3 கைகள் ஏந்தி

கழுத்தில் தொங்கிய
தங்கச் சங்கிலியைக்
காணவில்லை நேற்றுமுதல்

ஓர்
அனாதை ஆசிரமத்திற்கு
வழங்கியிருக்கலாம்

மனம்
எவ்வளவு நிறைவாய்
இருந்திருக்கும்


உருப்படாத படம்
நூறு ரூபாய் தண்டம்

ஓர் ஏழை வீட்டு
அடுப்பெரிக்க
காரணமாயிருந்திருக்கலாம்

நல்லதாய்
நான்கு
வாழ்த்தாவது வந்திருக்கும்



சட்டைப்பையில் இருந்த
பத்து ரூபாய்
பறிபோயிருக்கிறது
பேருந்து நிறுத்தம் வரும்முன்

கண்ணில்லாப்
பிச்சைக்காரிக்கு
கண்திறந்து போட்டிருக்கலாம்

அந்தச் சிரிப்பில்
இறைவனையாவது
பார்த்திருக்கலாம்



சரி சரி

இனியும் இந்த
லாம்... லாம்.... கள் வேண்டாம்
புறப்படு

இன்றைய தேதிக்கு
உன் மனிதாபிமானத்தின்
மதிப்பென்ன

எத்தனையோ
மனிதநேய அமைப்புகள்
கைகள் ஏந்திய வண்ணம்

கொடுக்கத்தான்
மனிதர்கள் இல்லை

No comments: