200605 காதலி வருவாளா


ஆயிரம் பாவையர்
காதல் விழியோடு
ஓருயிர்ப் பூமகள்
தேரில் வருவாளா

வேருக்குள் வேர்விட்டு
பின்னிக் கொள்வாளா
தூருக்குள் நீர்போல
நெஞ்சில் வாழ்வாளா
மூச்சுக்குள் மூச்சாகி
மூச்சைக் காப்பாளா

தாகத்தின் ராகத்தில்
காதல் இசைப்பாளா
மோகத்தின் தாளத்தில்
முத்தம் விதைப்பாளா

தோளில்
ஏறிக் கொள்வாளா
தோளாய்
மாறிக் கொள்வாளா

கீறும்
காதல் நகத்தால்
காவியம் சொல்வாளா

பூஞ்சோலைப் புன்னகையில்
பூபாளம் வேண்டும்
மூக்குத்திப் பூவோடு
மோட்சங்கள் வேண்டும்

ஏக்கம்
எங்கும் எனைக்கொல்ல
தூக்கம்
எங்கோ விடைசொல்ல

தீயில்
தீயும் உயிரால்
தீபம் தேடுகிறேன்

No comments: