உன்
மூடக் கால்களுக்கும்
மிகக் கீழாய்
மூளையைப் புதைத்து
இரும்புப் பலகையும் இட்டு
மூடிக்கொண்டுவிட்டால்
மொக்கைக் கத்திகூட
உன்னை
அக்கக்காய் அரிந்து
வெங்காயம் கூட்டி
வதக்கி வறுத்து
வாயில்
இட்டுக்கொள்ளாதிருக்குமோ
என்
அன்புடன் இதயமே

No comments: