17

வற்றாக் குற்றாலமான
என் அன்பும்
அணையிடாக் காவிரியான
என் பாசமும்
உப்பிலாப் பசிபிக்கான
என் கருணையும்
கலையா முகிலான
என் கண்ணீரும்
என்னை
உனக்குள் திணித்து
உன்னை
ஏமாற்றி விட்டதாகக்
கோபப்பட்டாய்

உன்
கோபத்தையும்
குற்றச்சாட்டையும்
பரிவோடு ஏற்றுக்கொண்டு
நான் உன்மீது
அளப்பரிய
அன்பும் பாசமும்
கருணையும் கண்ணீரும்
கொட்டுகிறேன்

வேறென்ன
எனக்குத் தெரியும்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

தீம்பாவழி தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்

தீம்பாவழி தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்

வாழ்த்து மின்னட்டையாக


அன்பு என்பினும் அறிவு என்பினும் தீபம் தீபம்
அழகு என்பினும் அமுது என்பினும் தீபம் தீபம்
இரக்கம் என்பினும் ஈகை என்பினும் தீபம் தீபம்
உதயம் என்பினும் உச்சம் என்பினும் தீபம் தீபம்

தூளி என்பினும் தாய்மை என்பினும் தீபம் தீபம்
தவம் என்பினும் வரம் என்பினும் தீபம் தீபம்
ஞானம் என்பினும் மோனம் என்பினும் தீபம் தீபம்
கனிவு என்பினும் கருணை என்பினும் தீபம் தீபம்

அகந்தை அறுப்பதும் அமைதி விளைப்பதும் தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும் வஞ்சம் தகர்ப்பதும் தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும் சொர்க்கம் மீட்பதும் தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும் வாழச் சொல்வதும் தீபம் தீபம்

இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம் இன்பமே ஒளிரட்டும்

இனிய இதய தீம்பாவழி  தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்

கவிஞர் புகாரி

*


மாசறு தீபாவளி (வைகைச் செல்வி இதழுக்கு)

அன்பு என்பினும் அறிவு என்பினும் தீபம் தீபம்
அழகு என்பினும் அமுது என்பினும் தீபம் தீபம்
இரக்கம் என்பினும் ஈகை என்பினும் தீபம் தீபம்
உதயம் என்பினும் உச்சம் என்பினும் தீபம் தீபம்

கனவு காதல் நளினம் நாணம்
நட்பு நேயம் உறவு ஊக்கம்
பரிவு பாசம் அகரம் ஆதி
எளிமை ஏற்றம் எண்ணம் ஏகம்
யாவும் யாவும் தீபம் தீபம்

தூளி என்பினும் தாய்மை என்பினும் தீபம் தீபம்
தவம் என்பினும் வரம் என்பினும் தீபம் தீபம்
ஞானம் என்பினும் மோனம் என்பினும் தீபம் தீபம்
கனிவு என்பினும் கருணை என்பினும் தீபம் தீபம்

உள்ளம் உயிர் வளமை செழுமை
வண்ணம் மின்னல் தனிமை இனிமை
மனிதம் புனிதம் மஞ்சள் மாட்சி
பக்தி பூசை மாண்பு நோன்பு
யாவும் யாவும் தீபம் தீபம்

அகந்தை அறுப்பதும் அமைதி விளைப்பதும் தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும் வஞ்சம் தகர்ப்பதும் தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும் சொர்க்கம் மீட்பதும் தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும் வாழச் சொல்வதும் தீபம் தீபம்

தீபமென்றால் ஒளி ஆவளி என்றால் வரிசை
அழகு தீபங்களின் அறிவு தீபங்களின்
இதய தீபங்களின் இனிய தீபங்களின்
ஊர்வலம்தான் தீபாவளி

இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம் இன்பமே ஒளிரட்டும்

இனிய இதய தீம்பாவழி  தீபவொளி
தீபாவளி வாழ்த்துக்கள்

*கவிஞர் புகாரி*



(முழுக்கவிதை)

அன்பு என்பினும்
அறிவு என்பினும்
தீபம் தீபம்

அழகு என்பினும்
அமுது என்பினும்
தீபம் தீபம்

இரக்கம் என்பினும்
ஈகை என்பினும்
தீபம் தீபம்

உதயம் என்பினும்
உச்சம் என்பினும்
தீபம் தீபம்

0

கனவு காதல்
நளினம் நாணம்
நட்பு நேயம்
உறவு ஊக்கம்
பரிவு பாசம்
அகரம் ஆய்தம்
எளிமை இனிமை
எண்ணம் ஏற்றம்
யாவும் யாவும்
தீபம் தீபம்

0

தூளி என்பினும்
தாய்மை என்பினும்
தீபம் தீபம்

தவம் என்பினும்
வரம் என்பினும்
தீபம் தீபம்

ஞானம் என்பினும்
மோனம் என்பினும்
தீபம் தீபம்

கனிவு என்பினும்
கருணை என்பினும்
தீபம் தீபம்

0

உள்ளம் உயிர்
வளமை செழுமை
வண்ணம் மின்னல்
தன்மை தனிமை
மனிதம் புனிதம்
மஞ்சள் மாட்சி
பக்தி பாசம்
மாண்பு நோன்பு
யாவும் யாவும்
தீபம் தீபம்

0

அகந்தை அறுப்பதும்
அமைதி விளைப்பதும்
தீபம் தீபம்

வக்கிரம் எரிப்பதும்
வஞ்சம் தகர்ப்பதும்
தீபம் தீபம்

நரகம் ஒழிப்பதும்
சொர்க்கம் மீட்பதும்
தீபம் தீபம்

வாழ்க்கை தருவதும்
வாழச் சொல்வதும்
தீபம் தீபம்

0

தீபமென்றால்
ஒளி
ஆவளி என்றால்
வரிசை
தீப ஆவளி
தீபாவளி

அழகு தீபங்களின்
அறிவு தீபங்களின்
இதய தீபங்களின்
இனிய தீபங்களின்
ஊர்வலம்தான்
தீபாவளி

0

இருளகற்றும் தீபமே
இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே
நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி
விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும்
நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம்
தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள்
எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம்
இன்பமே ஒளிரட்டும்

0

இனிய
இதய
தீம்பாவழி
தீபவொளி
தீபாவளி வாழ்த்துக்கள்

கவிஞர் புகாரி
16

பூரித்துப் பூரித்துப்
பத்தே நிமிடங்களில்
பன்மடங்காய்ப் பெருத்துவிட்டேன்

எத்தனை ஜென்மங்கள் கழித்து
உன் யாழிசையை
என் செவிக் கூடத்தில்
இதயவாசம் மணக்க மணக்க
மீட்டுகின்றாய்

உன் பனிமுகம் கண்டறியா
என் கண்கள் கொதிக்கின்றன

ஊரறிந்தும் உன் வீடறியா நான்
என் வழிப்போக்கில்
உன் ஊர் வர நேர்ந்தால்
என்ன செய்வேன்

பேருந்து நிறுத்தத்தில்
ஒரு நிமிடம் விழிமூடி
மௌன தீபம் ஏற்றலாம்

பார்த்தால் பசிதீரும் என்று
முணுமுணுத்துக்கொண்டே
ஏதோ ஓர் பேருந்தில்
இலக்கின்றி ஏறிக்கொள்ளலாம்

என் பெயரை நானே சத்தமாய்க் கூவி
ஏதேனும் ஓர் ஐம்பது கிலோ
திரும்பிப் பார்க்கிறதா என்று
தமிழ் சினிமாவைப் போல் பித்தாடலாம்

அல்லது
இதில் எதையும் செய்யாதே
சிறகுகளைக் காற்றில் கழுவிக்கொண்டு
பறவைகள் பூத்திருக்கும் பூங்காவில்
நான் வந்து காத்திருக்கிறேன்
என்று நீ இப்போதே வாக்களித்து
என்னைக் காக்கலாம்

சொல்...
உனக்குத்தான் என்மீது
கொஞ்சமோ கொஞ்சமாய்க்
கொஞ்சிக் குதித்தாடும்
நெஞ்சத் துடிப்பிருக்கிறதே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
இல்லறம்

இல்லமதில்
வெல்லம்
இரு
பிள்ளை உள்ளம்
ஓர் ஊரில் ஒரு வெள்ளை உள்ள எலி

ஓர் ஊரில்
ஒரு வெள்ளை உள்ள எலி
.
சின்னஞ்சிறு பொந்து
உற்சாக உலகம்
.
நெல்லோடு
கடலையும் பருப்பும்
.
பொழுதுக்கும்
சிரிப்பும் விளையாட்டும்
.
ஓர் இருளில்
மொத்தமாய்க் களவுபோனது
நெல் கடலை பருப்பு
.
தவித்தது
தவமிருந்து துடித்தது
.
நாள்
வாரமானது
வாரம் வருடமானது
.
கறுத்துப் போனது
சிறுத்துப் போனது
.
செவிகள்
சிதைந்துவிட்டன
.
கண்கள்
விழுந்துவிட்டன
.
நாவின் தாகம்
உயிரில் ஓலம்
.
இன்னும் ஓர் இருளில்
தங்கத்தால் ஒரு பொறி
தகதகப்பாய் உள்ளே
தேங்காய்க் கீற்று
.
எத்தனை வாசம்
எத்தனை வசீகரம்
.
பசியே
பதார்த்தத்தின் ருசி
.
அச்சத்தால்
பொந்துக்குள் பொந்துசெய்து
புதைந்துகொண்டது எலி
.
உயிரைப் பிளந்து
தாக மையத்தில் புறட்டி எடுத்தது
தேங்காய்க் கீற்று
.
மதி
மயங்குவதில்லை
ஆனால்
பசியோ விடுவதில்லை
.
இன்றோடு பொறிக்குள்
இருபது வருடங்கள்
.
தேங்காய்க் கீற்று எங்கே
நெல்மணிகள் எங்கே
கடலையும் பருப்பும் எங்கே
.
கம்பிகளுக்கிடையில்
கடுங்கொடும் பட்டினியில்
ஏக்கத்தின் விசித்திர திசைகளில்
கிழிந்தழியும் எண்ணங்களில்...

15 ஹஜ் என்ற புனிதப் பயணம் ஏன்?

ஹஜ் என்னும் தியாகத் திருநாள் எப்படி வந்தது?

பெற்ற பிள்ளையையே
தனக்குப் பலிதருமாரு
இறைவன் கனவில் வந்து
கேட்டதாகக் கூறி
தியாகம் செய்ய முற்படுகிறார்
பக்தர்

மகனும்
தானே முன்வந்து
பலிபீடத்தில் தலைவைத்து
இறைவனுக்காக
வெட்டுப்படக் காத்திருக்கிறான்

கொடுவாள் எடுத்து
ஓங்கி வெட்டுகிறார்
பக்தர்

ஆனால்
அந்தக் கூர் வாளோ
வெட்ட மறுக்கிறது

சாத்தான் கூட
ஓடிவந்து தடுக்கிறான்
வெட்டாதே வெட்டாதே
என்று கூவுகிறான்

பின்னர்
இறைவனுக்குப்  பலியிடுதல்
வேண்டாம் - ஏனெனில்
இறைவன் தேவைகளற்றவன்

பலியிடத்தான் வேண்டுமெனில்
அதற்கு ஓர் ஆடு போதும் என்று
இறைக் கட்டளை வந்ததாக
காட்சி மாறுகிறது

கருணை நிறைகிறது

மனித உயிரைப் பலியிடுவது
தியாகம் அல்ல என்று மறுத்த
இறைவனின் கட்டளை வந்த
நாளைத்தான்
தியாகத் திருநாள்
என்று அழைக்கிறார்கள்

நரபலி மறுத்து
மனிதத்தைக் காத்தத்
திருநாள்தான் ஹஜ் பெருநாள்

உண்பதற்கே அன்றி
விலங்குகளை பலியிடுதல்
கூடாது என்பதே இஸ்லாம்

ஆகவேதான்
ஆகப் பழைய
வழமை காரணமாக
பலியிடப்படும் ஆடுகளும்
உறவுகளுக்கும் உலகுக்கும்
பகிர்ந்தளிக்கப்படுகிறது

ஆடுகளைப் பலியிடுதலும்
இறைவனின் தேவையல்ல
இறைவன் தேவைகளற்றவன்

இறைவன்
பெரிதும் விரும்பும்
ஒப்பிலா
பலி ஒன்று இருக்கிறது

மனிதனே முயன்று
மனிதனுக்குள் இருக்கும்
தீயவற்றை பலியிடுதலே
அது

அஸ்ஸலாமு அலைக்கும்

*

ஹஜ் பெருநாள் என்றால் என்ன என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இன்றும் அலுவலகத்தில் என்னிடம் கேட்டார்கள். வெள்ளைக்கார நாவில் ஈத் முபாரக் என்ற வாழ்த்தைப் போராடிப் பதியவைத்தேன். அழகாகவே வாழ்த்துச் சொன்னார்கள் ;-)

ஹஜ் பெருநாள் என்றால் என்ன? எப்படி வந்தது? ஏன் புனிதப் பயணம்?

முதலில் இந்த என் கண்ணோட்டத்தை வாசியுங்கள், பின் இறுதியாக ஹஜ் பெருநாள் எப்படி வந்தது என்ற வரலாற்றை வாசிக்கலாம்,

இஸ்லாம் மார்க்கத்தில் உடல் தூய்மை மனத் தூய்மை இரண்டும் மிக முக்கியமானவை.

ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தொழுவதால் உடலும் மனமும் உறுதியும் தூய்மையும் ஆகின்றன.

அதிகாலை கண்விழிக்கும் முன்பே தொழுகை தொடங்கிவிடுகிறது.

சூரியன் எழுகின்ற சமயத்துத் தொழுகை இது.

அந்தத் தொழுகைக்குச் செல்லும்முன் பலரும் குளித்து விடுவார்கள்.

அதிகாலை எழுவதாலும் அப்போதே குளித்து முடித்துவிடுவதாலும் சூரிய உதய நேரத்தின் ஓசோன் காற்றை முழுவதும் உள்ளிழுத்துக்கொள்ள முடிகிறது.

அதிகாலை எழும் நல்ல பழக்கம் வருகிறது.

உடலுக்கும் மனதுக்கும் ஒரு கட்டுப்பாடு வருகிறது.

இஸ்லாமிய தொழுகை என்பது யோகாவின் பல நிலைகளைப் போன்றது.

நெற்றி தரையில் தொடும் படியும் கால்கள் பின்னால் மடித்துவைக்கப்பட்ட நிலையிலும் பலமுறை எழுந்து குனிந்து அமர்ந்து விழுந்து என்று இருப்பதால் உடலின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

உடல் வளையும் தன்மை கொண்டதாய் ஆகிறது.

இதனால் ஆயுளும் கூடுகிறது.

மனம் தொழுகையின்போது தியானத்தில் இருக்கும்.

இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருப்பதற்காக பழக்கப்படும்.

அப்படி ஒன்றையே மனதில் நிலை நிறுத்தும் தியானத்தால், கவலைகள் அழிகின்றன. மன உறுதி பெறுகுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனம் முழுமையான நம்பிக்கையைப் பெறுவதால், வாழ்வின் சுமைகள் பெரிதாகத் தெரிவதில்லை.

அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற அன்பு கருணை ஈவு இரக்கம் என்ற உயர்ந்த மனம் வளர்கிறது.

அதிகாலை நாம் கேட்கும் பாடலோ படிக்கும் பாடமோ நம் மனதைவிட்டு எளிதில் நீங்குவதில்லை.

ஆகவே அதிகாலையிலேயே தொழுதுவிட்டால், தீய எண்ணங்கள் மனதில் தோன்றாது.

இந்த நிலை மெல்ல மெல்ல பலவீனம் அடைவதற்குள் அடுத்த தொழுகை வந்துவிடும்.

அந்த இரண்டாம் தொழுகை உச்சி வேளையில் இருக்கும்.

அதுவும் அதைத் தொடர்ந்த மற்ற தொழுகைகளும் தரும் தாக்கம் குறுகிய காலமே நீடிக்கும் என்பதாலும், மனச் சிதறல்கள் அதிகம் உள்ள பொழுதுகள் இவை என்பதாலும் அடுத்தடுத்த தொழுகைகள் விரைவில் வந்துவிடுகின்றன.

குத்துமதிப்பாக அதிகாலை ஐந்து மணிக்கு முதல் தொழுகையும், மதியம் பனிரண்டரை மணிக்கு இரண்டாம் தொழுகையும், பின்மதியம் மூன்றரை மணிக்கு மூன்றாம் தொழுகையும், மாலை ஆறு மணிக்கு நான்காம் தொழுகையும் பின்மாலை எட்டு மணிக்கு நாளின் இறுதித் தொழுகையான ஐந்தாம் தொழுகையும் இருக்கும்.

சரியான தொழுகை நேரம் இடத்துக்கு இடம் நாட்டுக்கு நாடு மாறும்.

அதை முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள்.

அதுமட்டுமல்லாமல் பாங்கு என்ற தொழுகை அழைப்பின் மூலமாகவும் தொழுகை நேரத்தை அவ்வப்போது அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு முறை தொழுகைக்குச் செல்லும்போதும் உடலைத் தூய்மைப் படுத்த வேண்டும்.

மனதைத் தொழுகைக்காகத் தயார் செய்யவேண்டும்.

அதன்வழியே மனத்தூய்மைக்கு ஏற்றதாய் மனம் மாற்றிக்கொள்ளப்படும்.

இந்தத் தொழுகையை தனித்தனியே தொழலாம் என்றாலும் பள்ளிவாசல் போய் நாலுபேரோடு தொழுவதையே இஸ்லாம் விரும்புகிறது.

இதன்மூலம் பிறரோடு உறவு வளர்வதையும் சகோதரத்துவத்தையும் மனிதர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறது.

மற்ற தினங்களில் அப்படி சேர்ந்து தொழுகிறார்களோ இல்லையோ ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையும் கட்டாயம் உச்சி நேர இரண்டாம் தொழுகையின்போது பள்ளிவாசலில் அல்லது ஒரு பொது இடத்தில் ஒன்றாய்க் கூடி ஜும்மா என்ற சிறப்புத் தொழுகையோடு தொழவேண்டும்.

இந்தத் தொழுகைக்கு குறைந்தது நாற்பது பேர்களாகவது சேர்ந்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் இஸ்லாம் வைத்திருக்கிறது.

அந்த சிறப்புத் தொழுகையின்போது தொழுகை நடத்தும் இமாம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை குத்பா என்ற பெயரில் வழங்குவார். நல்வழி செல்ல மனிதர்கள் அறிந்துகொள்ளவேண்டிய அனைத்தும் ஓர் உரையாக நிகழ்த்தப்படும்.

இதன் மூலமாக ஊரில் உள்ள அனைவரும் சந்திக்கவும் ஒன்றுகூடவும் உறவு வளர்க்கவும் சகோதரத்துவம் கொள்ளவும் உடல் காக்கவும் மன உறுதி பெறவும் வழி அமைகிறது.

ஹஜ் என்பதும் இதே போல உலக மக்கள் அனைவரும் ஒன்றாய் ஓரிடத்தில் வந்து தொழுவதே ஆகும்.

அதோடு அந்த புண்ணியத் தளத்தைக் காணும்போது உடலில் ஏற்படும் நேர்மறை அதிர்வுகள் அல்லது மனதில் ஏற்படும் அபார உணர்வுகள் பக்தியை வளர்க்கக் கூடியதாய் இருக்கின்றன.

 அதைத் தவிர கொஞ்சம் சம்பிரதாயங்களும் சடங்குகளும் ஹஜ்ஜில் உண்டு.

முற்போக்கு மதமான இஸ்லாத்தில்கூட எப்படி வந்தன இம்மாதிரி சில சடங்குகளும் சம்பிரதாயங்களும் என்பதை வரலாறுதான் சொல்ல வேண்டும்.

ஹஜ் செல்லும்போது சில நிபந்தனைகள் உண்டு.

உடல் தூய்மை மனத் தூய்மை காக்கும் செயலின் உச்சமாக இது மதிக்கப்படுகிறது.

ஆகவே ஹஜ் செய்ய முடிவு செய்தவர் நல்லதையே நினைத்து நல்லவராகவே வாழவேண்டும்.

ஹஜ் செல்லும்முன் ஒழுக்கத்தை ஒழுங்காகக் கடைபிடிப்பவராய்த் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டும்.

ஹஜ் சென்று திரும்பியதும் அந்த நினைவிலேயே, தவறுகளுக்கு அஞ்சி நடந்து, உடல், உள்ளம், ஊர், உலகம் அத்தனையும் தூய்மையாய் மலர வாழவேண்டும்.

இதன்மூலம் பரிசுத்தமான, அமைதியான, நிறைவான, குற்றங்கள் அற்ற ஓர் உலக சமுதாயம் உருவாக இஸ்லாம் வழிவகுக்கிறது.

அதற்கான கட்டுப்பாடுதான் ஒவ்வொரு நாள் தொழுகையிலும் மெல்ல மெல்ல வளர்க்கப்படுகிறது.

நொடியும் மாறாத நம்பிக்கை
நாளில் ஐந்து முறை தொழுகை
இயலும் போதெல்லாம் ஜக்காத்
வருடத்தில் ஒரு மாதம் நோன்பு
ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்

இந்த ஐந்து கடமைகளும்தான் இஸ்லாம் மார்க்கத்தில் ஒவ்வொருவரையும் நல்லொழுக்க வழியில் செல்லப் பயிற்சிதரும் கருவிகள்




2 தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

நரபலி மறுத்து
மனிதம் காத்தத் திருநாள்தான்
ஹஜ் பெருநாள்

பெற்ற பிள்ளையையே
மும்முறை கனவில் வந்து
பலியிடக் கேட்டதாகக் கூறி
இறைவனுக்குத் தியாகம் செய்ய
முற்படுகிறார் பக்தர்

ஆனால்
கூர் வாளும்
வெட்ட மறுக்கிறது

சாத்தான்கூட
தடுக்கின்றான்

பின்னரோ
பலியிடுவதெனில்
ஓர் ஆடு போதுமென்று
இறைக் கட்டளை வந்ததாக
காட்சி மாறுகிறது
கருணை நிறைகிறது

மனித உயிர் பலியிடுவது
தியாகமன்று
உன் உள்ளத்தினின்று
தீயவற்றைப் பலியிடுவதே
தியாகம் என்றறியவைத்து
நரபலியை மறுதலித்த இறைவனின்
கட்டளை வந்த நாளே
தியாகத் திருநாள்

உலகமக்கள் யாவருக்கும்
உயர்வான உறுதியான உண்மையான
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
இது உங்கள் கவிதை

எழுதும் வரைதான் என் கவிதை
எழுதி முடித்ததும்
அது உங்கள் கவிதை

நேசியுங்கள்
நிறைவான இடங்களில்
சுவாசியுங்கள்

கூண்டேற்றுங்கள்
குறையல்லவெனத் தெளிந்தால்
நியாயமருளுங்கள்

உமிழுங்கள்
உண்மையறிய நேருங்கால்
உயர்த்துங்கள்

அது
உங்கள் கவிதை

உங்களைப் போலவேதான் நானும்
ரசிக்கிறேன் ரசிகனாய்
விமரிசிக்கிறேன் விமரிசகனாய்

எனவே
வழக்காடும் சபைகளில்
நானும் வாழ வருவேன்

நானெழுதிய
என் கவிதைகளின்
முதல் ரசிகனும்
முதல் விமரிசகனும்
நானல்லவா