பொருள்
வேறு ஏதேதோ கற்பனைகளை எல்லாம் 
செய்து கொள்ள வேண்டாம்

*


>>>>பெண், குழந்தை பெற்ற பின் ஆணின் தேவை அதிகம் இருக்காது எக்காலமும் என்பது என் கருத்து..அவள் கவனமெல்லாம் குழந்தைகளே...<<<<<
இப்படி பெண் மாறுவது தவறு. ஆணை அனாதை ஆக்கிவிட்டால், அவன் மனம் அலையத் தொடங்கும். ஏக்கம் வளர்ந்து அவனை அவன் நல் குணங்களைத் திசை திருப்பும்.
ஓர் ஆணுக்கு தன் ஆயுள் முழுவதும் காதலும் காமமும் வேண்டும். அதை மனைவிதானே தரவேண்டும். தராவிட்டால் வேறு எங்கேயாவதுபோய் பெற்றுக்கொள் என்றுதானே அர்த்தம் ஆகிறது.
பெண்கள் இதைக் கவனமானவும் அக்கறையாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.
30 வயதுக்கு முன் பெண் அலங்கரித்துக்கொண்டு தன் கணவன் முன் நிற்பது அத்தனை அவசியம் இல்லை. ஆனால் 30க்குப்பின் ஒரு புதுப்பெண்ணைப்போல் தன்னை அலங்கரித்து கணவனின் விழிகளை இழுக்க வேண்டும்.
ஓர் ஆணை பெண் கவர்ந்துவிட்டால் அவன் ஒன்றுமற்ற பெட்டிப்பாம்புதானே?
ஆனால் அப்படி கவராவிட்டால் அவன் பெட்டியைவிட்டு வெளியே வந்த பாம்பு என்று சொல்லத் தேவையே இல்லை.

*


*
Leo Lp இதில் முத்துக்குமாருடன் குடித்தவர்கள் எத்தனை பேர், ஊற்றிக் கொடுத்தவர்கள் எத்தனை பேர்?
>>>>>>>>>>>>>>>>>
இது நல்லா இருக்கு! இப்படிக் கேளுங்கள் நான் உங்கள் உடன் இருப்பேன்.
நான் கனடாவில் வாழும் ஒரு கவிஞன். ஒரு பத்திரிகையாளரைச் சந்திப்பதாகச் சொல்லி இருந்தேன்.
அவரோ பாட்டில் கனவுகளில் மிதந்திருக்கிறார்.
நான் குடிப்பதில்லை என்றதும் அந்தச் சந்திப்பே அவசியம்தானா என்ற நிலையைக் கொண்டுவந்துவிட்டார்.
ஆக்குகிறவனை அழிக்கத் துடிக்கும் சமுதாயமாக எழுத்துலகம் இருக்கிறது ஊரில்

*
ஜெயமோகன் எனக்கு எதிரியும் இல்லை நண்பரும் இல்லை.
அவர் எழுதுவதில் எது பிடிக்கிறதோ அதைப் பாராட்டுவேன். எது பிடிக்கவில்லையோ அதை விமரிசிப்பேன்.
இங்கே நண்பரின் இழப்புக்கான காரணம் நன்றாகத் தெரிந்தவராகப் பதிவிட்டிருக்கிறார்.
முழுப்பதிவையும் நீங்கள் அவர் தளத்தில் காணலாம்.
நா முத்துக்குமாரை என்னால் இழக்க முடியவில்லை.
நான் அவர் பாடல்களின் ரசிகன்.
அவரைக் கொண்டுபோனது சாராயம்தான் என்றால், இனியும் அது எவருக்கும் நிகழவே கூடாது என்று விரும்புகின்றேன்

*
Swathy Rajan
<<<அறம் என்பதன் பொருள் ஒவ்வொருவர் கலாச்சாரத்தை பொறுத்து வேறுபடுமா? மேலைநாட்டில் பெண்களானாலும் ஆண்களானலும் ஒருத்தருக்கு ஒருவர் என்று வாழ்வதில்லையே?>>>
உலகப் பொது அறம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் முதலில்.
அறம் ஆயிரம்பேர் சொல்வார்கள்.
அத்தனையும் அறம்தான் என்றாலும் அது பொது அறம்போல உயர் மேன்மை கொண்டதாக இருக்கமுடியாது.
அது என்ன பொது அறம்?
உலகில் எல்லோருக்குமான இணக்கமான இனிமையான சிக்கலில்லாத வாழ்க்கைப்பயணத்தை வகுத்துத் தரும் அறம்தான் பொது அறம்.
எந்தக் கலாச்சாரம் ஆனாலும், பொது அறத்துக்கு உள்தான் இருக்க வேண்டும்.
எந்த சாதி எந்த மதம் எந்த இனம் எந்த குழுமம் எதுவாக இருந்தாலும் பொது அறத்துக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும்.
ஏனெனில் பொது அறம்தான் உலகம் முழுவதற்குமான மனிதநேயத்தை அள்ளித்தருவது, மனித வாழ்வை மலரச் செய்வது. மண்ணிலேயே சொர்க்கம் காண வழி செய்வது

*