சிறகுகள் இருந்தும்

சிறகுகள் இருந்தும் பறக்காத பறவை
தனக்கே தனக்கான சிறை

கனவுகள் இருந்தும் கனியாத கண்கள்
சந்தோசம் விலக்கிடும் திரை

இயல்புகள் மறுத்து ஏங்கும் உள்ளம்
வளர்ந்தும் வளராத குறை

உணர்வுகள் இருந்தும் வாழாத உயிர்கள்
மயான நெருப்புக்கே இரை

No comments: