வாலி வாழி

வலிக்கிறது வாலி
உனக்கு என் உயிரின் அஞ்சலி

வானம் உடைந்தாலும்
உன் வாலிபக் கோட்டை மட்டும்
உடையவே உடையாது

வயதைத் தின்று
வார்த்தைகளில் வாழ்ந்து
விரல் நுனிக் காம்புகளில்
இசைச் சொல் சுரந்த
பத்துப் பத்தாயிரம் மடியே
உனக்கு ஏது மறைவு

வாலி நீ வாழி

உன் அடுத்த பாட்டை
அங்கிருந்தும் எழுது
சிலிர்க்கக் காத்திருக்கிறோம்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வாலி நம் மனதில் என்றும் வாழி தான்...