உன் கண்ணீரை
என் கைகளில் ஏந்திக்கொள்கிறேன்

உன் கனவுகள்
நிறைவேறும் வழி சொல்கிறேன்

உன் துயரங்கள்
கரைந்துபோகும் உறவுதருகிறேன்

உன் இதயத்தில்
இருந்துகொண்டு நீயாகிறேன்

உன் தோல்விகளைச்
சுமக்கின்ற தோளாகிறேன்

உன் வெற்றிகளைக்
கொண்டாடும் பூக்களாகிறேன்

உன் குழந்தை மனச்
செயல்களை ரசித்துக்கொள்கிறேன்

உன் திறமை தேடிப்
பாராட்டி உன் வானமாகிறேன்

உன் உணர்வோடு
உணர்வாகும் நிலையாகிறேன்

உன் உயிரோடு
உயிர் கோக்கும் உயிராகிறேன்

ஆகையினால் என் அன்பே...

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

mohamedali jinnah said...

கண்ணைப் பறிக்கும் படம்
கருத்தைத் தரும் கவிதை

கவிதையை மனதில் ஏற்றிக் கொள்கின்றேன்
நினைவில் நிறுத்திக் கொள்கின்றேன்

வெற்றிக்கு வழி வகுக்கின்றேன்
வென்ற பின் வெகுமதி தருகின்றேன்