பிரியாவிடை

கிட்டத்தட்ட இதுதான் என் முதல் புதுக்கவிதை என்று சொல்லவேண்டும். இதை நான் புதுக்கவிதை எழுதுவதாய் நினைத்து எழுதவில்லை. ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பினை முடிக்கும்போது நண்பர்கள் எல்லோரும் ’ஆட்டோகிராப்’- நினைவுப்பதிவு கேட்டார்கள். என் மனம்போன போக்கில் சுருக்கமாக நான் எழுதிய நினைவுப் பதிவுதான் இது

பிரியாவிடை

நெஞ்சைப் பிளந்தேன்
நினைவில் புதைத்தேன்
நீலவிழி நித்திரையில்
நீ வருவாய்
நான் மலர்வேன்

இனியுன்
நெருப்புச் சிவப்புவிழி
நீர் துடைத்து
நீ நடப்பாய்
என் இனிய நண்பா

No comments: