வாழ்த்த வயதில்லை
வாழ்த்துவதற்கு
வயது வேண்டாம்
நல்ல இதயம்தான்
வேண்டும்
பிஞ்சு மழலை
ஒரு முத்தமிட்டு
தன்
தாத்தாவை
வாழ்த்துகிறது
நேற்றே
முளைத்த புல்
தன் இதழ் விரித்து
மழையை
உயிராக வாழ்த்துகிறது
வாழிய நற்றமிழ் என்று
மழலைகள் பள்ளியில்
தமிழன்னையையே
வாழ்த்துகின்றன
வாழ்த்துவோம்
அதுதான்
நம் மனித மன
உச்சியில்
மகுடம் சூட்டி
நம்மை
மனிதராக்கி
உயர்த்துகிறது
எங்கள் ஊர்ப் பொங்கல்
ஞாபக இழைகளைச்
சிக்கெடுத்து
எங்களூர்ப் பொங்கலை
ஓர் நினைவுச் சடையாய்ப்
பின்னிப் பார்க்கிறேன்
அன்பைப் பெருக்கி கண்களில் சுருக்கி
ஆழ உயிர்க் குரலில்
அம்மா வென்ற கதறலோடு
சாம்பல் நிறப் பசுமாடு
திண்ணை மெழுகிப்போட
சாணம் இட்டு நிற்கும்
சுவரோர நிழலில்
எத்தனையோ முறை
கீறிக்கீறிக் காயப்படுத்தினாலும்
கொத்திக்கொத்திப் புண்ணாக்கினாலும்
அத்தனை முறையும்
சிரிக்கும் அன்புத் தாயாய்
அமுதள்ளி ஊட்டும் நிலம்
சோற்றுத் தட்டின்
ஓரங்களாய் ஈரம் மிளிர
நனைந்து கிடக்கும் வரப்புகளில்
நடப்பேன் நான் நாளெல்லாம்
கால்கள் நொந்ததில்லை
வேண்டும் என்று எண்ணி
வானம் பார்க்கும் போதெல்லாம்
என் வேண்டுகோளுக்காகவே
காத்திருக்கும் மழைத்தேவதை
நெஞ்சு நெகிழ வீழ்வாள்
மண்வாச மோகம் எழும்ப
வேட்டுச் சத்தம் கேட்டதோடு
வீரிட்டு ஓடும்
மாட்டுவண்டிக் கொண்டாட்டத்தை
விழிகளில் அச்சம் கிடுகிடுக்க
பதுங்கி நின்று வேடிக்கை பார்த்த
அந்தப் பழைய நாட்கள்
முகத்தை
வெட்டிவெட்டி நடக்கும்
குங்குமப் பொட்டுக் குமரிகள்
வட்டவட்டமாய் வந்து கும்மியிட்டு
'குடுடா காசு' என்று மதுச்சிரிப்போடு
மல்லுக்கு நிற்கும்போது
பருவ நெருப்புச் சிறகுகள் விரித்த
கல்வெட்டுப் பொற்பொழுதுகள்
இன்றெல்லாம்
நகர மறுக்கும் நகர வாழ்க்கை
தினந்தோறும்
நீள அகளத்தில் அறிவைக் கிழிப்பதும்
தையல் போடவும் வழியற்றுப்
பிதுங்குவதுமாய் நாட்கள்
பொங்குது பொங்குது பொங்கல்
என் கண்களில் பொங்குது
பொங்கல்
ஞாபக இழைகளைச்
சிக்கெடுத்து
எங்களூர்ப் பொங்கலை
ஓர் நினைவுச் சடையாய்ப்
பின்னிப் பார்க்கிறேன்
அன்பைப் பெருக்கி கண்களில் சுருக்கி
ஆழ உயிர்க் குரலில்
அம்மா வென்ற கதறலோடு
சாம்பல் நிறப் பசுமாடு
திண்ணை மெழுகிப்போட
சாணம் இட்டு நிற்கும்
சுவரோர நிழலில்
எத்தனையோ முறை
கீறிக்கீறிக் காயப்படுத்தினாலும்
கொத்திக்கொத்திப் புண்ணாக்கினாலும்
அத்தனை முறையும்
சிரிக்கும் அன்புத் தாயாய்
அமுதள்ளி ஊட்டும் நிலம்
சோற்றுத் தட்டின்
ஓரங்களாய் ஈரம் மிளிர
நனைந்து கிடக்கும் வரப்புகளில்
நடப்பேன் நான் நாளெல்லாம்
கால்கள் நொந்ததில்லை
வேண்டும் என்று எண்ணி
வானம் பார்க்கும் போதெல்லாம்
என் வேண்டுகோளுக்காகவே
காத்திருக்கும் மழைத்தேவதை
நெஞ்சு நெகிழ வீழ்வாள்
மண்வாச மோகம் எழும்ப
வேட்டுச் சத்தம் கேட்டதோடு
வீரிட்டு ஓடும்
மாட்டுவண்டிக் கொண்டாட்டத்தை
விழிகளில் அச்சம் கிடுகிடுக்க
பதுங்கி நின்று வேடிக்கை பார்த்த
அந்தப் பழைய நாட்கள்
முகத்தை
வெட்டிவெட்டி நடக்கும்
குங்குமப் பொட்டுக் குமரிகள்
வட்டவட்டமாய் வந்து கும்மியிட்டு
'குடுடா காசு' என்று மதுச்சிரிப்போடு
மல்லுக்கு நிற்கும்போது
பருவ நெருப்புச் சிறகுகள் விரித்த
கல்வெட்டுப் பொற்பொழுதுகள்
இன்றெல்லாம்
நகர மறுக்கும் நகர வாழ்க்கை
தினந்தோறும்
நீள அகளத்தில் அறிவைக் கிழிப்பதும்
தையல் போடவும் வழியற்றுப்
பிதுங்குவதுமாய் நாட்கள்
பொங்குது பொங்குது பொங்கல்
என் கண்களில் பொங்குது
பொங்கல்

ஒவ்வொரு விரலும்
எழுத்தாணியாக
பத்து விரல்களாலும்
எழுதியவர் சுஜாதா
கணினிக்குள்
சிப்புகளாகவே ஆகிப்போக
இளைஞர்களை
உசுப்பிவிட்டவர் சுஜாதா
நவீனத்தின் மடிகளில்
தமிழைத் தாலாட்டியவர்
சுஜாதா
தமிழின்
மரபுகளையும் விசாரித்து
தொல்லிலக்கியங்களிலும்
தோய்ந்தவர் சுஜாதா
தமிழ்த் திரைப்படங்களில்
ஹாலிவுட் மின்னல்கள்
தெறிக்கச்செய்தவர் சுஜாதா
நகைச்சுவைகளுக்கும்
அறிவுப்பொறிகளுக்கும்
தையலிடாமலேயே
நெய்து வென்றவர் சுஜாதா
அவதூறு விமரிசங்களுக்கும்
அளவோடு மறுமொழி
தந்தவர் சுஜாதா
இருபது வயது
இளைஞனோடும்
இளமைதுள்ள
தோள் சேர்ந்தவர் சுஜாதா
சிற்றிதழ்களிலும்
வெகுஜன பத்திரிகைகளிலும்
ஒரே உயரப்
புகழ் வென்றவர் சுஜாதா
இணையத்திலும்
அச்சுக்களிலும்
இணையாக உலாவந்த
முதல் எழுத்தாளர் சுஜாதா
தன் நாள்
நெருங்கி வருவதை
அறிந்தவராகவும்
அதை நமக்கெலாம்
அறியத்தந்தவராகவும்
இருந்தார் சுஜாதா
பலகோடி தமிழர்களின்
கண்ணீர் அஞ்சலிகளால்
அவர் வழியனுப்பப்படுவார்
என்றும் அறிந்திருந்தார்
சுஜாதா
பிறந்தநாள் மே 3, 1935 - நினைவுநாள் பிப் 27, 2008
என் வலைப்பூவில் வந்து விழுந்த சில இரங்கல்கள்
உங்கள் கவிதை என் துக்கத்தை இன்னும் கூட்டியல்லவோ போய்விட்டது. பத்துவிரல்களாலும் எழுதியவர்.
உண்மையிலும் உண்மை.
It is a great loss and it will take some time for me to recover from it. Usually he replies my email immediately and my last email remains unanswered up to now. It will never be answered again.
anbudan
a.muttulingam
ஒன்பதுமணி வாக்கில் மனுஷ்யபுத்திரனிடம் தொலைபேசியில் உரையாடினேன். கடுமையான மனச்சோர்வுடன்,”இப்பதான் ஆஸ்பத்திரியிலேருந்து வரேன். சுஜாதா ரொம்ப சிக்கலான நெலைமையிலே இருக்கார்” என்றார். ஏற்கனவே ஒருமாதம் முன்பு நுரையீரலில் நீர் கோர்த்து மருத்துவமனையில் தீவிர சிகிழ்ச்சைப்பிரிவில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வீடு திரும்பிவிட்டார் என்றார்கள். சென்னை சென்றால் போய் பார்த்துவிட்டுவரவேண்டுமென்ற ஆசைகூட எனக்கு இருந்தது. அதிர்ச்சியுடன் ”மறுபடியுமா?”என்றேன். இம்முறை தப்புவது கஷ்டம் என்றார் மனுஷ்ய புத்திரன். இப்போது செய்தி வந்திருக்கிறது. சுஜாதா மரணம் அடைந்த்¢ருக்கிறார்.
என்று ஜெயமோகன் தன் அஞ்சலியில் கூறியிருக்கிறார்.
மனுஷ்யபுத்திரனை 'வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது சுஜாதா'ன்னு அதுலே தெரிஞ்சது. இது ஒரு புதிய தகவல்தான் எனக்கு.
மரணம் இயற்கையான நிகழ்வுன்னாலும்.......மனசு தாங்கலை.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய வாசகர்களுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
அழும்போதும் உங்கள் கவிதையின்
அழகுடன் சேர்ந்து கண்ணீர் சொட்டுகிறது
இதைத்தவிர சுஜாதா அவர்களுக்கு
என்ன அஞ்சலி செய்துவிட முடியும்
துயருடன்
சக்தி

மெய்யெழுத்து மறைந்தது
ஆயினும் அவரின்
உயிரெழுத்து மறையாது
வாழ்வில் இறப்பதிலும்
சுஜாதாபோல் மரணத்தில் வாழ
விருப்பம்
இக்பால்
வெகுஜன பத்திரிகைகளிலும்
ஒரே உயரப்
புகழ் வென்றவர் சுஜாதா//
உண்மைதான்.இது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்? இதுவே அவர் இலக்கியத் திறமைக்கு அத்தாட்சி.
அவர் குடும்பத்தாருக்கும் அவரை அறிந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

உங்கள் கவிதை என் துக்கத்தை இன்னும் கூட்டியல்லவோ போய்விட்டது. பத்துவிரல்களாலும் எழுதியவர்.
உண்மையிலும் உண்மை.
It is a great loss and it will take some time for me to recover from it. Usually he replies my email immediately and my last email remains unanswered up to now. It will never be answered again.
anbudan
a.muttulingam

த.பிரபு குமரன்.

புத்தகம் வாசிப்பதில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது அவரால்தான்...
அவர் புகழ் என்றும் மறையாது....
பொன்சந்தர்

அன்புடன்
சிவா...


இனி சுஜாதா தமிழின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் வாழ்வார்! அந்த எழுத்துலக மாமேதைக்கு எங்கள் திருச்சி மாவட்ட படைப்பாளர் சங்க உறுப்பினர்கள் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.> கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழகம்.

P. Kanagasabapathy

I simply assumed that stars like Sujatha live forever and it struck me hard to realize otherwise! 73 is a young age and it is a great loss for us to see him go.
Ravi Chandran
வயது வித்தியாசமில்லாமல் இளையோரும் முதியோரும் அஞ்சலி செழுத்த வந்து நிற்கிறார்கள் சுஜாதாவுக்கு!

It Very nice
Touch of my heart.
success ur field
god with u
Thank u
P.Velmurugan
head, dept. of tamil lit.(UG/PG)
N G M College
pollachi- 642001
Subscribe to:
Posts (Atom)