கனடா தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா

கனடா தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா

https://photos.app.goo.gl/6CCPvh59zWbr1JcZ9

விளையாட்டாகத் தொடங்கினேன். மிகச் சிறப்பாகச் சென்றது.

நட்புகளுக்குள் ஒன்றுபட்டோம். கூட்டாஞ்சோறு சமைத்துக்கொண்டுவந்து என் வீட்டில் ஒன்றுகூடினோம்

ஒவ்வொரு உணவும் ருசியில் மிக உயர்வாக இருந்தது. சிறந்த உணவிற்கு பரிசுகள் வழங்கினோம்

குழந்தைகளை ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்க்கச் சொல்லியும் தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லியும் போட்டி வைத்து பரிசுகள் வழங்கினோம்

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடினார்கள் பெண்கள்

தேவாரத்திலிருந்து ஓர் ஆரமாய் சம்பந்தரின் கவிதையை இனிமையாய் தமிழ் உச்சரிப்பு மாறாமல் வாசித்தான் 8 வயது எழில். பரிசு பெற்றான்

பாரம்பரிய நடனமாடியது 8 வயது தெனிஷா, பரிசு பெற்றது

பெண்களெல்லாம் தங்களையும் தங்கள் கணவரையும் தங்கள் குடும்பத்தையும் அறிமுகம் செய்தார்கள் அனைவருக்கும்

முத்தாய்ப்பாக ஈழத் தமிழ் எழுத்தாளர் சிவநயனியின் பாரம்பரிய உணவான மச்சக்கூழ் விருந்து தந்தது ஒரு வித்தியாசமான சிறப்பு. தமிழ்நாட்டின் உணவுகளைச் ருசித்த நாவுகள் மச்சக்கூழை மிச்சமின்றி துழாவிச் சுவைத்தன.

ஆறு மணி நேரம் எப்படிக் கழிந்ததென்றே தெரியாமல் போனதாக ஒவ்வொருவரும் உணர்ந்தோம்

சிறப்பித்த அனைவருக்கும் என் நன்றிமாமழை

அன்புடன் புகாரி
அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் தமிழ்ச் சொற்களா?
இந்த மயக்கம் பலருக்கும் இருக்கிறது!
அஹர முதஸ எஸுத்தெல்லாம் ஆடி பஹவன் முடற்றே உஷஹு
என்று எழுதினால்தானே கொதிக்க வேண்டும் தமிழன்?
தமிழைத் தமிழாகவே எழுதுகிறவனிடம் தனித்தமிழ் என்று லூட்டி அடிக்க (இலூட்டி ) வருவது அழகா?
அயல்மொழிப் பெயர்ச்சொற்களை எப்படி எழுதினால் என்ன?
இதற்காக செலவிடும் நேரத்தை என்ன செய்யலாம்?
நான் தமிழ்ப்பற்றாளன் நான் ஒரு நல்ல யோசனை தரட்டுமா?
199 நாடுகளில் தமிழ்ப் பிஞ்சுகள் தமிழே பேசாமல் அழிகின்றன.
அவர்களைக் காக்க ஏதேனும் செய்யுங்கள்.
எங்கள் தமிழ்மொழி என்று ஒரு தொண்டியக்கம் தொடங்கி இருக்கிறேன். அதில் வந்து உறுப்பினர் ஆகுங்கள்.
தனித்தமிழ் என்று தமிழை அழிக்கப்பாடுவது தேவையற்ற ஒன்று.
தமிழே இல்லாமல் அடுத்த தலைமுறை அழிந்து போகிறது என்பதை அறியாத அவலம் கொடுமைங்க தமிழரே.
அன்புடன் புகாரி
தனித்தமிழா தனித்துவிடப்பட்ட தமிழா?
*
*
மேதாவித்தனமாய்
நாங்கள்தாம் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள 
பழஞ்சட்டத்தைத்
தூசுகூடத் தட்டாமல் கொண்டுவந்து
கவிஞரே மயக்கம் தீருங்கள் என்கிறீர்கள்
யாருக்கு மயக்கம்?
யார் இன்னும் எழுந்துகொள்ளவே இல்லை?
இப்படித்தான்
கவிதை எழுத உட்கார்ந்தவனை
மரபுக்கவிதை மட்டும்
எழுதச் சொல்லிக்
கொன்று கொலையெடுத்தார்கள்.
விரட்டியடித்து முடிப்பதற்குள்
போதும் போதும் என்றாகிவிட்டது
அவர்களிடமும்
இதைத்தான் சொன்னேன்.
மரபுக்கவிதை வேண்டுமென்றால்
நீங்கள் எழுதுங்கள்.
குசுப்பும் (குஷ்பு)
இடமாசுகசுவும் (டமாஸ்கஸ்)
தேவையென்றால்
நீங்கள் எழுதிக்கொண்டு போங்கள்
நாங்கள் தமிழை வாழவைப்பவர்கள்!
தமிழை அடுத்த தலைமுறைக்கும்
எடுத்துச் செல்பவர்கள்
அப்படியே
பழைய பஞ்சங்கப் பாட்டுப் பாடியே
தமிழைக் கொன்றெடுப்பவர்கள்
அல்லர்
தமிழ்
வெறும் நான்கே எழுத்துக்களைக் கொண்டு
அயலவன் அத்தனை பேரையும்
உண்டு இல்லை என்று பார்க்கிறதென்றால்
நான் பெரிதும் மகிழ்கிறேன்.
வாழ்க தமிழ்
வளர்க கணியுகத் தமிழ்
நிலைக்க பன்நாட்டுக் கூடத்திலும் இளைய தமிழ்
மாற்றம் ஒன்றே மாறாதது.
இந்த நான்கு எழுத்துச் சேர்க்கை எனும் மாற்றம்
இன்று நேற்று வந்ததல்ல.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்தது
++ ஹ
++ ஸ
++ ஜ
++ ஷ
அறியாமல் செய்யவில்லை
அன்றைய அறிஞர்கள்.
குண்டுச் சட்டிக்குள்
குதிரை ஓட்டுபவர்களுக்கும்
கிணற்றுத் தவளைகளுக்கும்
புரியவைப்பது
இயலவே இயலாது
ஏனெனில்
அவர்கள் நோக்கம்
புரிந்துகொள்வதல்ல
நாங்கள் மேதாவி என்று
காட்டிக்கொள்ளும்
பச்சைப் போலித்தனமே
தமிழுக்கு எது முக்கியமோ
அதைவிட்டுவிட்டு
இதில் வரட்டுத்தனமாய்
தானும் சிக்கி
மற்றவர்களையும் சிக்க வைக்கப்
படாத பாடு படுகிறார்கள்.
அதைவிட்டு
அடுத்த தலைமுறைக்கும்
தமிழை அள்ளிக்கொண்டு போகும்
அனைத்தையும் செய்ய வேண்டாமா?
நான் செய்கிறேன்...
இன்று
199 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது.
ஆனால் அத்தனை நாட்டுத் தமிழ்ப் பிள்ளைகளும்
ஆங்கிலத்திலும் அந்தந்த நாட்டு மொழியிலுமே
பேசுகிறார்கள்.
அதை மாற்றுவதற்கு
ஏதாவது செய்தீர்களா?
செய்யும் எண்ணம்தான் உண்டா?
நான்
செய்யப் போகிறேன்
’எங்கள் தமிழ்மொழி’
எனும் தொண்டியத்தில் சேருங்கள்
தமிழன் கால்பதித்த
நாடெல்லாம்
தமிழின் நாடே
என்று காட்ட வாருங்கள்
புலம்பெயர்த் தமிழனின்
அடுத்த தலைமுறைப்
பிஞ்சுநாவுகளிலும்
ஈர இருக்கை
இட்டுத்
தமிழை வாழும் மொழியாய்
அமரச் செய்யுங்கள்
வாருங்கள்
வந்து
என் தொண்டு இயக்கத்திற்குத்
துணை நில்லுங்கள்
எங்கள் தமிழ்மொழி
எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே
அன்புடன்
கவிஞர் புகாரி
ரப்பர் தொழிற்சாலை - அழிப்பான் தொழிற்சாலை என்று அமைந்தால் அமங்களம்.
இரப்பர் தொழிற்சாலை என்றால் பிச்சைக்காரர்கள் தொழிற்சாலை ஆகிவிடும்...
- கவியரசு கண்ணதாசன்
😀😀🤣🤣😅😅
*
ஒரு பிரபலமான புதுக்கவிதை
இரிசி கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
இணைந்த இபாப்பி
😀😀🤣🤣😅😅
199 நாடுகளில்
தமிழ்ப்பிஞ்சுகள்
தமிழே பேசாமல்
அழிகின்றன.
அவர்களைக் 
காக்க
என்ன செய்யலாம்?
உங்கள் கருத்துக்களைப் பரிந்துரைத்தால் நலமாக இருக்கும்
அன்புடன் புகாரி
அவனவன் பெயரை அவனவன் முடிவு செய்வான் எப்படி எழுதுவதென்று.
அயல் ஊர் அயல் நாடு போன்ற பெயர்களை இயன்றவரை உச்சரிப்பு மேலோங்க எழுதுவோம்.
கிரந்தத்தைக் கட்டாயம் பயன்படுத்துவோம் என்று இங்கே யாரும் சத்தியாகிரகம் செய்யவில்லை
புஹாரியை புகாரி என்றே எழுதுகிறேன்
ஜார்ஜ் என்பதை சாருசு என்று எழுதுவது நிச்சயமாகச் சரியில்லை என்பது உறுதியாக எனக்குத் தெரியும்.
குஷ்வந்த் சிங்கை குசுவந்த சிங்கு என்று எழுதுவதில் ஏற்பில்லை.
சிறப்புப் பெயர்ச்சொற்களை எப்படி எழுதுவதென்பது என் தேர்வு.
நான் தமிழன், என் மொழியில் நான் எழுதுகிறேன். இதில் எவரின் தனித் தலையீட்டையும் விரும்புவதில்லை.
தமிழ்ச் சொல் எழுதும்போது நான் வேஷ்டி முஷ்டி என்று எழுதினால் நீங்கள் யார் வேண்டுமானாலும் என்னை வந்து ஓர் அதட்டலே போடலாம்
வேறு நிலைப்பாட்டோடு யார் வந்தாலும் நான் அன்பு பொங்க ஓர் அதட்டல் போடுவதைத் தவிர்ப்பதரிது
அன்புடன்
கவிஞர் புகாரி
இயல்பு இலக்கியம் இலக்கணத்துக்குள் அடங்காது

கவிஞர் புகாரி


அன்பு நண்பர் மணி வண்ணன்,
உங்கள் கருத்துப்படியே 
நான் தமிழ் இலக்கணமே தெரியாதவனாய் 
அப்படியே இருந்துவிட்டுப் போகிறேனே
உங்கள் கருத்து என்பது 
உங்கள் கருத்து
அது என் கருத்தாகவோ
இந்த உலகக் கருத்தாகவோ
ஆகிவிடுமா?
நான் நானா 
அல்லது நீங்கள் சொல்பவனா 
என்பதில் சர்ச்சையே தேவையில்லை
என்று தெளிபவன் நான்
யார் யாரை 
எப்படிப் பார்க்கிறார்களோ 
அப்படித்தான் அவரா 
அல்லது அவர் என்பவர் 
அவரே அறியாத 
மாய மனிதரா
இலக்கியம் 
முதலாக வந்தது 
இலக்கணம் 
பிறகுதான் வந்தது என்று 
தெளிவாக அறிந்தவன் 
நான்
இன்றைய தமிழுக்கு 
அகராதியே போட்டுவிட்டார்கள்.
இன்றல்ல 
சுமார் 30 ஆண்டுகளுக்கும் முன்
என்னிடம் பழைய 
க்ரியா தமிழகராதி 
நெடுங்காலமாய் உண்டு
இதோ தமிழில் தட்டச்சிக்கொண்டிருகிறேன்.
என்னால் ஹ ஜ ஸ ஷா என்று 
சரளமாகத் தட்டச்ச முடிகிறது
தமிழ்த் தட்டச்சு நிரலிகள் 
தாராளமாக அந்தச் சலுகையைத்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் 
வழங்கியுள்ளன
நீங்கள் சரியான கதவைத்தான் 
தட்டுகிறீர்களா என்று
நீங்களே 
சிந்தித்துக்கொள்ளுங்கள்
அன்புடன் 
கவிஞர் புகாரி

இலக்கணம் என்பது
ஆணி அடித்து நிறுத்தப்பட்டதல்ல
நிறுத்தப்படவும் கூடாது
மொழி வளரக் கூடியது
அதன் வளர்ச்சியைத் தடுக்கும்
சக்திகளைத் தாண்டி
அது செழித்து வளரக்கூடியது
தமிழ் மொழியும்
அப்படியான மொழிகளுள் ஒன்று
இன்றும் என்னை
யாப்பு கோத்து
மரபுக்கவிதைதான்
நீ எழுதவேண்டும் என்று
வம்படியாய் வாதிடும்
பழமைவாதிகள் இருக்கிறார்கள்
தமிழ் இலக்கணம் தாண்டி
நீ கவிதை எழுதக் கூடாது
உனக்குத் தமிழ் இலக்கணம்
தெரியவில்லை
நீ கவிஞன் இல்லை
என்றெல்லாம்
சினம் ஊூட்டப் பார்க்கிறார்கள்
ஆனால்
நான் சினம் கொள்வதில்லை
தக்க பதிலை உரைத்துவிட்டு
என் தமிழோடு தமிழாகி
தமிழ்க் கவிதைகள் படைத்து
தமிழுலகிற்கு விருந்து வைக்கிறேன்
வாழ்க தமிழ்
வெல்க வளர் தமிழ்த் தேன்மொழி
கவிஞர் புகாரி
நண்பர் வேந்தன் அரசு,
உங்களுக்கு
மலையாளம் எப்படி வந்தது என்பதில்
பெருங்குழப்பம் இருக்கிறது
எனக்கு விளக்க நேரமில்லை
என்றாலும் ஒரு சில சொற்களில்...
வடசொற்களை
அளவுக்கதிகமாக உட்கொண்டதால்...
மலையாளம் வந்தது
தமிழ் ஒரு 10% உட்கொண்டிருக்கும்.
அதையும் பின் விரட்டத் தொடங்கிவிட்டது
மலையாளம் அப்படியே
வடமொழியை ஏற்றது
இனியும் ஏற்கிறது
புதிதாகவும் சேர்க்கிறது
அதுமட்டுமல்ல
தமிழை செம்மையாய் உச்சரிக்காமல்
கொடுந்தமிழையே
எழுத்திலும் எழுதத் தொடங்கினார்கள்
அது ஒரு முக்கிய காரணம்
எழுத்து என்ன செய்யும்
சில்லறை விடயம்.
சொற்கள் கலப்பதே
பெரிய மாற்றம்
யானை போவது தெரியாத
கண்களுக்குத்தான்
எறும்பு போவது தெரியுமாம்
அப்படியான தொரு கண்கள்
உங்களுடையவை
வேந்தரே
இராசு இராசேந்திரரே
அன்புடன் புகாரி
குறைகளைக் கண்டுபிடித்துவிட்டால் பின் நிவர்த்திகளைக் கண்டுபிடிப்பது எளிது
ஒரு நக்கீரன் பல நல்ல இலக்கியத்திற்குக் காரணமாய் இருந்திருக்கிறான்
நடைமுறைச் சிக்கலே ஏதென்றறியாதவன் பழமையில் உறைந்து அப்படியே உதிர்ந்தும் விடுகிறான்
வரட்டுத்தனம் தவிர்த்து ஆக்கப்பூர்வ செயலில் ஈடுபட்டால் தமிழ் தழைத்துச் செழிக்கும்
தமிழில் அறிவியலில் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம்
ஆக்ஸிஜன் என்று எழுத அனுமதிக்காத நிலையில் அறிவியல் கல்வி துரிதமாக வளர வழியே இல்லை
உயிர்க்காற்று, பிரானவாயு என்று ஆரம்பித்துவிடுவார்கள். கல்விபயிலும் கன்றுகளைக் கொன்றெடுப்பார்கள்.
இட்லியை தமிழன் கண்டுபிடித்தான் அது இட்லி என்றுதான் உலக மொழிகள் அனைத்திலும் புழங்கப்படவேண்டும்
அதுபோலத்தான் ராக்கெட்டும், நீயூட்ரானும், ஹீலியமும்...
ஒவ்வொன்றையும் குழப்பிக்கொண்டிருந்தால், கற்பதுதான் தடைபடும் அல்லது மந்த நிலையில் செல்லும்
அறிவியல் கற்க தமிழறிஞனாய் இருக்கவேண்டிய அவசியல் இல்லை
அன்புடன் புகாரி
ஒரே ஒரு கேள்விக்கு ஒரே ஒரு பதில் தேவை
புதுக்கவிதை எழுதலாமா கூடாதா?
புதுக்கவிதை தமிழ்க் கவிதை இலக்கணத்தில் எங்கே வருகிறது?
காக்கா காகம்
இந்த இரண்டு சொல்லின் உச்சரிப்பு என்ன? தலைக்காவுக்கும் ஒற்றுக்குப்பின் உள்ள காவுக்கும் மெலிந்தொலிக்க வழியுண்டா? இப்படியெல்லாம் நான் கேட்டு நேரத்தை வீணடிக்கவில்லை. இதெல்லாம் நன்றாகவே நமக்குத் தெரியும்.
என் கேள்வி ஒன்றுதான். உங்கள் பதில் வருமா?
புதுக்கவிதையை தமிழன் எழுதலாமா கூடாதா? அது எந்தத் தமிழ் இலக்கணத்தில் வருகிறது?
அன்புடன் புகாரி
தமிழன் நன்றாக புதுக்கவிதைகளை இயற்றலாம்.
அதற்காக மரபுக்கவிதைகளை பழிக்கலாகாது.
அதாவது தமிழன் நன்றாகக் கிரந்தம் எழுதலாம், குசுப்பு என்று எழுதுகிறவர்களையும் சானி என்று எழுதுகிறவர்களையும் இடமாசுகசூ என்று எழுதுகிறவர்களையும் பழிக்காமல் இருந்தால் சரி.
அப்படித்தானே?
பழித்தது நானல்ல நண்பரே. ஜெயபாரதன் என்று எழுதாதீர்கள் நீங்கள் தமிழ் இலக்கணம் அறியாத தத்தி செயபாரதன் என்று எழுதுங்கள் என்று பழித்துக் கூறுவது யார்?
அதற்கான பதிலடிகளையே நாங்கள் தருகிறோம்.
கிள்ளிவிட்டவரே தொட்டிலாட்ட வருவதோ?
குஷ்வந்த் சிங் என்று எழுதினால் நீங்கள் தமிழே அறியாதவர், தமிழ் இலக்கணமே தெரியாதவர் ஆகவே குசுவந்த சிங்கு என்று எழுதுங்கள் என்று சொல்வது யார்?
போய் பிழைப்பைப் பாருங்கள் சார், தமிழ் வளரட்டும்.
இளைய தலைமுறையை எப்படித் தமிழில் உரையாட வைப்பது என்பதில் கவனம் செலுத்துங்கள். அதுவே ஆக்கப் பூர்வமானது
என் கேள்வி புரியவில்லையா? இந்த தாராளமா படைக்கலாம் என்ற உரிமையை உங்களுக்குத் தந்தது யார்?
தொல்காப்பியனா?
தமிழ் இலக்கணத்தில் எங்கே இருக்கிறது புதுக்கவிதை, ஹைக்கூ, நவீனகவிதை எல்லாம்?
தமிழ் இலக்கணத்தில் புதுக்கவிதை ஹைக்கூ கவிதை எல்லாம் இல்லாதபோது, கிரந்தம் மட்டும் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
இப்படி ஒவ்வொண்ணா எடுத்துக் கொடுத்து கேட்க வேண்டுமா நான்?
உங்களுக்கே தெரியாதா?
ஆய்வு செய்யமாட்டீர்களா?
கிளிப்பிள்ளையா நீங்கள்?
அன்புடன் புகாரி
>>>ஸிந்தனை ஸம்பவம்
பாஹுபலி முதற்கொண்டு காஹம் பஞ்ஜி வரைக்கும் இன்று எழுத்து மாறிநிற்கின்றது. இந்த இழையில் புகாரியவர்களின் கருத்துகளை மறுக்காவிடில் அவற்றையும் மறுக்கமுடியாது.வேல்முருகன் சுப்பிரமணியன்<<<
இதில் நியாயம் இல்லையே?
நான் நல்ல தமிழ் எழுதுகிறேன். கஷ்டம் என்ற சொல்லை கடினம் என்றே சொல்வேன்
விஷம் என்ற சொல்லை விசம் என்றே பலகாலும் எழுதிவருகிறேன். இன்னும் நஞ்சு என்று முழுதாகவே தவிர்க்கிறேன்.
வேஷ்டி முஷ்டி புஷ்டி என்று எல்லாம் எழுதுவதில்லை
என் பழைய கவிதைகளில் உள்ள நிஜம் என்ற சொல்லையும் மாற்றிவருகிறேன்.
நான் தெளிவான தமிழ்த் திசையில் செல்பவன். ஏனெனில் நான் தமிழின் காதலன்.
ஊரில் நான் தமிழில் ஆங்கிலம் கலவாமல் பேசும்போது என்ன ஒருமாதிரி பேசுகிறாய் என்றுதான் கேட்கிறார்கள்.
மலையாளம் தோன்றியது வடசொற்களை 90% ஏற்றதால். ஏற்றபின் எழுத்தைக் கொண்டுவந்தார்கள்.
நாமும் ஏற்றோம் ஒரு பத்து விழுக்காடு இருக்கும். இன்று அதையும் விரட்டியடிக்கிறோம். அதுதான் உண்மையான தமிழ்த்தமிழ்த் தொண்டு. அது வாழ்க வளர்க.
தமிழ் வாழும் மொழுயாய் வாய்மொழியாய் இருக்க வேண்டும் என்பதே என் தேவை. பேச வருபவனையும் குசுப்பு... இடமாசுகசு... குசுவந்த சிங்கு... என்றெல்லாம் சொல்லி ஓட வைக்க என்னால் முடியாது. தமிழன்னை என்னை மன்னிக்க மாட்டாள்
1.
ini solvatharkku onnum ille. ellaam sollitten
என்று எழுதுபவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்
எனக்கு யார் அப்படி மடல் அனுப்பினாலும், மன்னிக்கவும் என்னால் வாசிக்க முடியவில்லை. ஒன்று
தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று சொல்லிவிடுவேன்
2.
அடுத்து புலம்பெயர் பிஞ்சுகள் முழுதாக அந்த அந்த நாட்டின் மொழிக்குள் சென்றுவிட்டனர். அவர்களை மீட்டெடுக்காமல் தமிழ் வாய்மொழியாய் இருக்காது
3.
அடுத்து தமிழைக் கவிதை மொழியாய் மட்டுமே பாவிப்பது பிழை. அதை அறிவியல் மொழியாய்க் கணித மொழியாய் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு சொற்களை நோண்டிக்கொண்டிருக்காமல், அந்தந்த அயல்சொற்களை அப்படியே ஏற்று அறியல் அறிவை விரைந்து வளரச் செய்ய வேண்டும்.
ஆக்சிஜன் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், ஹீலியம் அப்படியே இருக்கட்டும், மைல் கிலோ என்றெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டு கெட்டா போய்விட்டோம்
4.
இலவசத் தமிழ் வகுப்பு இலவச தமிழ் உணவு இலவச பேருந்துசேவை செய்து புலம்பெயர்த் தமிழ்ப் பிஞ்சுகளை மீட்டெடுப்பதே எல்லாவற்றுக்கும் மேலான என் தொண்டாய் இருக்கும். செய்வேன் இறைவன் அருளால்.
தொடங்கிவிட்டேன், என் பணிச்சுமைகளுக்கிடையில் அதை உலகெங்கும் கொண்டு செல்கிறேன்...
துணை நிற்போரை நற்றமிழர் என்று நெஞ்சாரப் புகழ்வாள் தமிழன்னை என்று திடமாக நம்புகின்றேன்
அன்புடன் புகாரி
Krishnan Ramasamy அவர்களோடு ஒரு உரையாடல்
>>>இற்றை மலையாளத்தில் வடசொற்புழக்கம் அவ்வளவு இருப்பது போல் தெரியவில்லை. எழுத்து மாறியபின்பு தான் அங்கு வடசொற்புழக்கம் கூடியது. (என் மதிப்பீடு 50/60 %) <<<
அன்பின் இராமகி ஐயா, மலையாளத்தை நாம் ஒரே மொழியாகப் பார்க்க முடியாது. பேச்சுவழக்கில் ஒரு மலையாளம். மேடையேறினாலோ அல்லது நூல் எழுதினாலோ கையாளப்படும் மலையாளம் இன்னொன்று.
பேச்சு வழக்கில் உள்ள் மலையாளம் கொடுந்தமிழில்தான் அதிகம் இருக்கும். 30% சமஸ்கிருதம் இருக்கலாம்
எழுத்து மற்றும் மேடை வழக்கில் சுமார் 70 லிருந்து 90 வரைகூட இருக்கும்.
நான் கேரளத் தொடர்பு உடையவன், கொறச்சு கொறச்சு மலையாளம் பேசவும் கூடியவன்.
பிழிச்சல், கிழி போன்ற தமிழன் பயன்படுத்தாத அழகு தமிழ்ச் சொற்களை அவர்கள் பயன்படுத்துவதைக் கேட்டு பெரிதும் மகிழ்பவன்.
மலையாளிகளைப் போல் ‘ழ’ வை வெகு நேர்த்தியாக உச்சரிக்கும் தமிழன் மிக மிகக் குறைவு
>>>>அதேபோல் தமிழில் பிறசொல் புழக்கம் பத்து விழுக்காடு என்பதும் சரியில்லை. நீங்கள் இற்றைக் குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் போன்று எதையும் படிப்பதில்லை போலும். குறிப்பாய்க் குமுதம். 30 விழுக்காடாவது உரையாடல்களில் இருக்கும். <<<
இங்கும் தமிழை அப்படியே ஒரு மொழியாகக் கொள்ளமுடியாது. பிராமணர்கள் பேசும் தமிழ் ஏனையோர் பேசும் தமிழ் என்று பிரிக்க வேண்டும். பிராமணர்களின் தமிழில்தான் வடசொல் புழக்கம் 30 விழுக்காடு. ஏனையோரிடம் 10க்கும் குறைவாகிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது மகிழ்வான செய்தி.
>>>தமிழ் மொழி சிதைந்து ஒரு பொன்விழா ஆகப் போகிறது.<<<<
செம்மொழித் தேர்வில் தமிழ் நின்றபோது, சிதையா தமிழ் என்பதே நிறுவப்பட்டது. இன்றும் வள்ளுவன் குறள் புரிகிறது. ஏனையவற்றையும் மீட்டெடுத்திருக்கிறோம் மகிழ்வோடு.
>>>நீங்கள், உங்கள் காலத்தில் படித்த தமிழிலேயே இருக்கிறீர்கள் போலும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஒரு பண்பலை ஒலிபரப்பு என ஏதொன்றையும் நீங்கள் பட்டறிந்ததில்லை போலும். நிலைமை படு மோசம். <<<
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு குட்டிச்சுவராய் இருந்ததைக் கண்டிருக்கிறேன். இப்போது அது செம்மைப் பட்டுக்கொண்டிருப்பதையும் காண்கிறேன். பேச்சுவழக்கின் பொதுத்தமிழை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இடையிடையே ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனபோதிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஏராளமாகக் காண்கிறேன். அதுவே தமிழை பேச்சுவழக்கிலிருந்து அழியாமல் வைத்திருக்கிறது. புலம்பெயர்ந்த பிஞ்சுகளின் காதுகளில் அந்தத் தமிழ்தான் விழுகிறது. அவர்கள் தமிழில் மெல்ல மெல்ல எழுகிறார்கள். ஊடகம் இல்லாமல் போனால் தமிழின் நிலை கொஞ்சம் கவலைக்கிடம்தான். திரையிசைப் பாடல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் உள்ள தமிழர்களை பேச்சுத் தமிழின்பால் இழுத்து வைத்திருக்கிறது. இல்லாதுபோனால், பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யமட்டுமே தமிழ் என்றாகிப் போகும். நாக்கு எனும் ஈர இருக்கையில் தமிழ் உட்காராமல் வழுக்கிக்கொண்டு விழுந்துவிடும்.
>>>இன்று ஏராளமான தமிழிளையர், “ சமாலிஃபய்” என்று சாத்தாரமாய்ச் சொல்லுகிறார். பிறமொழி வினைச் சொற்களைப் பயன்படுத்துவது கூடுகிறது. இது அழிவின் உயர்கட்டம். பெயர்ச்சொற்கள் ஊடுறுவது இயல்பாய் நடப்பது. என்றைக்கு வினைச்சொற்கள் ஒரு மொழியில் ஊடுறுவுகின்றனவோ, அன்று நோய் முற்றி விட்டதென்று பொருள். <<<
இதைத்தான் நானும் சொல்கிறேன். நாம் இருவரும் ஒன்றைத்தான் சொல்கிறோம்.
>>>பிறமொழி வினைச் சொற்களைப் பயன்படுத்துவது கூடுகிறது. <<<
இது கூடவே கூடாது. நான் இதைத்தான் எங்கும் வலியுறுத்துகிறேன்
>>>பெயர்ச்சொற்கள் ஊடுறுவது இயல்பாய் நடப்பது<<<
இதற்கு மட்டும்தான் நான் அந்த நான்கு எழுத்துக்களுக்கு நன்றி சொல்லி ஏற்கிறேன். இதில் பிழை என்பவர்களை நான் கண்டுகொள்வதே இல்லை
>>>என்றைக்கு வினைச்சொற்கள் ஒரு மொழியில் ஊடுறுவுகின்றனவோ, அன்று நோய் முற்றி விட்டதென்று பொருள். <<<
மிக மிக சரி. இதைத்தான் நான் செய்யச் சொல்கிறேன். அதுதான் உண்மையான தனித்தமிழ் நோக்கம் என்றும் சொல்கிறேன். எந்த தமிழ் வார்த்தையும் தெரியாமல் தமிழர்கூட்டம் நான் shoppin போறேன், எனக்கு Sick leave வேண்டும், என் father engineer, என் அக்கா housewife. என்றெல்லாம் உரையாடுகிறார்கள். எந்த வினைச் சொல்லும் பயன்படுத்தாமல் தமிழ் அதல பாதாளம் சென்றுவிட்டது. அதை மீட்டெடுப்போம்
அதைவிட்டுவிட்டு, ஜார்ஜை சாருசு என்றும் டமாஸ்கசை இடமாசுகசு என்றும் குஷ்வந்த் சிங்கை குசுவந்த சிங்கு என்றும் எழுதியா தமிழை வாழவைக்கப் போகிறோம்
இயல்பாக அறிவியலில் புழக்கச் சொற்களை அதன் மொழியிலேயே பயன்படுத்தி அறிவியல் அறிவை வளர்க்கும் போக்கை துரிதப்படுத்தவும் தூண்டவும் வேண்டும் அல்லவா? அதுதான் தமிழின் சேவை. *****தமிழ் வாழும் மொழியாய் இருக்க வேண்டும் அதுதான் என் தேவை*****
அன்புடன் புகாரி
1, 2, 3, 4.... என்பன தமிழ் எழுத்துக்கள் அல்ல
கிலோ மீட்டர், மைல், லிட்டர் போன்றவை எல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல.
a+b, a2 + b2, x = y-a போன்ற கணிதக் குறியீடுகள் எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல.
H2O, NaHCO3, NaBO3, Na2B4O7.10 H2O ஆகிய வேதிக் குறியீடுகள் தமிழ் எழுத்துக்கள் அல்ல
ஹஜஸஷ எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல
தனித்தமிழர் முதல் மூன்றையும் ஏற்கிறார்கள். கடைசியை ஏற்கமாட்டேன் என்கிறார்கள்.
கட்டாயத் தேவை என்பது எங்கே தலை தூக்கி நிற்கிறதோ அங்கே அடங்கவேண்டுமல்லவா?
ஏற்பதல்லவா வளர்ச்சி?
அன்புடன் புகாரி

ஜெயபாரதனைப்போல அறிவியல் எழுதும் இன்னொருவர் தமிழில் இல்லை

ஜெயபாரதனைப்போல அறிவியல் எழுதும் இன்னொருவர் தமிழில் இல்லை

ஏறக்குறைய பதினைந்து வருடங்கள் இருக்கும்

நான் என் குடும்பத்தோடு
270 கிலோமீட்டர் தூரம் வாகனம் ஓட்டிக்கொண்டு
கின்கார்டைனிலுள்ள ஜெயபாரதன் வீட்டிற்குச் சென்றேன்

அவரோடு சில தினங்கள் தங்கி நட்பைப் கொண்டாடிவிட்டு
அந்த ஆனந்த நினைவுகளோடு டொராண்டோ வந்துசேர்ந்தேன்
என்றும் எங்கள் நெஞ்சில் பசுமையாய் நிற்கும்
ஓர் அருமையான பயணம் அது

ஜெயபாரதன் தனியேதான் இருந்தார் ஆனால் தனியே இருக்கவில்லை

வீடுநிறைந்த புத்தங்கள் தோட்டம் நிறைந்த செடிகொடிகள்

ஜெயபாரதன் ஒரு விஞ்ஞானிமட்டுமல்ல
கருவேப்பிலைச் செடியை வெகு சிறப்பாகக்
கனடாவில் வளர்க்கும் தேர்ந்த விவசாயியும்கூட

ஜெயபாரதனின் துணைவியார்
மகள்வீட்டிற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்

மகள்கள் இருவரும் வெள்ளையரை மணந்துகொண்டு
மூத்தவர் ஹாலிபாக்ஸிலும் இளையவர் டொராண்டோவிலும்
குழந்தைகளோடு மகிழ்ச்சியாய் வாழ்வதாகச் சொன்னார்

என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்று
தலைப்புகளை வாசித்து முடிக்கவே எனக்கு நேரம் போதவில்லை

அவற்றுள் பெரும்பாலானாவை தமிழ் நூல்கள்
சற்றே குறைந்த எண்ணிக்கையில் ஏனையவை ஆங்கில நூல்கள்

இலக்கியமும் விஞ்ஞானமும் இரண்டறக் கலந்து
புத்தக அலமாரிகளில் நீக்கமற நிறைந்திருந்தன

ஸ்காட்சிஷ் மக்கள் குடியேறி வாழும் கின்கார்டின் ஓர் அழகிய கிராமம்
அதன் அத்தனை அழகும் ஏரிக்கரைகளில் ததும்பி வழிந்தன

ஓரிடமும் மீதம் வைக்காமல் எங்களை அழைத்துச் சென்று
காட்டிமகிழ்ந்தார் விருந்தோம்பலிலும் சிறந்த ஜெயபாரதன்

இன்று அவர் வயது 84
தன் உடல்நலம் முன்புபோலில்லாமல் குன்றிவருவதாகவும்
உடலுழைப்புகள் குறைந்துவிட்டதாகவும்
வாசிப்பும் எழுத்தும் அதிகரித்துவிட்டதாகவும் சொன்னார்

விழுத்தெழுக என் தேசம் என்ற கவிதைநூல் படைத்திருப்பதாகவும்
வழமைபோல் அதற்கும் என் அணிந்துரை வேண்டும் என்றும்
அன்போடு கேட்டுக்கொண்டார்

நானோ விடுப்பில் தமிழகம் சென்றுவிட்டேன்
இம்முறை இயலாது என்னால் காலதாமதப்படுத்திவிடாமல்
நூலை அச்சிடுங்கள் உங்களின் அடுத்த நூலுக்கு
அணிந்துரை தருகிறேன் என்றேன்

ஆனால் அவரோ என்னை விடுவதாயில்லை
எல்லாம் முடிந்த பின்னும் பதிப்பகத்தார் இறுதி தினம் குறிப்பிட்டு
அதுவும் முடிந்தபின்னும் எனக்காகக் காத்திருப்பதாகவும்
கனடாக் கவிஞரின் அணிந்துரையின்றி நூல் வெளிவராது என்றும்
கராராகச் சொல்லிவிட்டார்

நான் இன்னும் நூலை வாசிக்கவே இல்லை
வாசிப்பேன் ஆனாலும் அதை வாசிக்காமலேயே
எனக்கொரு நீண்ட அணிந்துரை தந்துவிடமுடியும்

அது வேறு எழுத்தாளர்களுக்கோ கவிஞர்களுக்கோ
இயலாததாகவே இருக்கும்

ஏனெனில் அவரை நேரில் சந்தித்து
நெருக்கமாய்க் கண்டுணரும் நற்சூழலைப் பெற்றவன் நான்

யாரிந்த ஜெயபாரதன் என்றால்
அவரின் அறிவியல் கட்டுரைகளைச் சொல்வார்கள் சிலர்
அவரின் கவிதைகளைச் சொல்வார்கள் சிலர்
அவரின் கருத்தாடல்களைச் சொல்வார்கள் சிலர்
நானோ அவரையே யாரென்று சொல்ல வருகிறேன்

இந்த வயதிலும் ஓய்வென்று ஓய்ந்துவிடாமல்
தமிழுக்காக உழைக்கும் பெரிய மனிதருக்கு
என்போன்ற சிறியவன் அணிந்துரை தருவது சரியல்ல
ஆனால் என்னிடமும் அணிந்துரை கேடுப் பெறுவதுதான்
ஜெயபாரதனின் உயர்பண்புகளுள் ஒன்று

அவராகட்டும் அவரின் அறிவாகட்டும்
அவரின் விருந்தோம்பலாகட்டும் அவரின் மரியாதையாகட்டும்
அல்லது அவரின் கலையும் பண்பாடுமாகட்டும்
எல்லாமே தனியுயரத்தைத் தாவிப்பிடித்தவை

டொராண்டோ வாருங்கள் வந்து என்னோடு ஒருவாரமேனும்
தங்கிச் செல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறென் உங்களை என்று
அன்புடன் அழைத்தேன்

அவ்வளவு தூரமெல்லாம் வாகனம் ஓட்டுவது
இயலுவதில்லை புகாரி என்று அன்போடு மறுத்தார்
சரி நான் வருகிறேன் விரைவில் என்று வாக்குக் கொடுத்தேன்

இந்த வயதிலும் அவர் எழுதுகிறார் என்பதே ஒரு கவிதை

ஆயினும் அவரின் இந்தக் கவிதை நூலையும் வாசித்து
கருத்தெழுதாவிட்டால் இந்த அணிந்துரை நிறைவடையாதல்லவா
கூடவே பொருளற்றதாகவும் ஆகக் கூடுமில்லையா

ஆகையினாலேயே கவிதை நூலை வாசித்து முடித்தேன்
இடையிடையே நான் முடிச்சுகள் இட்டுவைத்தவற்றை
இங்கே கொஞ்சம் அவிழ்த்து வைக்கிறேன்

எல்லாம் சொல்லிவிட்டால் நீங்கள் பின்
எதைபின் வாசித்து நேசிக்கப் போகிறீர்கள்

இக்கவிநூலின் தொடக்கத்தில் அவரின் அதீத பற்றுகாரணமாக
இந்திய நாட்டிற்கு தேசிய கீதம் எழுதியிருக்கிறார்
தமிழ் நாட்டிற்கு வாழ்த்துப்பாடல் அமைத்திருக்கிறார்
தமிழ்த் தாய்க்கு வாழ்த்துக் கவிதை கட்டியிருக்கிறார்
கனடிய தேசிய கீதத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
கனடிய தேசத்திற்கு வாழ்த்துப்பா பாடி இருக்கிறார்

இவற்றுக்காக மட்டுமே இந்த நூல் தனியே பாராட்டப்பட வேண்டும்

போதி மரம் தேடி என்ற கவிதையில்

படித்தேன் தெரு விளக்கில்
விடிய விடிய விழித்து
படிக்க வேண்டா வற்றை
படிக்கத் தேவை யானவை எல்லாம்
பட்டப் படிப்பில் இல்லை
படித்தேன், படித்தேன் தேர்வுக்காக
உயர்ந்த மதிப்பெண் வாங்கினேன்
வாழ்வில் கிடைத்தது பெரிய பூஜியம்

பாடத்திட்டத்தின் அவலத்தை எத்தனை அழுத்தமாய்
அனுபவத்தில் தோய்த்துச் சொல்கிறார் பாருங்கள்

பூரண சுதந்திரம் யாருக்கு என்ற கவிதையில்

மசூதியை இரவிலே தகர்த்து
வேரறுப்பது
பூரண சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவகாளிச் சுதந்திரம்
பூரண சுதந்திர நாட்டில்
மதம் பிடித்த யானைகள்
மனித நேயத்தை மிதிக்கும்.
சுதந்திர நாட்டில்
மதக் கோலத் திருவிழா 
கும்ப மேளா !

சுதந்திரம் எப்படிக் கெட்டுச் குட்டிச்சுவராய்ப் போனது என்பதை
காட்சியமைபோடும் உண்மைச் சம்பவங்களின் அணிவகுப்போடும்
சொல்வது சிறப்பல்லவா?

தொடுவானம் என்ற கவிதையில்

தோல்விக்குப் பின்
கற்றது
கால்பந் தளவு !
வெற்றி பெற்ற பின்
கற்றது
கடுகு அளவு !

தோல்விதான் ஆசான் என்பதை எத்தனை அழகாகச் சொல்கிறார்கள் பாருங்கள்

அணு, அகிலம், சக்தி என்ற கவிதையில்

பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
பொரி உருண்டை ஒன்று
பரமாணுக் களாகி,
துணுக்காகி அணுவாகி,
அணுவுக்குள் அணுவாகித்
துண்டுக் கோள்கள் திரண்டு
அண்டமாகி,
அண்டத்தில் கண்டமாகித்
கண்டத்தில்
துண்டமாகிப் பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகிப்
பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
பேரளவுச் சக்தி யாகித்
சீராகிச் சேர்ந்து
சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
பிணைந்து பேரொளி யாகிப்
பிரம்மாண்டப் பிழம்பாகி,
பரிதியாகி,
பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
பாசபந்த ஈர்ப்பில்
அணைத்து
அம்மானை ஆடினாள் என்
அன்னை !

தன் அறிவியல் அறிவையும் மெய்ஞான அறிவையும்
இணைத்துக் கலந்து இவர் வடிக்கும் கவிதைகள் வித்தியாசமானவை
பலருக்கும் எழுத இயலாதவை என்றும் சொல்லலாமல்லவா?

ஜெயபாரதன் நூறாண்டுகள் தாண்டி நோய்நொடியின்றி வாழவேண்டும்
அவரின் அறிவியல் கட்டுரைகளால் தமிழுலகை
மேலும் மேலும் மூழ்கடித்தவண்ணமாய் இருக்க வேண்டும்

நானறிந்து ஜெயபாரதனைப்போல அறிவியல் கட்டுடைகளை
நாளெல்லாம் பொழுதெல்லாம் எழுதும் இன்னொருவர் தமிழில் இல்லை

நான் ஜெயபாரதனை பாராட்டுகிறேன் ஒரு கவிஞனாய்
நான் ஜெயபாரதனுக்கு நன்றி சொல்கிறேன் ஒரு தமிழனாய்

உறுதியாகத் தமிழ்த்தாய் பூரிப்பாள் பொங்கி நிற்பாள்
அறிவியல் தமிழெடுத்து தினம் தினம் என்னை நீ
ஆராதிக்கிறாயே என்று

வெற்றி வாழ்க்கை வாழ்கிறீர்கள் ஜெயபாரதன்
எந்நாளும் அழிவே இல்லை உங்களுக்கு

அன்புடன்
கவிஞர் புகாரி
அக்டோபர் 2018, கனடா










கனடா கவிஞர் புகாரி - ஜெயபாரதன்

கனடா கவிஞர் புகாரின் தனித்துவப் பண்புகள் என்ன ? அவரது கவிதைகள் யாவும் பொரி உருண்டை போல் சிறியவை. கற்கண்டு போல் இனிப்பவை சில! பாகற்காய் போன்று கசப்பவை சில! ஆனால் அவை யாவும் சிறு சிறு கவளத் துண்டுகள். பச்சிளம் குழந்தைகள் கூட தமது பிஞ்சுக் கரங்களில் அள்ளித் தின்ன வசதியானவை! கவிதைகள் எல்லாம் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை! வெறும் வெளி உதடுகளில் பிறந்தவை அல்ல! அவரது கவிதைகள் தெய்வங்களைப் பற்றியோ, வேத விற்பன்னங்களைப் பற்றியோ விளக்குபவை அல்ல! மனித வாழ்க்கையைப் படமெடுத்து, உலக மரபுகளை, மெய்ப்பாடுகளை கவளம், கவளமாக பவள மாலையாகக் கோர்த்துத் தமிழன்னையின் கழுத்தில் ஆரமாக அணிவிக்கிறார்.
தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஆறுமுகங்கள் இருப்பதாக நமது புராண இதிகாசங்கள் கூறுகின்றன. அதுபோல் நமது கனடா கவிஞருக்கு ஆறு அம்சங்கள் உள்ளன:
முதலாவது அம்சம்: ஆக்க உணர்ச்சி, கவிதைகளைப் படைக்க வேண்டும் என்னும் ஆத்மீகத் துடிப்பு. தொடர்ந்து கவிதைகள் ஆக்க வேண்டும் என்னும் உந்தல் உணர்ச்சி. உருவமின்றி உள்ளக் கருவில் களஞ்சியமாகத் தேங்கிப் பின்னால் கவிதையாகப் பிறக்கும் திணிவு சக்தி அது. பூமிக்குள்ளே இப்படி இருக்கும் திணிவுச் சக்திதான் வெடிப்பாக, எரிமலையாகப் பீறிட்டு எழுகிறது!
இரண்டாவது அம்சம்: ஆத்ம உணர்ச்சி அல்லது ஞான உணர்ச்சி. நமது கவிஞருக்கு மூன்றாவது கண்ணான ஞானக்கண் ஒன்று இருக்கிறது. அதன் மூலம் அவருக்குத் தீர்க்க தெரிசனம் கிடைக்கிறது! வரப் போகும் புதுயுகம் அவரது ஞானத் திரையில் தோன்றுகிறது! அவர் தேவையான வேளைகளில் அதை நெற்றிக்கண்ணாகப் பயன்படுத்தி நாட்டுத் துரோகிகளைச் சுட்டெரிக்கிறார். ‘சுட்ட வீரப்பன் வேண்டுமா, அல்லது சுடாத வீரப்பன் வேண்டுமா, ‘ என்ற கேள்வியைக் கேட்டு, இரண்டு பேரும் வேண்டா மென்று தன் நெற்றிக் கண்ணால் துரோகியைச் சுட்டுத் தள்ளுகிறார்.
மூன்றாவது அம்சம்: அன்புணர்ச்சி. கவிஞர் மனித நேயம் உடையவர். அவர் ஒரு மனிதாபிமானி. எல்லாம் அன்புமயம் என்று நினைப்பவர். பெண்மைக்குத் தலை வணங்குபவர். தினமும் பிளாஸ்டிக் வெடிகளில் தற்கொலை புரிந்து மற்றவரைக் கொல்லத் துணியும் மூர்க்க வர்க்கத்தாரை அறவே வெறுப்பவர்.
நான்காவது அம்சம்: அழகுணர்ச்சி. கவிஞனுக்கு அழகுணர்ச்சி இல்லாவிடில் ஒளியற்ற கண்களைக் கொண்டவனாகக் கருதப் படுவான். எல்லாம் வனப்பு மயம்! இயற்கை அழகு அவனை ஈர்க்கிறது! பொங்கி வரும் பெருநிலவு போன்ற பெண்ணின் முகப் பொலிவு, கண்களின் காந்தசக்தி, கொடி உடல் வனப்பு, நடை அழகு, இடை நளினம் ஆகியவைக் கவிஞனைக் கவர்கின்றன. ஓவியம், காவியம், நாட்டியம் அனைத்திலும் கவிஞன் மனதைப் பறிகொடுத்து அங்கே அழகின் நடனத்தைக் காண்கிறான். பிறகு அவற்றைக் கவிதைகளாய் வடிக்கிறான்.
ஐந்தாவது உணர்ச்சி: ஆவல் உணர்ச்சி. படைப்புக்கு வேண்டிய தூண்டுகோல் அல்லது உளவு சக்தி அது. அதாவது தேடல் உணர்ச்சி, ஆக்க உணர்ச்சிக்கு வேண்டிய தாகம், வேட்கை, ஆர்வம் அவை! ஆய்வு உணர்ச்சி, உளவி உண்மை காணும் பண்பு.
ஆறாவது உணர்ச்சி: விடுதலை உணர்ச்சி. நாட்டு வேலிக்குள், இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு அடிமையாய்க் கிடக்கும் மனிதருக்கு விடுவிப்பு! இதைத்தான் பாரதி, ‘சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே, ‘ என்று பாடிப் பாரதத் தாயின் அடிமை விலங்கை உடைக்க வீறுகொண்டு எழுந்தான். ஆனால் பாரதிதாசன் பாரதியின் பெயரில் புகழ் பெற்றாலும், பாரத விடுதலையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் என்று உறுதியாய் நம்பிய பாரதியாருக்கு இருந்த தீர்க்க தெரிசனம் பாரதிதாசனுக்கு இல்லாமல் போனது எனது நெஞ்சில் ஒரு முள்ளாய்க் குத்துகிறது!
கனிவுடன்,
சி. ஜெயபாரதன்
கனடா

தனித் தமிழ்த் தாறுமாறுத் தாண்டவம்

*தனித் தமிழ்த் தாறுமாறுத் தாண்டவம்*

>>>உங்களின் தாழ்வு மனப்பான்மையும் அடிமைப்போக்கும், மற்றவர்களை பாதிக்கக்கூடாது என்பது மட்டுந்தான் எனது கவலை. உங்களின் அரைகுறை தமிழறிவுடன் குமுக வழக்கியல் அறிவுக்குறையும் மிகத்தவறாக உங்களை இட்டுச்செல்கிறது. நாக இளங்கோவன் <<<

இப்படியான அநாகரிகம் தமிழ் மரபே இல்லையே?


உங்களால் மட்டுமே இப்படி வசைபாடமுடியும் என்று எண்ணமா?

ஒரு முட்டாள்தனத்தைக் கையில் வைத்துக்கொண்டு இப்படி வசைபாட வரும் உங்களை தமிழின் முன்னேற்ற வழியில் நிற்கும் நான் எத்தனை வசைபாட முடியும்?

அறிவில்லாத நிலையில் நின்று வசைபாடும் உங்களை அறிவு சார்ந்து வளர்தமிழோடு செல்லும் நான் எத்தனை வசைபாடமுடியும்?

இப்படித்தான் மரபுக் கவிதைதான் கவிதை புதுக்கவிதை கவிதையே அல்ல. நீ தமிழ்க் கவிஞனில்லை என்று தாறுமாக எழுதி வந்தீர்கள் கூட்டம் கூட்டமாக.

உங்கள் மூக்கையெல்லாம் உடைத்து உடப்பில் போட்டுவிட்டு புதுக்கவிதை வானலாவி வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறது

அதையும் தாண்டி நவீனம் பின் நவீனம் என்று சென்றுகொண்டே இருக்கிறார்கள் முன்னேற்ற வளர் தமிழ்ப் பற்றாளர்கள்.

பாலடைந்த மண்டபங்களின்
அழுக்கடைந்த சட்டங்களில்
தொங்கிக்கொண்டிருக்கும்
வவ்வால்கள்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கின்றன
நான் தலைகீழாய் நடக்கிறேனாம்

இதை எப்போதோ எழுதிவிட்டேன் இக்கவிதையை, புதுக்க்க்க்க்க் கவிதையை!

நிறுத்துங்கள் உங்கள் பிதற்றல்களை
நிறுத்தாவிட்டால் நானும் உங்களைப் போலவே தரமிழந்து வாய்மொழி உதிர்க்க வேண்டியதாக இருக்கும்

போற்றுவோர் போற்றட்டும்
தூற்றுவோர் தூற்றட்டும்
தொடர்ந்து என் பணி செய்வேன்
நில்லேன் அஞ்சேன் என்றான் கண்ணதாசன்
அவன் கவிஞன்

உங்களால் எல்லாம் ஒரு கவிஞனையோ அவன் முற்போக்கையோ தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

தொலைந்து போங்கள், தமிழை வாழவிட்டுவிட்டு!

அன்புடன் புகாரி

Marijuana is legal everywhere across Canada now

Marijuana is legal everywhere across Canada now

கனடாவில் மெர்வானா
இன்றிரவு முதல்
சட்டப்பூர்வமாக்கப்படுகிறது

நியூஃபவுன்லாண்டில் விற்பனை தொடங்கியது.

மெர்வானா என்றால் நம்மூரில் கஞ்சா என்பார்களே அதுபோன்றதுதான்

இனி மெர்வானா கடைகளில் கிடைக்கும் வீட்டிலும் வளர்க்கலாம்.

18 வயதிக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படுகிறது

18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மெர்வானா வழங்கப்பட்டாலோ அல்லது அவர்கள் பயன்படுத்தினாலோ 14 வருட சிறைத்தண்டனை வரை வழங்கப்படும் என்று அரசு எச்சரிக்கிறது

ஏன் போதைப் பொருளை சட்டப்பூர்வமாக்குகிறது கனடா?

மெர்வானா போதைப்பொருள் மட்டுமல்ல, அது ஒரு மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.

மெர்வானாவின் கறுப்புச் சந்தை கனடாவை நிலைகுலையச் செய்துவந்ததால் அதையும் நிறுத்தும் காரியமே இது.

பொது இடங்களில் மெர்வானா பயன்படுத்த முடியாது. விளையாட்டு இடங்களிலும் பயன்படுத்த முடியாது.

இலங்கை, இஸ்ரேல், இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற சில பல நாடுகளில் மெர்வானா முன்பே சட்டப்பூர்வமாக இருக்கிறது

ஒளிந்து மறைந்து தம்மியவர்கள் இனி சுதந்திரமாக தம்மிப் புகைவார்கள், ஆனால் பொது இடங்களில் தடுக்கப்படுவார்கள்.

”கனடாவில் களங்கம் கழுவப்படுகிறது” என்று கனடாவிலேயே முதன் முதலில் சட்டப்பூர்வாக பில் போட்டு வாங்கிய மெர்வானா பயனாளர் குதூகலித்தார்.

மது எப்படியோ மருந்தும் அப்படியே
என்ற நியதி ஒரு கருத்தாகவும்
கதை இனி கந்தல்தானோ
என்ற கலக்கத்தில் சிலருமாகவும்
மெர்வானா விற்பனைக்கு வந்துவிட்டது

மனநலம் சிதைந்தவர்களுக்கான மருந்தாகப் பயன்படும் மெர்வானாவை கனடாவின் உயர்மட்ட மருத்துவ ஆய்வுகள் அனுமதித்துச் சான்றிதழ்கள் வழங்கி இருக்கின்றன.

அன்புடன் புகாரி

நான் நானா

அன்பு நண்பர் மணி வண்ணன்,

உங்கள் கருத்துப்படியே
நான் தமிழ் இலக்கணமே தெரியாதவனாய்
அப்படியே இருந்துவிட்டுப் போகிறேனே


உங்கள் கருத்து என்பது
உங்கள் கருத்து
அது என் கருத்தாகவோ
இந்த உலகக் கருத்தாகவோ
ஆகிவிடுமா?

நான் நானா
அல்லது நீங்கள் சொல்பவனா
என்பதில் சர்ச்சையே தேவையில்லை
என்று தெளிபவன் நான்

யார் யாரை
எப்படிப் பார்க்கிறார்களோ
அப்படித்தான் அவரா
அல்லது அவர் என்பவர்
அவரே அறியாத
மாய மனிதரா

இலக்கியம்
முதலாக வந்தது
இலக்கணம்
பிறகுதான் வந்தது என்று
தெளிவாக அறிந்தவன்
நான்

இன்றைய தமிழுக்கு
அகராதியே போட்டுவிட்டார்கள்.

இன்றல்ல
சுமார் 30 ஆண்டுகளுக்கும் முன்

https://www.jeyamohan.in/4347#.W8N1ZGhKiUk

http://crea.in/pdf/Crea%20Brochure%208pages.pdf

என்னிடம் பழைய
க்ரியா தமிழகராதி
நெடுங்காலமாய் உண்டு

இதோ தமிழில் தட்டச்சிக்கொண்டிருகிறேன்.

என்னால் ஹ ஜ ஸ ஷா என்று
சரளமாகத் தட்டச்ச முடிகிறது

தமிழ்த் தட்டச்சு நிரலிகள்
தாராளமாக அந்தச் சலுகையைத்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
வழங்கியுள்ளன

நீங்கள் சரியான கதவைத்தான்
தட்டுகிறீர்களா என்று
நீங்களே
சிந்தித்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
கவிஞர் புகாரி

இதுவும் பிழைதானே

மதுரையை மெஜ்ரா என்று எழுதினான் வெள்ளைக்காரன்.

அது பிழை என்று சொல்லுகிறோம்!

ஸ்காட்லாண்டை இசுக்காட்டுலாந்து என்று தமிழன் எழுதுகிறான்.

இதுவும் பிழைதானே?

கவிஞர் புகாரி

என் பெயரை நான் எழுதுகிறேன்

அவனவன் பெயரை அவனவன் முடிவு செய்வான் எப்படி எழுதுவதென்று.

அயல் ஊர் அயல் நாடு போன்ற பெயர்களை இயன்றவரை உச்சரிப்பு மேலோங்க எழுதுவோம்.

கிரந்தத்தைக் கட்டாயம் பயன்படுத்துவோம் என்று இங்கே யாரும் சத்தியாகிரகம் செய்யவில்லை


புஹாரியை புகாரி என்றே எழுதுகிறேன்

ஜார்ஜ் என்பதை சாருசு என்று எழுதுவது நிச்சயமாகச் சரியில்லை என்பது உறுதியாக எனக்குத் தெரியும்.

குஷ்வந்த் சிங்கை குசுவந்த சிங்கு என்று எழுதுவதில் ஏற்பில்லை.

சிறப்புப் பெயர்ச்சொற்களை எப்படி எழுதுவதென்பது என் தேர்வு.

நான் தமிழன், என் மொழியில் நான் எழுதுகிறேன். இதில் எவரின் தனித் தலையீட்டையும் விரும்புவதில்லை.

தமிழ்ச் சொல் எழுதும்போது நான் வேஷ்டி முஷ்டி என்று எழுதினால் நீங்கள் யார் வேண்டுமானாலும் என்னை வந்து ஓர் அதட்டலே போடலாம்

வேறு நிலைப்பாட்டோடு யார் வந்தாலும் நான் அன்பு பொங்க ஓர் அதட்டல் போடுவதைத் தவிர்ப்பதரிது

அன்புடன்
கவிஞர் புகாரி
என் பெயர்
குஷ்வந்த் சிங்
என்றால்
குசுவந்த அசிங்கு
என்று நான்
ஒருக்காலும்
எழுதமாட்டேன்


புகாரி என்பது என் பெயர்

என் பெயர் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் அது என் பெயர்.

நான் புஹாரி என்று என் இளவயதில் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் புகாரி என்று எழுதினாலும் ஓசை மாறாது என்று தமிழறிஞர்கள் சொன்னார்கள். அப்படியே கேட்டுக்கொண்டேன். ஏனெனில் என் பெயருக்கு யாதொரு சேதாரம் நிகழவில்லை. மேலும் அழகானது. நன்றிசொல்லி ஏற்றுக்கொண்டேன்

ஆகவே நண்பர்களே என் பெயர் புகாரி. அது அப்படி இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனெனில் அது என் பெயர்.

ஒரு அரபுக் காரன் வருவான் அதை Bokhari என்று எழுதவேண்டும் என்பான். அதுதான் மூலமொழி என்பான்.

ஒரு பெர்சியன் வருவான் அதை Bukaari என்று எழுத வேண்டும் என்பான். இதுதான் உண்மையான மூல மொழி என்பான்.

ஆனால் உலக மக்களே நீங்கள் ஒன்றைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். புகாரி என்பது என் பெயர் எனக்கு இரு மொழி தெரியும். தமிழ் + ஆங்கிலம்

தமிழில் புகாரி என்றுதான் எழுதுவேன் ஆங்கிலத்தில் Buhari என்றுதான் எழுதுவேன்.

எவராவது மாற்று கீற்று என்று வந்தால் சோலியப்பாருய்யா வெங்காயம் என்றுதான் அன்பாகச் சொல்வேன் ;-)

நீங்கள் உங்கள் குஷ் பெயரை குசு என்று மாற்றிக்கொள்ளுங்கள் எனக்குக் கவலை இல்லை. என் பெயரை விட்டுவிடுங்கள்.

என் பெயர்
குஷ்வந்த் சிங்
என்றால்
குசுவந்த அசிங்கு
என்று நான்
ஒருக்காலும்
எழுதமாட்டேன்

ஏதாவது புரிகிறதா?

அன்புடன்
கவிஞர் புகாரி

தனித்தமிழா தனித்துவிடப்பட்ட தமிழா?

மேதாவித்தனமாய்
நாங்கள்தாம் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள
பழஞ்சட்டத்தைத்
தூசுகூடத் தட்டாமல் கொண்டுவந்து
கவிஞரே மயக்கம் தீருங்கள் என்கிறீர்கள்

யாருக்கு மயக்கம்?
யார் இன்னும் எழுந்துகொள்ளவே இல்லை?


இப்படித்தான்
கவிதை எழுத உட்கார்ந்தவனை 
மரபுக்கவிதை மட்டும் 
எழுதச் சொல்லிக் 
கொன்று கொலையெடுத்தார்கள்.

விரட்டியடித்து முடிப்பதற்குள் 
போதும் போதும் என்றாகிவிட்டது

அவர்களிடமும் 
இதைத்தான் சொன்னேன். 
மரபுக்கவிதை வேண்டுமென்றால் 
நீங்கள் எழுதுங்கள். 

குசுப்பும் (குஷ்பு) 
இடமாசுகசுவும் (டமாஸ்கஸ்) 
தேவையென்றால் 
நீங்கள் எழுதிக்கொண்டு போங்கள்

நாங்கள் தமிழை வாழவைப்பவர்கள்!

தமிழை அடுத்த தலைமுறைக்கும் 
எடுத்துச் செல்பவர்கள்

அப்படியே 
பழைய பஞ்சங்கப் பாட்டுப் பாடியே 
தமிழைக் கொன்றெடுப்பவர்கள் 
அல்லர்

தமிழ் 
வெறும் நான்கே எழுத்துக்களைக் கொண்டு 
அயலவன் அத்தனை பேரையும் 
உண்டு இல்லை என்று பார்க்கிறதென்றால் 
நான் பெரிதும் மகிழ்கிறேன்.

வாழ்க தமிழ்
வளர்க கணியுகத் தமிழ்
நிலைக்க பன்நாட்டுக் கூடத்திலும் இளைய தமிழ்

மாற்றம் ஒன்றே மாறாதது. 
இந்த நான்கு எழுத்துச் சேர்க்கை எனும் மாற்றம் 
இன்று நேற்று வந்ததல்ல. 
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்தது

++ ஹ
++ ஸ
++ ஜ
++ ஷ

அறியாமல் செய்யவில்லை 
அன்றைய அறிஞர்கள்.

குண்டுச் சட்டிக்குள் 
குதிரை ஓட்டுபவர்களுக்கும் 
கிணற்றுத் தவளைகளுக்கும் 
புரியவைப்பது 
இயலவே இயலாது

ஏனெனில் 
அவர்கள் நோக்கம்
புரிந்துகொள்வதல்ல
நாங்கள் மேதாவி என்று
காட்டிக்கொள்ளும் 
பச்சைப் போலித்தனமே

தமிழுக்கு எது முக்கியமோ 
அதைவிட்டுவிட்டு 
இதில் வரட்டுத்தனமாய் 
தானும் சிக்கி 
மற்றவர்களையும் சிக்க வைக்கப் 
படாத பாடு படுகிறார்கள்.

அதைவிட்டு 
அடுத்த தலைமுறைக்கும் 
தமிழை அள்ளிக்கொண்டு போகும் 
அனைத்தையும் செய்ய வேண்டாமா?

நான் செய்கிறேன்...

இன்று 
199 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது. 
ஆனால் அத்தனை நாட்டுத் தமிழ்ப் பிள்ளைகளும் 
ஆங்கிலத்திலும் அந்தந்த நாட்டு மொழியிலுமே 
பேசுகிறார்கள். 

அதை மாற்றுவதற்கு 
ஏதாவது செய்தீர்களா? 
செய்யும் எண்ணம்தான் உண்டா?

நான் 
செய்யப் போகிறேன்

’எங்கள் தமிழ்மொழி’ 
எனும் தொண்டியத்தில் சேருங்கள்

தமிழன் கால்பதித்த
நாடெல்லாம்
தமிழின் நாடே
என்று காட்ட வாருங்கள்

புலம்பெயர்த் தமிழனின்
அடுத்த தலைமுறைப்
பிஞ்சுநாவுகளிலும்
ஈர இருக்கை
இட்டுத்
தமிழை வாழும் மொழியாய் 
அமரச் செய்யுங்கள்
வாருங்கள் 
வந்து
என் தொண்டு இயக்கத்திற்குத்
துணை நில்லுங்கள்

எங்கள் தமிழ்மொழி
எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே

அன்புடன்
கவிஞர் புகாரி

கனடாவில் பாரம்பரியத் தமிழர் உணவுத் திருவிழா


வாழ்க தமிழ்

வித்தகர் யாவரும்
கூடிடுவீர்
விண்ணிலும் தமிழை
ஏற்றிடுவீர்

முத்தமிழ் இன்றியோர்
வாழ்வேது
முரசுகள் ஒலித்தே
போற்றிடுவீர்

இரத்தமும் பீறிடும்
தமிழாக
முத்தமும் ஊறிடும்
தமிழ்பாட

பித்தமும் தெளிந்திடும்
தமிழ்பேச
பேய்களும் வணங்கிடும்
தமிழ்கேட்க

எத்தனைப் பொற்கரம்
தமிழோடு
இமயமும் அற்பமே
தமிழுக்கு

நித்திரை மறந்து
தமிழெடுப்போம்
நீலவான் எங்கிலும்
நட்டுவைப்போம்

கவிஞர் புகாரி
*எல்.........லாம் இன்ப......மயம்......... 🎼 ....🎼.....🎼.....🎼.....*

இந்தப் பாடல் ஒலிபரப்பாகிவிட்டால், எங்கள் (ஒரத்தராடு) ஊர்த் திரையரங்கில் படம் போடப் போகிறோம், வீட்டுவேலைகளையெல்லாம் உடப்பில் போட்டுவிட்டு, உடனே படம் பார்க்க ஓடி வாருங்கள் என்று பொருள்.

ஆமாம் அந்த அழைப்பு பாடலோடு ஒத்துப் போகிறது. காலத்துக்கும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பது அப்படி ஒன்றும் அவசியமானதல்லை. அவற்றை எல்லாம் கொஞ்சம் மறந்து மகிழ்ச்சியின் பூங்காவனங்களில் சஞ்சரிக்க வேண்டும்.

மகிழ்ச்சி என்றால் ஏதுமற்ற ஏழை வாழ்வில், தமிழ்நாட்டில் திரைப்படங்கள்தான் எல்லா வயதினருக்கும்.

திருமணமானவர்களுக்கு உரிமைக்காதல். இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு இதுவே முதன்மைக் காரணம் என்று கண்ணதாசன் உள்பட பலரும் சொல்வார்கள் 😉

விபரமறியாத மிகச் சிறுவனாக இருந்தபோதிலிருந்தே இந்தப் பாடலை நான் கேட்கிறேன். இந்த வயதில் கேட்கும்போது பொருளை நன்றாகப் புரிந்துகொண்டதால் நான் அப்படியே நான் இந்தப் பாடலுக்குள் சொக்கி விழுகிறேன்.

அருமையான அடர்த்தியான பொருள் கொண்ட, எதையும் நேர்மறையாய்க் காணச் சொல்லும் இனிப்பான பாட்டு. தேர்ந்த சொல்லாட்சி, சிக்கன வரிகள், நீட்டி முழக்காமல் சில வரிகளையே கொண்ட இசையில் பெரிதும் மேலோங்கிய இனிமையான பாடல்.

இந்தப் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி. நாராயணசாமி என்ற தன் இயற்பெயரை நாராயணகவி என்று மாற்றிக்கொண்டு திரைப்பாடல்கள் எழுதினார். ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையானவர். தலை வணங்காத உறுதி உடையவர்.

ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.

பாரதீ.... நீ யாரையும் விட்டுவைக்காத டிராகுலா தானடா. பார்ப்போரையெல்லாம் உன் நுனிப்பல் பதியும் வகையிலாவது  நீ கடித்துவைத்துவிடுவாய். பிறகெல்லாம் அவர்களும் உன்னைப் போலவே தீவிரத் தமிழனாய் புரட்சிக்காரனாய் உறங்கா விழிகளைக் கொண்டவர்களாய் ஆகிவிடுவார்கள்

https://youtu.be/UjKwSeTjYj0

இந்தப் பாடலைப் பாடியவர் எம்.எல். வசந்தகுமாரி.

திரைப்படத்தில் அழகுக் குவியலாய், சின்னஞ்சிறு கன்றுக்குட்டியாய்த் தொடைதட்டி அபிநயித்தவர் நம் நாட்டியப் பேரோளி பத்மினிதான். கூடவே அவரின் சகோதரி லலிதா.

இந்தப் பாடலின் ராகம் *சிம்மேந்திர மத்தியமம்* என்கிறார்கள். அதுமட்டும் எனக்கு இன்றுவரை விளங்கவே இல்லை. அத்தனை இசைஞான சூனியம் நான். என் ரசனையெல்லாம் இசைகேட்கும் பாமரச் செவிச்சுகமும் பாடல்வரிகளை ஆழ்ந்து ரசிக்கும் சிந்தனைச் சுகமும் மட்டுமே.

இந்தக் காலத்தில் இதே பாடலை மீண்டும் நித்யஸ்ரீ பாடி இருக்கிறார். அருமைதான் என்றாலும் அந்தப் பழைய பாடல்முன் சற்றே இடறிநிற்பதாகவே என் செவிகள் சொல்கின்றன எனக்கு. உங்களுக்கு?

https://youtu.be/2gVYogRIoEY

கவிஞர் புகாரி
*வாய்த்தவாய்*

உன்
திருவாய் திறந்துவிட்டால்....

திட்டு மட்டும்தான்
கொட்டுமா

கூர்முனைக்
கொம்பு மட்டும்தான்
முட்டுமா

கொடுந்தேள்
கொடுக்கு மட்டும்தான்
வெட்டுமா

ஈதென்ன
அழிந்தொழியாத
உன்
கொட்டமா

0

உன்
வாய் முகூர்த்தம்
என்பதென்ன
பேய் முகூர்த்தமா

0

வசையே நீண்டால்
வைதலே மூண்டால்
வெறுப்பே புரண்டால்
விசமே திரண்டால்

அதென்ன
வாயா
வயக்காட்டுத் தீயா
நாக்கா
நடுக்கூடத் தூக்கா

0

பார்
உன் வாய் திறந்தால்
எத்தனைப் பிணங்கள்
செத்தபின்னும்
அலறியடித்துக்கொண்டு
ஓடுகின்றன

பார்
உன் வாயை மூடக்கேட்டு
கொடுநெருப்புத் தீப்பந்தங்களும்
கதறியழுது துடிக்கின்றன

பார்
உன் வாய் மூடிய
அந்நொடியில்
ஜென்ம ஜென்மயாய் அடைபட்ட
ஆகாய தேவதைகளெல்லாம்
சட்டென்று விடுதலைபெற்று
படபடக்கும் சிறகுகளின்
மாமதுர ஓசைகளோடு
பறந்து பறந்து
பூத்துக் களிப்பதை

0

இந்
நோய் தீரும் நாளென்று
ஓர் நாள் இப்பிறப்பில்
உனக்குண்டா

ஒரே ஒரு முறை
உன் திருவாய் மலர்ந்து
இன்னிசையாய்
ஒரு சொல்
சொல்லித்தான் பாரேன்

அந்நொடியே
அரளிவிதை நச்சுக் காயும்
அமுதாகும்
சபிக்கப்பட்ட வெறி நாயும்
முயலாகும்

அன்றித்
திறவாதே திறவாதே
உன் வாயை
திறந்து
மூடாதே முடிக்காதே
பலர் வாழ்வை

அன்புடன் புகாரி

செல்லும் பாதை
அறம் அறம்
அறம் என்றே ஆனால்
செல்லும் சாலையும்
சேரும் சோலையும்
சொர்க்கம் சொர்க்கம்
சொர்க்கம் என்றே ஆகும்

கவிஞர் புகாரி