2

மரணத்திற்கு
உயிர்களிடம் பசியில்லை
அடங்காக் காதலே உண்டு

உயிர்கள் மரணத்தின்
தீனியாவதில்லை
மரணத்தோடு ஐக்கியமாகி
நிகரில்லா நிம்மதி பெறுகின்றன

புலி
உன் உடலை
உண்டு செரிக்கும்
ஏனெனில்
அதன் தேவை சதை

மரணமோ
உயிர்களைத்
தன்னில் தழுவி
தனதாக்கி அணைத்துக்கொள்ளும்
உடல்களை நிராகரிக்கும்

புலி
கவ்விக் குதறும்போது
நீ வேதனைப்படுவாய்

மரணமோ
தழுவ வரும்வரைதான்
பயத்தின் நடுக்கம்
தழுவியபின் சுகம் சுகம்

மரணம் உன்னைக் காதலிக்கிறது

No comments: