Showing posts with label * * * 10 என் பாடல்கள் My Lyrics. Show all posts
Showing posts with label * * * 10 என் பாடல்கள் My Lyrics. Show all posts
மாணிக்க மலரினைப் போலே
மேன்மையாய் கதீஜா பீவி
மெக்கா என்னும் புனித நாட்டில்
வாழ்ந்தவர் ராணி

ஹாத்தமுந் நபியை அழைத்து
வணிகத்தைப் பேசும் பொழுதில்
கண்டநேரம் கண்ணுக்குள்ளே
காதல் உதயம்
காதல் உதயம்

வணிகமும் வெற்றியானதும்
ரசூலுல்லாஹ் திரும்பி வந்ததும்
திருமணம் பேசத் துணிந்ததே
பூமகளின் நெஞ்சமே

மாணிக்க மலரினைப் போலே

201206 நெல்லை சந்திப்பு சினிமா பாடல்

விழிகளில் உதிருதே கனவும் துளியாக
உயிருமே சிதறுதே மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியே
    இவன் சிலுவை என்றானால்
அந்த கடவுள் கூட சிறையிலே 
    ஒரு கைதியாவானோ
            ...விழிகளில் உதிருதே


உண்மை இங்கே ஊனமோ
   கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
   முழு நிலவின் கற்பும் ஏலமோ



விதி செல்லும் பாதை மாயம்
  அதன் காலில் இவன் ஜீவன்

இவன் கூடு எங்கே கிளிகள் எங்கே
   வாழ்ந்த வாழ்வெங்கே
போதும் இது போதும்
   இந்தத் துன்பச் சுமை போதும்     
                              ...விழிகளில் உதிருதே

கலைந்து மாறும் காட்சியோ
   நிஜம் புதைந்துபோகும் சாட்சியோ
மாயம் நியாயம் ஆனதோ
   இவன் தெய்வம் தூங்கிப் போனதோ

கடல் நீரைப் போல கண்கள்
   அதில் கரையும் கனவுகளே
இவன் கனவு எங்கே காதல் எங்கே 
    உறவின் வாழ்வும் எங்கே

போதும் இது போதும்
   இந்த மரண நிழல் போதும்



==========================
பழசு:

விழிகளில் உதிருதே உயிரும் துளியாக
கனவுகள் சிதறுதே மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியே
    இவன் சிலுவை என்றானால்
இந்த தேசம் என்னும் இருளிலே
    மனித வாழ்வு என்னாகும்
            ...விழிகளில் உதிருதே

உண்மை இங்கே ஊனமோ
   கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
   கவரி மானின் கற்பும் ஏலமோ

விதி கண்ணில் பார்வை இல்லை
   அதை வெல்லும் வழி ஏதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
   வாழ்ந்த வாழ்வெங்கே
போதும் இது போதும்
   இந்தத் துன்பச் சுமை போதும்     
                              ...விழிகளில் உதிருதே

தாழை மடலோ தீயிலே
   தாய் ஜீவன் சருகாய் சாயுதே
காலம் கோலம் போடுதே
   கண் நீரும் கடலை மூடுதே

சிறு ஓடைத் தென்றல் மீது
   சுனாமி மோதுவதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
   வாழ்ந்த வாழ்வெங்கே
போதும் இது போதும்
   இந்தத் துன்பச் சுமை போதும்     
                              ...விழிகளில் உதிருதே

=======================

உண்மை இங்கே ஊனமோ
கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
முழு நிலவின் கருவும் ஏலமோ

விதி கண்ணில் பார்வை இல்லை
அதை வெல்லும் வழி ஏதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
வாழ்ந்த வாழ்வெங்கே

போதும் இது போதும்
இந்த துன்பச் சுமை போதும்          
                             
*

விழிகளில் உதிருதே வலியும் துளியாக
உயிருமே சிதறுதே மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியில்
அவன் சிலுவை என்றானால்
இந்த தேசம் என்னும் விதியிலே
இவன் வாழ்வு என்னாகும்
           
*

தாழை மடலோ தீயிலே
தாய் ஜீவன் சருகாய் சாயுதே
காலம் கோலம் போடுதே
கண் நீரும் கடலை மூடுதே

சிறு ஓடைத் தென்றல் மீது
சுனாமி மோதுவதோ


200206 காமெடி பிரியாவிடை ரஹ்மதுல்லா

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா
பாஸ்டனுக்குத் தான் போறியலா - இல்லை
பாஸ்டனையே வாங்கப் போறீயலா

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா - நீங்க
நெனைச்சதெல்லாம் இப்ப நடக்குதய்யா
மனசு நெறஞ்சி போச்சு மாஷால்லா

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா -                        (தனனானா தானேனனா....
ரஹ்மத்தெல்லாம் வந்து கூடுமய்யா - நல்ல
பரக்கத்த்தும் வந்து சேரும்மய்யா

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா
வாழ்க்கை இன்னும் நல்லா ஒசரட்டும்யா - உங்க
வீட்டுக்குள்ள சொர்க்கம் பூக்கட்டும்யா - அதுக்கு
சொல்லிருங்க ஒரு பிஸ்மில்லாஹ் - சொல்லிப்
போய் வாங்க அந்த காஃபத்துல்லாஹ்

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா -                         (தனனானா தானேனனா....
ஒமரு பக்கம் நீங்க ஒதுங்காதீங்க - இந்த
ஒமரு சொல்லை நீங்க கேக்காதீங்க - அவரு
ஓடி வரச்சொன்னா வாராதீங்க - சொல்லும்
ஒரு பேச்சுக்கும் காதைத் தாராதீங்க 

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா
அப்போ அப்போ கனடா வாங்கய்யா - வந்து
அமெரிக்கா பரிசைத் தாங்கய்யா - உங்க
வாழ்க்கையெல்லாம் இனி நலம்தாய்யா - நாங்க
வாழ்த்துகின்றோம் இன்ஷால்லா

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா (தனனானா தானேனனா....

201302 குழந்தை பாடல் - நத்தக்குட்டி

அஞ்சு குட்டிக் குரங்கு குதி குதின்னு
அத்தா மெத்தை மேல குதிச்சிருச்சாம்
ஒத்தை குட்டிக் குரங்கு காலொடஞ்சி
  ஓரமா உக்காந்து அழுதுடுச்சாம்

அத்தா வந்து அதட்ட
அம்மா குச்சை எடுக்க
ஆம்புலன்சு வண்டியும்
வந்துடுச்சாம்

ரெண்டு தையல் போட்டு
நாலு ஊசி குத்தி
எட்டு நாள் மருந்து
முழுங்குனுச்சாம்

இனி எந்தக் குரங்கும் மெத்த மேல
எப்பவும் குதிக்கக் கூடாதுன்னு
மாமா வந்து மடியில அள்ளியெடுத்து
அன்பா பண்பா சொல்லிட்டாராம்

நாலு குட்டிக் குரங்கு குதி குதின்னு
அம்மா மெத்தை மேல குதிச்சிருச்சாம்

மூணு குட்டிக் குரங்கு குதி குதின்னு
மாமா மெத்தை மேல குதிச்சிருச்சாம்

ரெண்டு குட்டிக் குரங்கு குதி குதின்னு
டாடி மெத்தை மேல குதிச்சிருச்சாம்

ஒத்தைக் குட்டிக் குரங்கு குதி குதின்னு
நத்தக்குட்டி மெத்தை மேல குதிச்சிருச்சாம்
 

201609 கேங்பிங் - காமெடி - ரசியா பிரியாணி பாட்டு

பட்டாசா வெடிச்சிக்கிட்டு
பல்லெல்லாம் இளிச்சிக்கிட்டு
பிரியாணிக் குயினுன்னா
மெட்ராசு ரசியாவாம்

ரிய்யாசுத் தட்டுல
ரெண்டு ரெண்டா இட்டாராம்

முண்டாசுக் கட்டிக்கிட்டு
மலையாளம் பறஞ்சிக்கிட்டு
நெஞ்சையெல்லாம் நிமித்திக்கிட்டு
நிஸ்ஸாரு வந்தாரம்

காட்டோரக் கரடிய
கண்டதும் ஒண்ணுக்குப் போனாராம்

மலக்கோட்டத் தங்கச்சி
மட்டன்கறி என்னாச்சு
பீப்புக்கு சிம்பூன்னா
ஆப்புக்கு அண்ணாச்சி

தாளாத பயத்துல
டெண்ட ரெண்டா பிச்சாச்சு

201607 கேம்பிங் - காமெடி - குழந்தைகள் கரடி பாட்டு

கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா (2)
ரக்கூனு மூஞ்சில - ரசத்த ஊத்தி உட்டோண்டா(2)
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா

சியானுக்கே தண்ணிகாட்டும் அயானப் பாருங்க - இவன்
ஆட்டத்தைப் போட்டிபோடும் ஹீரோ சொல்லுங்க
ஆஹா ஆஆஆ.... ஓஹோ ஓஓஓ..... (சியானுக்கே தண்ணிகாட்டும்...)
சின்னக் கையாட்டி சிரிக்கின்ற சிரிப்பப்பாருங்க (2)
இவனால-ரெஸ்டோலே-அட-ரெண்டுபட்டுப் போச்சுங்க

ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா

ஸ்மார்ட்போனும் ஸ்டுபிட்போனா - மாறிப்போச்சுடா - அந்த
வாட்ஸ்ஸ்ஸப்பும் ஃபேஸ்ஸ்புக்கும் ஊத்திக்கிச்சுடா
ஆஹா ஆஆஆ.... ஓஹோ ஓஓஓ..... (ஸ்மார்ட்போனும்...)
மடிக் - கம்ப்யூட்டர் மடியவிட்டு இறங்கிப்போச்சுடா(2)
அதனால-படுஜோரா-தினம்-ஆட்டம் பாட்டம் போட்டோண்டா

ஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா
ஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா
குத்தாட்டம் போட்டோண்டா - மல்லாந்து கெடந்தோண்டா (3)
குத்தாட்டம் போட்டோண்டா...........
குத்தாட்டம்-குத்தாட்டம்-குத்தாட்டம் போட்-டோண்-டாஆஆஆ

201607 கேம்பிங் - காமெடி - கரடி பாட்டு

1
கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா (2)
     ரக்கூனு மூஞ்சில - ரசத்த ஊத்தி உட்டோண்டா(2)
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா
2
பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா (2)
     தட்டானப் பாத்து - தெருப்பேரு கேட்டோண்டா(2)
ஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா
1
நண்டோட கால ஒடச்சி - வறுத்த ஆத்தாவாம் - முத்துப்
பேட்டைக்கே புத்திசொல்லும் - குட்டி ராத்தாவாம்
ஆஹா ஆஆஆ... ஓஹோ ஓஓஓ... (நண்டோட கால ஒடச்சி)
பட்டுக் - கோட்டைக்கே ராணி மட்டும் - சும்மா உட்டுருமா (2)
     கொடுவாவ-கொழம்பாக்கி-கரடி-மூக்கக்கோணல் ஆக்கிருச்சாம்
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா
2
தரையோடு நிலவும் வந்தா - சொர்க்கம் இல்லியா - கீழக்
கரையோடு கோழி வந்தா - சூப்பர் இல்லியா
ஆஹா ஆஆஆ... ஓஹோ ஓஓஓ... (தரையோடு நிலவும் வந்தா)
    சுட்டக் - காலோடு சுடுநாயச் - சுட்டுக்கிட்டோண்டா (2)
    பத்தாம-பரோட்டாவ-சரி-பொறட்டிப் பொறட்டி எடுத்தோண்டா
ஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா
1
ராலோட தோலவுறிக்க - ராஜா வந்தாரம் - அதை
ராவோட ராவாக - வறுத்தும் தந்தாரம்
ஆஹா ஆஆஆ... ஓஹோ ஓஓஓ... (ராலோட தோலவுறிக்க )
மல்லிப் - பட்டீண அக்காவுக்குக் - கரடி பயமாம் (2)
     ஆனாலும்-படுஜோரா-புது-டெண்டுக்குள்ள தூக்கமாம்
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா
2
மலக்கோட்டக் கறியாணம் - டேஸ்டப் பாருங்க - மதுர
முனியாண்டி ஓட்டாண்டி - ஆவப்போறாங்க
ஆஹா ஆஆஆ... ஓஹோ ஓஓஓ... (மலக்கோட்டக் கறியாணம்)
முழுத் - தேங்காய தொம்சம் பண்ணிச் - சட்னி ஆச்சுங்க (2)
     நெய்ஊத்தி-சோறாக்கி-படு-டாப்பு டாப்பு டக்கருங்க
ஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா
1
கம்பத்தில் கட்டியிருக்குங் - கொடியப் பாருங்க - அந்தக்
கருவாட்டில் நெய்வாசம் - வருதாச் சொல்லுங்க
ஆஹா ஆஆஆ.... ஓஹோ ஓஓஓ..... (கம்பத்தில் கட்டியிருக்குங்)
முட்ட - ஆம்லெட்டும் டூனாவும் சண்டை போட்டுச்சாம் (2)
     முழுசாக-வேகாத-அந்த-முட்டதானே ஜெயிச்சிச்சாம்
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா
2
ஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா
1+2
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா

குத்தாட்டம் போட்டோண்டா - மல்லாந்து கெடந்தோண்டா (3)
குத்தாட்டம் போட்டோண்டா...........
குத்தாட்டம்-குத்தாட்டம்-குத்தாட்டம் போட்-டோண்-டாஆஆஆ

201607 கேம்பிங் காமெடி நண்டு

நண்டுக்கு குட்டி நண்டுக்கு
மச்சி மசாலா அறைக்குது
சொந்தங்கள் அதன் பந்தங்கள்
ஒண்ணு சேந்து வேகுது

மச்சானே வந்து நின்னானே - அவன்
மார்பிலே நண்டின் பாசமே
வச்சானே கைய வச்சானே - துப்பும்
ஓட்டையும் கூட காணோமே

தட்டையில் இட்டதென்ன
முத்துப்பேட்ட நண்டா
கொட்டிவிட்டு எட்டிப்பாக்க
செத்துப்போன துண்டா

201801 ஜல்லிக்கட்டு

தொறடா வாடிய விடுடா காளைய
தொறடா வாடிய விடுடா காளைய

கெழக்காலதாம் பாயுது மேற்காலயுந் தாவுது
கெழக்காலதாம் பாயுது மேற்காலயுந் தாவுது

இதமா பதமா அணைச்சி தழுவோணும்
மெதுவா முறையா வீரம் காட்டோணும்
இதமா பதமா அணைச்சி தழுவோணும்
மெதுவா முறையா வீரம் காட்டோணும்

ஆ... அஹ.... ஆ...... அஹ......

பீட்டா வர்ராண்டா
நோட்டம் விட்றாண்டா
நாட்டுக் காளைங்களை
ஓட்டத் துணிஞ்சாண்டா

நாட்டுடமை பாடிக்கிட்டு பீட்டாவப் பாடகட்டு
மறத்தமிழன் வீரம்கேட்டு மறுபடியும் ஜல்லிக்கட்டு

உரமா தரமா தமிழன் காளைங்கடா
ஓடிப் போடா வெள்ளைக் காரைங்களா
ஒண்ணாக் கூடும் சென்னைச் சொந்தமடா
உலகே கேட்கும் உரிமைக் கோசமடா

201707 சாலிகா பாட்டு

என் சிட்டு என் செல்லம் 
என் லட்டு என் லொல்லு
என் சாலி...கா

சட்டுச் சட்டுன்னு சாஞ்சாடும் சாலிகா குட்டீ
செந்தூரச் சந்தனக் கட்டி
சின்னக் கையாட்டி காலாட்டி நீயாடும் ஆட்டம்
தாங்கலியே தங்கக்கட்டி

ஊரெல்லாம் உன்னோட பாட்டக்கேட்டு
சும்மா மயக்கமே போட்டுருச்சு (2)
உனக்காக நான்போட்ட பாட்டெல்லாம்
அட ஒண்ணுமத்துப் போயிருச்சு
கொய்யால....
உனக்காக நான்போட்ட பாட்டெல்லாம்
அட ஒண்ணுமத்துப் போயிருச்சு

சட்டுச் சட்டுன்னு சாஞ்சாடும் சாலிகா குட்டீ
செந்தூரச் சந்தனக் கட்டி
சின்னக் கையாட்டி காலாட்டி நீயாடும் ஆட்டம்
தாங்கலியே தங்கக்கட்டி

நெஞ்செல்லாம் தேனூறிக் கொட்டுறாரு
உன்னைத் தொட்டதுமே சஃபிக் கமாலு (2)
கண்ணெல்லாம் பொன்னாகிப் போறாங்க
உன்னைக் கண்டதுமே சல்வா சஸ்பி
மெய்யாலும்
கண்ணெல்லாம் பொன்னாகிப் போறாங்க
உன்னைக் கண்டதுமே சல்வா சஸ்பி

சட்டுச் சட்டுன்னு சாஞ்சாடும் சாலிகா குட்டீ
செந்தூரச் சந்தனக் கட்டி
சின்னக் கையாட்டி காலாட்டி நீயாடும் ஆட்டம்
தாங்கலியே தங்கக்கட்டி

நீ எப்போதும் எல்லோருக்கும் உயிராக
பெரும் நலமோடு வாழ்வாய் சாலி....

என் சிட்டு என் செல்லம் 
என் லட்டு என் லொல்லு
என் சாலி...ஹா

சட்டுச் சட்டுன்னு சாஞ்சாடும் சாலிகா குட்டீ
செந்தூரச் சந்தனக் கட்டி
சின்னக் கையாட்டி காலாட்டி நீயாடும் ஆட்டம்
தாங்கலியே தங்கக்கட்டி

செல்லக் குட்டியே
சாலிகா சாலிகா
சாலி சாலி
சாலி சாலி...கா

கண்ணுக் குட்டியே
சாலிகா சாலிகா
சாலி சாலி
சாலி சாலி...கா

தங்கக் கட்டியே
சாலிகா சாலிகா
சாலி சாலி
சாலி சாலி...கா


201407 ஒரில்லியா பீச்சுடா

ஒரில்லியா பீச்சுடா... ஊரு பட்ட லூட்டிடா
வூட்டுக்கு வர மன்சே இல்லையடா

ஏரிக்குள்ள ஓட்டண்டா... ஏகப்பட்ட ஆட்டண்டா
முக்கி முக்கி மூச்சே போனதடா

First First பிக்னிக் the Best Best - இதுதான்
First First பிக்னிக் the Best Best

இது டீமாக்கின் சங்கண்டா... பேட்மிட்டன் Club-புடா
தூளு கெளப்ப வேற யாருடா.... ஹோ ஹோ ஹோய்....

* ஒரில்லியா....

காத்தால கரீட்டா ஏழரைக்கே கெளம்பிட்டோம்
-- சூப்பரு அதுதான் சூப்பரு

காடு மேடு கரைகளெல்லாம் சுத்திச் சுத்தி ஓட்டினோம்
--சூப்பரு அதுவும் சூப்பரு

முத்துப் பேட்ட கைலி மடிச்சிகட்டி
ரரா ராஜா டீயாத்துன கெத்து தாங்கல
சுட்டக் கோழி கடிச்சிழுக்கும்போதும்
நுநு நூஹு விட்டடிச்ச ஜோக்கு தாங்கல

அட எல்லாமே... டக்கரு டாப்புடா
நெஞ்சக் கூட்டுல... நிக்கிற நெனப்புடா

அட
குளிக்கக் குளிக்கக் குளிரு போச்சுடா
சுட்டக் கோழி ராலைக் கடிக்கக் கடிக்க சொர்க்கம் ஆச்சுடா

* ஒரில்லியா....

ஆட்டுக்கறி வறுத்துவந்த அன்ஹர்தீனைக் காணல
--புரியல இன்னமும் புரியல

ஆளும்பேரும் பிரிச்சுக்கிட்டு சேவை செஞ்சோம் ஜாலியா
--சூப்பரு அதுதான் சூப்பரு

நண்டையும் குஞ்சையும் அள்ளிக்கிட்டுப் பொண்டுக
சில்லு... தண்ணிக்குள்ள அடிச்ச கொட்டம் ஏரி தாங்கல

அந்த தயிரு சோறே தாங்க முடியா ஜோரு
அட அதுக்குமேல கட்டுச் சோறு கெட்டித் தேனடா

ஆகஸ்டும்... பிக்னிக் போவோணும்
போவாட்டி... டாக்டரைப் பாக்கோணும்

அந்த வாலிபாலு கிரவுண்டுல
படு ஜாலியான ரவுண்டுல
சேட்டை பண்ணி ஆட்டம் போட்டமடா
ஹோ ஹோ ஹோய்

* ஒரில்லியா

201111 நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன் (2)

நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன்
நம் நீதி நாளின் அதிபதியே

அவன் ஓர் நாளும் ஓர் பொழுதும் ஓய்பவனில்லை
யா அல்லாஹ் நீயே!

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
லாயிலாஹா இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் வளில்லாஹ் இல்ஹம்த்

ஈர மண்ணில் ரூஹை ஊதி உயிரைத் தந்தானே
வாழ்வதற்கு வானம் பூமி அமைத்து வைத்தானே
மனப் பாதங்களின் நேர்வழிக்கு மார்க்கம் தந்தான்
அந்த மார்க்கத்தை ஏற்பதற்கு நபியை ஈந்தான்

ஒரெழுத்தும் கற்றிடாத உம்மி நபியை
ஹிராவில் இக்ராஹ் என ஓதச் செய்தான்
குர்’ஆன் வேதமெல்லாம் ஒப்பிக்கும் ஆற்றல் தந்தான்
அந்த வேதமே மனிதனுக்குப் பாதையாக்கினான்

தனக்கான தேவை  இல்லாதவன்
நம் தேவை தீர்க்கும் வல்லோனவன்
அவன் அகிலத்தின் அருளாக நபியைத் தந்தான்
நபி வழியே இஸ்லாம்

ஆதாம் ஹவ்வா இருவரையும் படைத்துச் சேர்த்தவன்
அவர்கள் வழி மனித இனம் பெருகச் செய்தவன்
நாம் மற்றவரை அறிவதற்கு வேற்றுமை கலந்தான்
உயர்ந்தோர் நம்மிடையே அவனை உணர்ந்தோர் என்றான்

இன்னல்களும் இன்பங்களும் நேரும் வாழ்விலே
நேரடியே தன்னை நாட நீதி விதித்தான்
அகில உலகமெங்கும் அடங்கும் யாவும் உரியவன்னல்லாஹ்
யாவும் தன்னிடமே திரும்பிட விதி செய்தான்

இசை - முபீன்
பாடல் - அன்புடன் புகாரி
பாடகர் - எர்பானுல்லாஹ்
அரபிக் கோரஸ்    - முஹமது அலி, ரஷித், அஜிஸ், மலேசியா முஹமது அலி, அன்சாரி, அப்துல்லாஹ், பராஸ், பைசல், மஹ்புஸ் & சலாம் எக்ஸ்பிரஸ்
முகப்பு ஓவியம் - நசிருதீன் மாலிக்

(நான் அனுப்பி வைத்த இறுதிப் பாடல் வரிகள்)

201111 ஈர மண்ணில் ரூகை ஊதி (இறுதி)

ஈர மண்ணில் ரூகை ஊதி வாழ்வைத் தந்தானே
வாழ்வதற்கு வானம் பூமி அமைத்து வைத்தானே
மனப் பாதங்களின் நேர்வழிக்கு மார்க்கம் தந்தான்
அந்த மார்க்கத்தை ஏற்பதற்கு நபியை ஈந்தான்

ஓரெழுத்தும் கற்றிடாத உம்மத்து நபியை
ஹீராவில் கூராக்கள் ஓதச் சொன்னான்
குர்-ஆன் வேதமெல்லாம் ஒப்பிக்கும் ஊக்கம் தந்தான்
அந்த வேதமே மனிதனுக்கு பாதையாக்கினான்

தனக்கான தேவை இல்லாதவன்
நம் தேவை தீர்க்கும் வல்லோனவன்
அவன் தீனோரின் வரமாகத் தொழுகை தந்தான்
நம் நன்றி அதுதான்

பெண்ணின்றால் போகப் பொருள் என்ற பூமியில்
பெண்ணுரிமைக் கொண்டு வாழ நீதி விதித்தான்
அன்று அவதியிலே அடிமைகள் மூழ்கிய பொழுது
எங்கும் அடிமைகளே இல்லையென்று விலங்கை நீக்கினான்

மக்காவில் தீனோர் கண்ணீரில் உருக
குறைசியின் கொடுமை அந்த மண்ணில் பெருக
மதினா நகர் நோக்கி ஹிஜ்ராவின் கட்டளை இட்டான்
எளிய தீனோரை தன் பார்வையில் கொண்டு சேர்த்தான்

நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன்
நம் நீதி நாளின் அதிபதியே
அவன் ஓர் நாளும் ஓர் பொழுதும் ஓய்பவன் இல்லை
நம் பிறப்பும் அவன் கருணை

(சில மாற்றங்களை இசையமைப்பாளர் செய்திருக்கிறார்)

201111 தக்பீர் பாடல்

            கோரஸ்: அல்லாஹு அக்பர்....

பாலைவனம் பால்பொழிய ஏற்றம் வைத்தானே 
   பாதங்களின் நேர்வழிக்கு மார்க்கம் தந்தானே - என்றும்
ஏழைகளைச் செல்வருடன் சேர்த்து வைத்தானே - தொழும்
   ஏகனவன் பள்ளியிலே பேதம் கொன்றானே

மாநபிகள் நாயகத்தை மண்ணில் ஈந்தானே
   ஹீராவில் சூராக்கள் ஓதச் சொன்னானே - அவரோ
ஓரெழுத்தும் கற்றிடாத உம்மத்து நபியே - குர்-ஆன்
   வேதமெல்லாம் ஒப்பிக்கும் ஊக்கம் தந்தானே

தனக்கான தேவை இல்லாதவன்
   நம் தேவை தீர்க்கும் வல்லோனவன்
வழி காட்டும் வரமாக அவன் தொழுகை தந்தான்
   நம் நன்றியே அதுதான்

      கோரஸ்: அல்லாஹு அக்பர்....

பெண்ணென்றால் போகப்பொருள் என்ற பூமியில்
   பெண்ணுரிமை கொண்டுவாழ சட்டம் தந்தானே - அரபியர்
அடிமைகளைக் கொடுமைசெய்த கோர நாட்களில் - எங்கும்
   அடிமைகளே இல்லையென்று விலங்குடைத்தானே

மக்கத்தின் வீதிகளில் கொடுமை எழுந்ததால்
   குறைஷிகளின் அகங்காரம் விஷத்தை உமிழ்ந்ததால் - மதினா
நகர்நோக்கி பயணமாக கட்டளை இட்டானே - எளிய
   முஸ்லிம்களைப் பாதுகாக்கக் கருணை ஈந்தானே

நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன்
   நம் நீதி நாளின் அதிபதியே அவன்
ஓர் நாளும் ஓர் பொழுதும் ஓய்வபவன் இல்லை
   நம் பிறப்பும் அவன் கருணை


      கோரஸ்: அல்லாஹு அக்பர்....

201202 ரிதா காதுகுத்து

ரிதாவின் காதுகுத்து

காது குத்துன நத்தக் குட்டி ஐசு திங்கிறா
ஆமா ஐசு திங்கிறா - அவ
காதப் பாத்துத் தோடப்பாத்து கண்ணு சொக்குறா
ஆமா கண்ணு சொக்குறா

மாலுவனு மாலுக்குள்ள ஆளு போனிச்சு
இந்த ஆளு போனிச்சு
குட்டி ஆளு போனிச்சு
சின்ன ஆளு போனிச்சு - அங்க
காது ரெண்டும் ஓட்டையாயி திரும்பி வந்துச்சு
ஆமா திரும்பி வந்துச்சு

கண்டதுக்கும் கத்திக் கத்தி ஊரக் கூட்டுவா
நல்லா ஊரக் கூட்டுவா - ஆனா
காது குத்தும் போது மட்டும் சிரிச்சி வெக்கிறா
இவ சிரிச்சிக் வெக்கிறா

ஊரு ரொம்ப கெட்டுப் போச்சு ஒண்ணும் புரியல
ஆமாம் ஒண்ணும் புரியல - இவ
அழகப் பாத்து ஆடும் ஆட்டம் தாங்க முடியல
அடடா தாங்க முடியல

மறத்துப் போற மருந்தத் தேடி தாயி ஓடுறா
பாவம் தாயி ஓடுறா - ஆனால்
காதுத்தோட நெனைச்சு நெனைச்சு பொண்ணு மயங்குறா
சும்மா பொண்ணு மயங்குறா

தூளியில ஆடுனவ தோடு போட்டுட்டா
ஆமாம் தோடு போட்டுட்டா - தெனம்
தோடப் பாத்துத் தோடப் பாத்துத் தூக்கம் மறக்குறா
ஆமாம் தூக்கம் மறக்குறா

நாட்டு நெலமை இப்படியா ஆயிப் போச்சுடா
ஆமாம் ஆயிப் போச்சுடா - இந்த
நண்டும் குஞ்சும் ஊரை விக்க வெக்கம் ஆச்சுடா
நமக்கு வெட்கம் ஆச்சுடா

20140222

201405 குர்-ஆன் பாடல்

இஸ்லாமியப் பாடல் - குர்-ஆன் குர்-ஆன்

குர்-ஆன்.... குர்-ஆன்
ஏகனின் அருளே... ஏகனின் அருளே...

குர்-ஆன்.... குர்-ஆன்
ஏகனின் அருளே... ஏகனின் அருளே....

அருள்வழி... திருமொழி....
திருமொழி... அருள்வழி...

இறைவனின் ஒளிவழி
நபிகளின் குரல்வழி
நிறையுதே.....

*

அன்றுமுதல் இன்றுவரை
ஆயிரம் பேச்சு
அவனருளில் வந்ததெல்லாம்
காத்துல போச்சு

நாளும் ஓதுவார்
பொழுதும் ஓதுவார்
நூலில் ஒரு கேள்வி என்றால்
ஓடி ஒதுங்குவார்

யாரும் ஓதவே
ஓதி விளங்கவே
நாயன் குர்-ஆன்
நபிவழியே வந்ததல்லவா 

அன்றுமுதல் இன்றுவரை
ஆயிரம் பேச்சு
அவனருளில் வந்ததெல்லாம்
காத்துல போச்சு

உன் நாவினிலே தவழ்ந்தால்
    வெகு காலம் நெஞ்சில் வாழும்
உன் கண்களிலே நிறைந்தால்
    சிறு உள்ளம் பெரியதாகும்
உன் கருத்தினிலே பதிந்தால்
    இந்த வையம் கையில் அடங்கும்
உன் பெட்டிக்குள்ளே பூட்டியதால்
    பேரருளை இழந்தாய்

அந்த ஏக இறைவன் தந்த
    அருள் வேத நூல் இது
அட இன்று மூடி வைத்தால்
    பின் என்று திறப்பது 
ஒரு பாதை இன்றி பயணம் இன்றி
    எந்த இடத்தைச் சேர்வது

நாளும் ஓதுவார்
பொழுதும் ஓதுவார்
நூலில் ஒரு கேள்வி என்றால்
ஓடி ஒதுங்குவார்

யாரும் ஓதவே
ஓதி விளங்கவே
நாயன் குரான்
நபிவழியே வந்ததல்லவா 

குர்ஆன் வாழ்க்கை கொண்டு வருது
யாரும் வாசல்மூட வேண்டாம்
வெறும் பயத்தை நெஞ்சில் பூட்டி
யாரும் ஓடி ஒளிய வேண்டாம்

இது ஏகன் அவன் ஈகை
யாரும் விழிகள் மூட வேண்டாம்
நபி வாழ்ந்து தந்த வாழ்வை
எவரும் மறந்துபோக வேண்டாம்

அந்த வானம் திறந்த வாசல்
ஏன் சாவி தொலைக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில்
ஏன் வாழ மறுக்கிறாய்

நீ விளக்கம் தேடி ஓதும்போது
இறைவன் கண்கள் ஆகிறான்
நீ விளங்கிக் கொண்டு ஓதும்போது
இறைவன் உனக்குள் வாழ்கிறான்

நாளும் ஓதுவார் பொழுதும் ஓதுவார்
நூலில் ஒரு கேள்வி என்றால் ஓடி ஒதுங்குவார்
யாரும் ஓதவே ஓதி விளங்கவே
நாயன் குரான் நபிவழியே வந்ததல்லவா 

அன்றுமுதல் இன்றுவரை ஆயிரம் பேச்சு
அவனருளில் வந்ததெல்லாம் காத்துல போச்சு
அன்றுமுதல் இன்றுவரை ஆயிரம் பேச்சு
அவனருளில் வந்ததெல்லாம் காத்துல போச்சு

(பாடகர் தாஜுதீன் வேறு மெட்டில் பாடியது வெகு சிறப்பு)

201708 கதிர் வீசிடும் காலை

நண்பர் ஹனிபா அழைத்தார். நண்பரே என் மகன் இஸ்லாமிய மரபு மாத விழாவில் ஒரு பாடல் பாடுகிறான். அதற்கான மெட்டினை அனுப்புகிறேன் தமிழில் பாட்டெழுதி அனுப்ப முடியுமா என்று கேட்டார். கனடா வந்த நாளிலிருந்தே நண்பர் ஹனிபாவை நான் அறிவேன்.

எப்போது பாடல் வேண்டும் என்றேன். இன்னும் பத்து நிமிடத்தில் என்றார் ;-)

நானோ சிறகுப்பந்தாட சென்றுகொண்டிருக்கிறேன். எப்படி? ஆனாலும் வேண்டுகோளை அப்படியே விட்டுவிட விருப்பமில்லை. கார் ஓட்டிச் செல்லும்போதே சில வரிகளை எழுதி முடித்தேன். அப்படி உருவான ஒரு பாடல் தான் இது.

இதை இசையமைப்பாளர் நண்பர் ஹாஜி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அவரும் ஒரு புதுத்தனி மெட்டுப் போட்டு அனுப்பி விட்டு. இன்னும் சில வரிகள் எழுதினால் முழுப்பாடலாய் ஆக்கிவிடலாம் என்று பெருந் தூண்டில் போட்டார்.

நண்பர் ஹனிபா கேட்டது நான்கு வரிகள். இப்போது இது எப்படி வளரப் போகிறதோ தெரியவில்லை. எளிமையான இசைக்கு ஏற்ற என் பாடல் வரிகள் இதோ:

கதிர் வீசிடும் காலை
       உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
        உன்னாலே அல்லாஹ்

நல்வாழ்வினில் பேரருள்
        நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
        நீயே அல்லாஹ்

திருவேதம் நபிநாதர்
        தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் தீனுக்கும்
        நீயே அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹூ அல்லாஹூ
அல்லாஹூ அல்லாஹ்

அன்புடன் புகாரி

நெல்லை சந்திப்பில் என் பாட்டு

பாடல் பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ் ,பாலஅபிராமி
இசை :யுகேந்திரன் வாசுதேவன்.
பாடல் :அன்புடன் புகாரி
இயக்கம் :நவீன்.KBB



உண்மை இங்கே ஊனமோ
கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
முழு நிலவின் கருவும் ஏலமோ

விதி கண்ணில் பார்வை இல்லை
அதை வெல்லும் வழி ஏதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
வாழ்ந்த வாழ்வெங்கே 

போதும் இது போதும்
இந்த துன்பச் சுமை போதும்

*

விழிகளில் உதிருதே
வலியும் துளியாக
உயிருமே சிதறுதே
மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியில்
அவன் சிலுவை என்றானால்
இந்த தேசம் என்னும் விதியிலே
இவன் வாழ்வு என்னாகும்

199101 சுஹைல் குட்டிக்கு செல்லக் குட்டிக்கு


குட்டிக்கு செல்லக் குட்டிக்கு
இன்று பிறந்தநாள் விழா
முத்தங்கள் அள்ளிச் சிந்துங்கள்
அந்தப் பிஞ்சுக் கன்னங்களில்

சின்னதாய் ஒரு சொர்க்கமாய்
வந்தப் பிஞ்சுதான் எந்தன் செல்லமே
பொன்னிலும் இல்லை பூவிலும் இல்லை
கண்மணி இவன் புன்னகை

(குட்டிக்கு)

ஆருயிர் அக்கா உன்னை
அள்ளி நெஞ்சில் சேர்ப்பாள்
தேனைச் சிந்தும் பூவைப்போலே
முத்தம் சிந்தித் தீர்ப்பாள்
தாயின் கண்களில் பூத்துநிற்குது
ஆனந்தப் பொன் பூக்கள்
பாடும் என்னுள்ளே ஆடிநிற்குது
தேன்வழியும் பாக்கள்

கையில் உன்னை அள்ள அள்ள
வாழ்வெனக்குக் கூடும்
கன்னங்களைக் கிள்ளக் கிள்ள
வாடும் உயிர் பூக்கும்

நீ தரும் முத்தம் ஒன்றே
என்றும் சொர்க்கமே

(குட்டிக்கு)

கோவிலில் உன்னைப் போலே
இல்லை ஒரு தீபம்
பூமியில் உன்னைப் போலே
இல்லை ஒரு ராகம்
வாய்மொழியவே தேன்நிலவுமே
உன்னைக் கண்டு ஏங்கும்
பாய்விரிக்கவே மாலைத்தென்றலும்
உன்னைக் கண்டு பாடும்

காலெடுத்து ஓடிவந்து
முத்து முத்தம் தாடா
கைவிரித்து ஆடிவந்து
கட்டிக் கொள்ள வாடா

ஆனந்தம் பொங்கும் இந்தப்
பொன்நாள் வாழ்கவே

(குட்டிக்கு)

*

சிட்டுக்கு சின்னச் சிட்டுக்கு என்ற திரையிசைப் பாடலின் மெட்டில் எழுதப்பட்ட பாடல். என் மகனுக்கான இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் பாட்டு.