உயிர் தழுவும் தமிழாகிடுமா?

நாரெல்லாம்
வண்ணமலர்தான்
ஆனால்
நறுமல்லிப் பூவாகிடுமா

வேரெல்லாம்
சுகவாசந்தான்
ஆனால்
வெட்டிவேரைப்
போலாகிடுமா

மாரெல்லாம்
வீரமுரசுதான்
ஆனால்
மறத்தமிழன்
வெற்றியாகிடுமா

ஊரெல்லாம்
மொழிநூறுதான்
ஆனால்
உயிர்தழுவும்
தமிழாகிடுமா