தேசியக் கொடிக்கு சல்யூட் அடிப்பது இறைவனுக்கு இணை வைப்பதா?
#அன்புடன்#இஸ்லாம்

கொடியைத் தொழுது துவாச் செய்யாதபோது, அது கூடாததாகாது.

தாயை மதிக்கிறோம்
தந்தையை மதிக்கிறோம்
தாய் மண்ணை மதிக்கிறோம்
தாய் நாட்டை மதிக்கிறோம்
தாய் மொழியை மதிக்கிறோம்
ஆசிரியர்களை மதிக்கிறோம்
தலைவர்களை மதிக்கிறோம்

இப்படியாய் நாம் உயர்வாக எண்ணி மதிப்பவர்கள் அல்லது மதிக்கும் பொருட்கள் ஏராளம். அவையெல்லாம் இறைவன் ஆகாது/ஆகமாட்டான் ஒரு நல்ல முஸ்லிமிற்கு.

அதைத் தெளிவாக அறியாதவன் நல்ல முஸ்லிமும் அல்ல.

மதிக்க வேண்டியவற்றை மதிக்காமல் செல்வது நல்ல முஸ்லிமிற்கு அழகல்ல.

இமாமை மதிக்கிறோம் இறைவனைத் தொழுகிறோம்

ரசூலை மதிக்கிறோம் இறைவனைத் தொழுகிறோம்

என்ன சங்கடம் இருக்கிறது இதில்?

அன்புடன் புகாரி

No comments: