Showing posts with label Thani Thamil. Show all posts
Showing posts with label Thani Thamil. Show all posts

வாட்சப்

WhatsApp என்பதைப் புலனம் என்கிறார்கள் சிலர். என்னாப்பு என்கிறார்கள் சிலர். வாடுசுஅப்பு என்கிறார்கள் சிலர் இப்படியாய் இன்னும் ஏராளம் பல்கிப் பெருகிச் செல்கின்றன
WhatsApp என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லும் இல்லை.
அது ஒரு நிறுவனத்தின் பெயர்.
செய்திகளைப் பகிர்வது அதன் சேவை.
அவ்வளவுதான்.
இதற்கான தமிழ்ச் சொல்லாக்கம் அவசியமற்றது
மைக்ரோ சாப்டுக்கு என்ன தமிழ்ச்சொல்லாக்கம் வைத்திருக்கிறார்களோ எனக்குத் தெரியாது. இதே வேலையாய் அலைகிறார்கள் சிலர்.
வாட்சப்பை நான் வாட்சப் என்றே அழைப்பேன்.
ஏன் என்கிறீர்களா? காரணம் இதோ...
Whats என்பது What's up என்ற ஆங்கிலக் கொச்சை வழக்கு
What’s up is an informal greeting (“Hey, buddy, what’s up?”),
இப்படி ஹே படி வாட்சப் என்று சொல்வது தமிழ் வழக்கப்படி
அண்ணே அண்ணாத்தே அண்ணாச்சி, டேய், பையா, எப்படி? என்ன புதினம்? என்பதுபோல ஊருக்கு ஊர் மாறும்.
App என்பது Application என்பதன் சுருக்கம்.
இனி ஜாலியாக ஒரு சொல்லாக்கம் பார்க்கமால் இதற்கு? https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t57/1/16/1f609.png;-)
Whats Wha's up இன் சுருக்கம்
அண் அண்ணாத்தேயின் சுருக்கம்
App Application னின் சுருக்கம்
நிர் நிரலியின் சுருக்கம்
அப்படீன்னா? அப்படியே வெள்ளைக்காரனை அடியொற்றி....
அண்நிர் என்று அழகாக அழைக்கலாமா https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t57/1/16/1f609.png;-)
WhatsApp என்றால் அண்நிர்
எப்புடீ ?? https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t57/1/16/1f609.png;-) https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t57/1/16/1f609.png;-)




*தனித் தமிழ்த் தாறுமாறுத் தாண்டவம்*

>>>உங்களின் தாழ்வு மனப்பான்மையும் அடிமைப்போக்கும், மற்றவர்களை பாதிக்கக்கூடாது என்பது மட்டுந்தான் எனது கவலை. உங்களின் அரைகுறை தமிழறிவுடன் குமுக வழக்கியல் அறிவுக்குறையும் மிகத்தவறாக உங்களை இட்டுச்செல்கிறது. நாக இளங்கோவன் <<<

இப்படியான அநாகரிகம் தமிழ் மரபே இல்லையே?


உங்களால் மட்டுமே இப்படி வசைபாடமுடியும் என்று எண்ணமா?

ஒரு முட்டாள்தனத்தைக் கையில் வைத்துக்கொண்டு இப்படி வசைபாட வரும் உங்களை தமிழின் முன்னேற்ற வழியில் நிற்கும் நான் எத்தனை வசைபாட முடியும்?

அறிவில்லாத நிலையில் நின்று வசைபாடும் உங்களை அறிவு சார்ந்து வளர்தமிழோடு செல்லும் நான் எத்தனை வசைபாடமுடியும்?

இப்படித்தான் மரபுக் கவிதைதான் கவிதை புதுக்கவிதை கவிதையே அல்ல. நீ தமிழ்க் கவிஞனில்லை என்று தாறுமாக எழுதி வந்தீர்கள் கூட்டம் கூட்டமாக.

உங்கள் மூக்கையெல்லாம் உடைத்து உடப்பில் போட்டுவிட்டு புதுக்கவிதை வானலாவி வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறது

அதையும் தாண்டி நவீனம் பின் நவீனம் என்று சென்றுகொண்டே இருக்கிறார்கள் முன்னேற்ற வளர் தமிழ்ப் பற்றாளர்கள்.

பாலடைந்த மண்டபங்களின்
அழுக்கடைந்த சட்டங்களில்
தொங்கிக்கொண்டிருக்கும்
வவ்வால்கள்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கின்றன
நான் தலைகீழாய் நடக்கிறேனாம்

இதை எப்போதோ எழுதிவிட்டேன் இக்கவிதையை, புதுக்க்க்க்க்க் கவிதையை!

நிறுத்துங்கள் உங்கள் பிதற்றல்களை
நிறுத்தாவிட்டால் நானும் உங்களைப் போலவே தரமிழந்து வாய்மொழி உதிர்க்க வேண்டியதாக இருக்கும்

போற்றுவோர் போற்றட்டும்
தூற்றுவோர் தூற்றட்டும்
தொடர்ந்து என் பணி செய்வேன்
நில்லேன் அஞ்சேன் என்றான் கண்ணதாசன்
அவன் கவிஞன்

உங்களால் எல்லாம் ஒரு கவிஞனையோ அவன் முற்போக்கையோ தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

தொலைந்து போங்கள், தமிழை வாழவிட்டுவிட்டு!

அன்புடன் புகாரி


>>>ஸிந்தனை ஸம்பவம்
பாஹுபலி முதற்கொண்டு காஹம் பஞ்ஜி வரைக்கும் இன்று எழுத்து மாறிநிற்கின்றது. இந்த இழையில் புகாரியவர்களின் கருத்துகளை மறுக்காவிடில் அவற்றையும் மறுக்கமுடியாது.வேல்முருகன் சுப்பிரமணியன்<<<

இதில் நியாயம் இல்லையே?


நான் நல்ல தமிழ் எழுதுகிறேன். கஷ்டம் என்ற சொல்லை கடினம் என்றே சொல்வேன்

விஷம் என்ற சொல்லை விசம் என்றே பலகாலும் எழுதிவருகிறேன். இன்னும் நஞ்சு என்று முழுதாகவே தவிர்க்கிறேன்.

வேஷ்டி முஷ்டி புஷ்டி என்று எல்லாம் எழுதுவதில்லை

என் பழைய கவிதைகளில் உள்ள நிஜம் என்ற சொல்லையும் மாற்றிவருகிறேன்.

நான் தெளிவான தமிழ்த் திசையில் செல்பவன். ஏனெனில் நான் தமிழின் காதலன்.

ஊரில் நான் தமிழில் ஆங்கிலம் கலவாமல் பேசும்போது என்ன ஒருமாதிரி பேசுகிறாய் என்றுதான் கேட்கிறார்கள்.

மலையாளம் தோன்றியது வடசொற்களை 90% ஏற்றதால். ஏற்றபின் எழுத்தைக் கொண்டுவந்தார்கள்.

நாமும் ஏற்றோம் ஒரு பத்து விழுக்காடு இருக்கும். இன்று அதையும் விரட்டியடிக்கிறோம். அதுதான் உண்மையான தமிழ்த்தமிழ்த் தொண்டு. அது வாழ்க வளர்க.

தமிழ் வாழும் மொழுயாய் வாய்மொழியாய் இருக்க வேண்டும் என்பதே என் தேவை. பேச வருபவனையும் குசுப்பு... இடமாசுகசு... குசுவந்த சிங்கு... என்றெல்லாம் சொல்லி ஓட வைக்க என்னால் முடியாது. தமிழன்னை என்னை மன்னிக்க மாட்டாள்

1.

ini solvatharkku onnum ille. ellaam sollitten

என்று எழுதுபவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்

எனக்கு யார் அப்படி மடல் அனுப்பினாலும், மன்னிக்கவும் என்னால் வாசிக்க முடியவில்லை. ஒன்று
தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று சொல்லிவிடுவேன்

2.

அடுத்து புலம்பெயர் பிஞ்சுகள் முழுதாக அந்த அந்த நாட்டின் மொழிக்குள் சென்றுவிட்டனர். அவர்களை மீட்டெடுக்காமல் தமிழ் வாய்மொழியாய் இருக்காது

3.

அடுத்து தமிழைக் கவிதை மொழியாய் மட்டுமே பாவிப்பது பிழை. அதை அறிவியல் மொழியாய்க் கணித மொழியாய் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு சொற்களை நோண்டிக்கொண்டிருக்காமல், அந்தந்த அயல்சொற்களை அப்படியே ஏற்று அறியல் அறிவை விரைந்து வளரச் செய்ய வேண்டும்.

ஆக்சிஜன் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், ஹீலியம் அப்படியே இருக்கட்டும், மைல் கிலோ என்றெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டு கெட்டா போய்விட்டோம்

4.

இலவசத் தமிழ் வகுப்பு இலவச தமிழ் உணவு இலவச பேருந்துசேவை செய்து புலம்பெயர்த் தமிழ்ப் பிஞ்சுகளை மீட்டெடுப்பதே எல்லாவற்றுக்கும் மேலான என் தொண்டாய் இருக்கும். செய்வேன் இறைவன் அருளால்.

தொடங்கிவிட்டேன், என் பணிச்சுமைகளுக்கிடையில் அதை உலகெங்கும் கொண்டு செல்கிறேன்...

துணை நிற்போரை நற்றமிழர் என்று நெஞ்சாரப் புகழ்வாள் தமிழன்னை என்று திடமாக நம்புகின்றேன்

அன்புடன் புகாரி


Krishnan Ramasamy அவர்களோடு ஒரு உரையாடல்

>>>இற்றை மலையாளத்தில் வடசொற்புழக்கம் அவ்வளவு இருப்பது போல் தெரியவில்லை. எழுத்து மாறியபின்பு தான் அங்கு வடசொற்புழக்கம் கூடியது. (என் மதிப்பீடு 50/60 %) <<<

அன்பின் இராமகி ஐயா, மலையாளத்தை நாம் ஒரே மொழியாகப் பார்க்க முடியாது. பேச்சுவழக்கில் ஒரு மலையாளம். மேடையேறினாலோ அல்லது நூல் எழுதினாலோ கையாளப்படும் மலையாளம் இன்னொன்று.

பேச்சு வழக்கில் உள்ள் மலையாளம் கொடுந்தமிழில்தான் அதிகம் இருக்கும். 30% சமஸ்கிருதம் இருக்கலாம்

எழுத்து மற்றும் மேடை வழக்கில் சுமார் 70 லிருந்து 90 வரைகூட இருக்கும்.

நான் கேரளத் தொடர்பு உடையவன், கொறச்சு கொறச்சு மலையாளம் பேசவும் கூடியவன்.

பிழிச்சல், கிழி போன்ற தமிழன் பயன்படுத்தாத அழகு தமிழ்ச் சொற்களை அவர்கள் பயன்படுத்துவதைக் கேட்டு பெரிதும் மகிழ்பவன்.

மலையாளிகளைப் போல் ‘ழ’ வை வெகு நேர்த்தியாக உச்சரிக்கும் தமிழன் மிக மிகக் குறைவு

>>>>அதேபோல் தமிழில் பிறசொல் புழக்கம் பத்து விழுக்காடு என்பதும் சரியில்லை. நீங்கள் இற்றைக் குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் போன்று எதையும் படிப்பதில்லை போலும். குறிப்பாய்க் குமுதம். 30 விழுக்காடாவது உரையாடல்களில் இருக்கும். <<<

இங்கும் தமிழை அப்படியே ஒரு மொழியாகக் கொள்ளமுடியாது. பிராமணர்கள் பேசும் தமிழ் ஏனையோர் பேசும் தமிழ் என்று பிரிக்க வேண்டும். பிராமணர்களின் தமிழில்தான் வடசொல் புழக்கம் 30 விழுக்காடு. ஏனையோரிடம் 10க்கும் குறைவாகிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது மகிழ்வான செய்தி.

>>>தமிழ் மொழி சிதைந்து ஒரு பொன்விழா ஆகப் போகிறது.<<<<

செம்மொழித் தேர்வில் தமிழ் நின்றபோது, சிதையா தமிழ் என்பதே நிறுவப்பட்டது. இன்றும் வள்ளுவன் குறள் புரிகிறது. ஏனையவற்றையும் மீட்டெடுத்திருக்கிறோம் மகிழ்வோடு.

>>>நீங்கள், உங்கள் காலத்தில் படித்த தமிழிலேயே இருக்கிறீர்கள் போலும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஒரு பண்பலை ஒலிபரப்பு என ஏதொன்றையும் நீங்கள் பட்டறிந்ததில்லை போலும். நிலைமை படு மோசம். <<<

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு குட்டிச்சுவராய் இருந்ததைக் கண்டிருக்கிறேன். இப்போது அது செம்மைப் பட்டுக்கொண்டிருப்பதையும் காண்கிறேன். பேச்சுவழக்கின் பொதுத்தமிழை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இடையிடையே ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனபோதிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஏராளமாகக் காண்கிறேன். அதுவே தமிழை பேச்சுவழக்கிலிருந்து அழியாமல் வைத்திருக்கிறது. புலம்பெயர்ந்த பிஞ்சுகளின் காதுகளில் அந்தத் தமிழ்தான் விழுகிறது. அவர்கள் தமிழில் மெல்ல மெல்ல எழுகிறார்கள். ஊடகம் இல்லாமல் போனால் தமிழின் நிலை கொஞ்சம் கவலைக்கிடம்தான். திரையிசைப் பாடல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் உள்ள தமிழர்களை பேச்சுத் தமிழின்பால் இழுத்து வைத்திருக்கிறது. இல்லாதுபோனால், பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யமட்டுமே தமிழ் என்றாகிப் போகும். நாக்கு எனும் ஈர இருக்கையில் தமிழ் உட்காராமல் வழுக்கிக்கொண்டு விழுந்துவிடும்.

>>>இன்று ஏராளமான தமிழிளையர், “ சமாலிஃபய்” என்று சாத்தாரமாய்ச் சொல்லுகிறார். பிறமொழி வினைச் சொற்களைப் பயன்படுத்துவது கூடுகிறது. இது அழிவின் உயர்கட்டம். பெயர்ச்சொற்கள் ஊடுறுவது இயல்பாய் நடப்பது. என்றைக்கு வினைச்சொற்கள் ஒரு மொழியில் ஊடுறுவுகின்றனவோ, அன்று நோய் முற்றி விட்டதென்று பொருள். <<<

இதைத்தான் நானும் சொல்கிறேன். நாம் இருவரும் ஒன்றைத்தான் சொல்கிறோம்.

>>>பிறமொழி வினைச் சொற்களைப் பயன்படுத்துவது கூடுகிறது. <<<

இது கூடவே கூடாது. நான் இதைத்தான் எங்கும் வலியுறுத்துகிறேன்

>>>பெயர்ச்சொற்கள் ஊடுறுவது இயல்பாய் நடப்பது<<<

இதற்கு மட்டும்தான் நான் அந்த நான்கு எழுத்துக்களுக்கு நன்றி சொல்லி ஏற்கிறேன். இதில் பிழை என்பவர்களை நான் கண்டுகொள்வதே இல்லை

>>>என்றைக்கு வினைச்சொற்கள் ஒரு மொழியில் ஊடுறுவுகின்றனவோ, அன்று நோய் முற்றி விட்டதென்று பொருள். <<<

மிக மிக சரி. இதைத்தான் நான் செய்யச் சொல்கிறேன். அதுதான் உண்மையான தனித்தமிழ் நோக்கம் என்றும் சொல்கிறேன். எந்த தமிழ் வார்த்தையும் தெரியாமல் தமிழர்கூட்டம் நான் shoppin போறேன், எனக்கு Sick leave வேண்டும், என் father engineer, என் அக்கா housewife. என்றெல்லாம் உரையாடுகிறார்கள். எந்த வினைச் சொல்லும் பயன்படுத்தாமல் தமிழ் அதல பாதாளம் சென்றுவிட்டது. அதை மீட்டெடுப்போம்

அதைவிட்டுவிட்டு, ஜார்ஜை சாருசு என்றும் டமாஸ்கசை இடமாசுகசு என்றும் குஷ்வந்த் சிங்கை குசுவந்த சிங்கு என்றும் எழுதியா தமிழை வாழவைக்கப் போகிறோம்

இயல்பாக அறிவியலில் புழக்கச் சொற்களை அதன் மொழியிலேயே பயன்படுத்தி அறிவியல் அறிவை வளர்க்கும் போக்கை துரிதப்படுத்தவும் தூண்டவும் வேண்டும் அல்லவா? அதுதான் தமிழின் சேவை. *****தமிழ் வாழும் மொழியாய் இருக்க வேண்டும் அதுதான் என் தேவை*****

அன்புடன் புகாரி
1, 2, 3, 4.... என்பன தமிழ் எழுத்துக்கள் அல்ல
கிலோ மீட்டர், மைல், லிட்டர் போன்றவை எல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல.
a+b, a2 + b2, x = y-a போன்ற கணிதக் குறியீடுகள் எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல.
H2O, NaHCO3, NaBO3, Na2B4O7.10 H2O ஆகிய வேதிக் குறியீடுகள் தமிழ் எழுத்துக்கள் அல்ல
ஹஜஸஷ எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல
தனித்தமிழர் முதல் மூன்றையும் ஏற்கிறார்கள். கடைசியை ஏற்கமாட்டேன் என்கிறார்கள்.
கட்டாயத் தேவை என்பது எங்கே தலை தூக்கி நிற்கிறதோ அங்கே அடங்கவேண்டுமல்லவா?
ஏற்பதல்லவா வளர்ச்சி?
அன்புடன் புகாரி
அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் தமிழ்ச் சொற்களா?
இந்த மயக்கம் பலருக்கும் இருக்கிறது!
அஹர முதஸ எஸுத்தெல்லாம் ஆடி பஹவன் முடற்றே உஷஹு
என்று எழுதினால்தானே கொதிக்க வேண்டும் தமிழன்?
தமிழைத் தமிழாகவே எழுதுகிறவனிடம் தனித்தமிழ் என்று லூட்டி அடிக்க (இலூட்டி ) வருவது அழகா?
அயல்மொழிப் பெயர்ச்சொற்களை எப்படி எழுதினால் என்ன?
இதற்காக செலவிடும் நேரத்தை என்ன செய்யலாம்?
நான் தமிழ்ப்பற்றாளன் நான் ஒரு நல்ல யோசனை தரட்டுமா?
199 நாடுகளில் தமிழ்ப் பிஞ்சுகள் தமிழே பேசாமல் அழிகின்றன.
அவர்களைக் காக்க ஏதேனும் செய்யுங்கள்.
எங்கள் தமிழ்மொழி என்று ஒரு தொண்டியக்கம் தொடங்கி இருக்கிறேன். அதில் வந்து உறுப்பினர் ஆகுங்கள்.
தனித்தமிழ் என்று தமிழை அழிக்கப்பாடுவது தேவையற்ற ஒன்று.
தமிழே இல்லாமல் அடுத்த தலைமுறை அழிந்து போகிறது என்பதை அறியாத அவலம் கொடுமைங்க தமிழரே.
அன்புடன் புகாரி
தனித்தமிழா தனித்துவிடப்பட்ட தமிழா?
*
*
மேதாவித்தனமாய்
நாங்கள்தாம் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள 
பழஞ்சட்டத்தைத்
தூசுகூடத் தட்டாமல் கொண்டுவந்து
கவிஞரே மயக்கம் தீருங்கள் என்கிறீர்கள்
யாருக்கு மயக்கம்?
யார் இன்னும் எழுந்துகொள்ளவே இல்லை?
இப்படித்தான்
கவிதை எழுத உட்கார்ந்தவனை
மரபுக்கவிதை மட்டும்
எழுதச் சொல்லிக்
கொன்று கொலையெடுத்தார்கள்.
விரட்டியடித்து முடிப்பதற்குள்
போதும் போதும் என்றாகிவிட்டது
அவர்களிடமும்
இதைத்தான் சொன்னேன்.
மரபுக்கவிதை வேண்டுமென்றால்
நீங்கள் எழுதுங்கள்.
குசுப்பும் (குஷ்பு)
இடமாசுகசுவும் (டமாஸ்கஸ்)
தேவையென்றால்
நீங்கள் எழுதிக்கொண்டு போங்கள்
நாங்கள் தமிழை வாழவைப்பவர்கள்!
தமிழை அடுத்த தலைமுறைக்கும்
எடுத்துச் செல்பவர்கள்
அப்படியே
பழைய பஞ்சங்கப் பாட்டுப் பாடியே
தமிழைக் கொன்றெடுப்பவர்கள்
அல்லர்
தமிழ்
வெறும் நான்கே எழுத்துக்களைக் கொண்டு
அயலவன் அத்தனை பேரையும்
உண்டு இல்லை என்று பார்க்கிறதென்றால்
நான் பெரிதும் மகிழ்கிறேன்.
வாழ்க தமிழ்
வளர்க கணியுகத் தமிழ்
நிலைக்க பன்நாட்டுக் கூடத்திலும் இளைய தமிழ்
மாற்றம் ஒன்றே மாறாதது.
இந்த நான்கு எழுத்துச் சேர்க்கை எனும் மாற்றம்
இன்று நேற்று வந்ததல்ல.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்தது
++ ஹ
++ ஸ
++ ஜ
++ ஷ
அறியாமல் செய்யவில்லை
அன்றைய அறிஞர்கள்.
குண்டுச் சட்டிக்குள்
குதிரை ஓட்டுபவர்களுக்கும்
கிணற்றுத் தவளைகளுக்கும்
புரியவைப்பது
இயலவே இயலாது
ஏனெனில்
அவர்கள் நோக்கம்
புரிந்துகொள்வதல்ல
நாங்கள் மேதாவி என்று
காட்டிக்கொள்ளும்
பச்சைப் போலித்தனமே
தமிழுக்கு எது முக்கியமோ
அதைவிட்டுவிட்டு
இதில் வரட்டுத்தனமாய்
தானும் சிக்கி
மற்றவர்களையும் சிக்க வைக்கப்
படாத பாடு படுகிறார்கள்.
அதைவிட்டு
அடுத்த தலைமுறைக்கும்
தமிழை அள்ளிக்கொண்டு போகும்
அனைத்தையும் செய்ய வேண்டாமா?
நான் செய்கிறேன்...
இன்று
199 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது.
ஆனால் அத்தனை நாட்டுத் தமிழ்ப் பிள்ளைகளும்
ஆங்கிலத்திலும் அந்தந்த நாட்டு மொழியிலுமே
பேசுகிறார்கள்.
அதை மாற்றுவதற்கு
ஏதாவது செய்தீர்களா?
செய்யும் எண்ணம்தான் உண்டா?
நான்
செய்யப் போகிறேன்
’எங்கள் தமிழ்மொழி’
எனும் தொண்டியத்தில் சேருங்கள்
தமிழன் கால்பதித்த
நாடெல்லாம்
தமிழின் நாடே
என்று காட்ட வாருங்கள்
புலம்பெயர்த் தமிழனின்
அடுத்த தலைமுறைப்
பிஞ்சுநாவுகளிலும்
ஈர இருக்கை
இட்டுத்
தமிழை வாழும் மொழியாய்
அமரச் செய்யுங்கள்
வாருங்கள்
வந்து
என் தொண்டு இயக்கத்திற்குத்
துணை நில்லுங்கள்
எங்கள் தமிழ்மொழி
எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே
அன்புடன்
கவிஞர் புகாரி
ரப்பர் தொழிற்சாலை - அழிப்பான் தொழிற்சாலை என்று அமைந்தால் அமங்களம்.
இரப்பர் தொழிற்சாலை என்றால் பிச்சைக்காரர்கள் தொழிற்சாலை ஆகிவிடும்...
- கவியரசு கண்ணதாசன்
😀😀🤣🤣😅😅
*
ஒரு பிரபலமான புதுக்கவிதை
இரிசி கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
இணைந்த இபாப்பி
😀😀🤣🤣😅😅
199 நாடுகளில்
தமிழ்ப்பிஞ்சுகள்
தமிழே பேசாமல்
அழிகின்றன.
அவர்களைக் 
காக்க
என்ன செய்யலாம்?
உங்கள் கருத்துக்களைப் பரிந்துரைத்தால் நலமாக இருக்கும்
அன்புடன் புகாரி
அவனவன் பெயரை அவனவன் முடிவு செய்வான் எப்படி எழுதுவதென்று.
அயல் ஊர் அயல் நாடு போன்ற பெயர்களை இயன்றவரை உச்சரிப்பு மேலோங்க எழுதுவோம்.
கிரந்தத்தைக் கட்டாயம் பயன்படுத்துவோம் என்று இங்கே யாரும் சத்தியாகிரகம் செய்யவில்லை
புஹாரியை புகாரி என்றே எழுதுகிறேன்
ஜார்ஜ் என்பதை சாருசு என்று எழுதுவது நிச்சயமாகச் சரியில்லை என்பது உறுதியாக எனக்குத் தெரியும்.
குஷ்வந்த் சிங்கை குசுவந்த சிங்கு என்று எழுதுவதில் ஏற்பில்லை.
சிறப்புப் பெயர்ச்சொற்களை எப்படி எழுதுவதென்பது என் தேர்வு.
நான் தமிழன், என் மொழியில் நான் எழுதுகிறேன். இதில் எவரின் தனித் தலையீட்டையும் விரும்புவதில்லை.
தமிழ்ச் சொல் எழுதும்போது நான் வேஷ்டி முஷ்டி என்று எழுதினால் நீங்கள் யார் வேண்டுமானாலும் என்னை வந்து ஓர் அதட்டலே போடலாம்
வேறு நிலைப்பாட்டோடு யார் வந்தாலும் நான் அன்பு பொங்க ஓர் அதட்டல் போடுவதைத் தவிர்ப்பதரிது
அன்புடன்
கவிஞர் புகாரி
இயல்பு இலக்கியம் இலக்கணத்துக்குள் அடங்காது

கவிஞர் புகாரி


அன்பு நண்பர் மணி வண்ணன்,
உங்கள் கருத்துப்படியே 
நான் தமிழ் இலக்கணமே தெரியாதவனாய் 
அப்படியே இருந்துவிட்டுப் போகிறேனே
உங்கள் கருத்து என்பது 
உங்கள் கருத்து
அது என் கருத்தாகவோ
இந்த உலகக் கருத்தாகவோ
ஆகிவிடுமா?
நான் நானா 
அல்லது நீங்கள் சொல்பவனா 
என்பதில் சர்ச்சையே தேவையில்லை
என்று தெளிபவன் நான்
யார் யாரை 
எப்படிப் பார்க்கிறார்களோ 
அப்படித்தான் அவரா 
அல்லது அவர் என்பவர் 
அவரே அறியாத 
மாய மனிதரா
இலக்கியம் 
முதலாக வந்தது 
இலக்கணம் 
பிறகுதான் வந்தது என்று 
தெளிவாக அறிந்தவன் 
நான்
இன்றைய தமிழுக்கு 
அகராதியே போட்டுவிட்டார்கள்.
இன்றல்ல 
சுமார் 30 ஆண்டுகளுக்கும் முன்
என்னிடம் பழைய 
க்ரியா தமிழகராதி 
நெடுங்காலமாய் உண்டு
இதோ தமிழில் தட்டச்சிக்கொண்டிருகிறேன்.
என்னால் ஹ ஜ ஸ ஷா என்று 
சரளமாகத் தட்டச்ச முடிகிறது
தமிழ்த் தட்டச்சு நிரலிகள் 
தாராளமாக அந்தச் சலுகையைத்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் 
வழங்கியுள்ளன
நீங்கள் சரியான கதவைத்தான் 
தட்டுகிறீர்களா என்று
நீங்களே 
சிந்தித்துக்கொள்ளுங்கள்
அன்புடன் 
கவிஞர் புகாரி

இலக்கணம் என்பது
ஆணி அடித்து நிறுத்தப்பட்டதல்ல
நிறுத்தப்படவும் கூடாது
மொழி வளரக் கூடியது
அதன் வளர்ச்சியைத் தடுக்கும்
சக்திகளைத் தாண்டி
அது செழித்து வளரக்கூடியது
தமிழ் மொழியும்
அப்படியான மொழிகளுள் ஒன்று
இன்றும் என்னை
யாப்பு கோத்து
மரபுக்கவிதைதான்
நீ எழுதவேண்டும் என்று
வம்படியாய் வாதிடும்
பழமைவாதிகள் இருக்கிறார்கள்
தமிழ் இலக்கணம் தாண்டி
நீ கவிதை எழுதக் கூடாது
உனக்குத் தமிழ் இலக்கணம்
தெரியவில்லை
நீ கவிஞன் இல்லை
என்றெல்லாம்
சினம் ஊூட்டப் பார்க்கிறார்கள்
ஆனால்
நான் சினம் கொள்வதில்லை
தக்க பதிலை உரைத்துவிட்டு
என் தமிழோடு தமிழாகி
தமிழ்க் கவிதைகள் படைத்து
தமிழுலகிற்கு விருந்து வைக்கிறேன்
வாழ்க தமிழ்
வெல்க வளர் தமிழ்த் தேன்மொழி
கவிஞர் புகாரி
நண்பர் வேந்தன் அரசு,
உங்களுக்கு
மலையாளம் எப்படி வந்தது என்பதில்
பெருங்குழப்பம் இருக்கிறது
எனக்கு விளக்க நேரமில்லை
என்றாலும் ஒரு சில சொற்களில்...
வடசொற்களை
அளவுக்கதிகமாக உட்கொண்டதால்...
மலையாளம் வந்தது
தமிழ் ஒரு 10% உட்கொண்டிருக்கும்.
அதையும் பின் விரட்டத் தொடங்கிவிட்டது
மலையாளம் அப்படியே
வடமொழியை ஏற்றது
இனியும் ஏற்கிறது
புதிதாகவும் சேர்க்கிறது
அதுமட்டுமல்ல
தமிழை செம்மையாய் உச்சரிக்காமல்
கொடுந்தமிழையே
எழுத்திலும் எழுதத் தொடங்கினார்கள்
அது ஒரு முக்கிய காரணம்
எழுத்து என்ன செய்யும்
சில்லறை விடயம்.
சொற்கள் கலப்பதே
பெரிய மாற்றம்
யானை போவது தெரியாத
கண்களுக்குத்தான்
எறும்பு போவது தெரியுமாம்
அப்படியான தொரு கண்கள்
உங்களுடையவை
வேந்தரே
இராசு இராசேந்திரரே
அன்புடன் புகாரி
குறைகளைக் கண்டுபிடித்துவிட்டால் பின் நிவர்த்திகளைக் கண்டுபிடிப்பது எளிது
ஒரு நக்கீரன் பல நல்ல இலக்கியத்திற்குக் காரணமாய் இருந்திருக்கிறான்
நடைமுறைச் சிக்கலே ஏதென்றறியாதவன் பழமையில் உறைந்து அப்படியே உதிர்ந்தும் விடுகிறான்
வரட்டுத்தனம் தவிர்த்து ஆக்கப்பூர்வ செயலில் ஈடுபட்டால் தமிழ் தழைத்துச் செழிக்கும்
தமிழில் அறிவியலில் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம்
ஆக்ஸிஜன் என்று எழுத அனுமதிக்காத நிலையில் அறிவியல் கல்வி துரிதமாக வளர வழியே இல்லை
உயிர்க்காற்று, பிரானவாயு என்று ஆரம்பித்துவிடுவார்கள். கல்விபயிலும் கன்றுகளைக் கொன்றெடுப்பார்கள்.
இட்லியை தமிழன் கண்டுபிடித்தான் அது இட்லி என்றுதான் உலக மொழிகள் அனைத்திலும் புழங்கப்படவேண்டும்
அதுபோலத்தான் ராக்கெட்டும், நீயூட்ரானும், ஹீலியமும்...
ஒவ்வொன்றையும் குழப்பிக்கொண்டிருந்தால், கற்பதுதான் தடைபடும் அல்லது மந்த நிலையில் செல்லும்
அறிவியல் கற்க தமிழறிஞனாய் இருக்கவேண்டிய அவசியல் இல்லை
அன்புடன் புகாரி
ஒரே ஒரு கேள்விக்கு ஒரே ஒரு பதில் தேவை
புதுக்கவிதை எழுதலாமா கூடாதா?
புதுக்கவிதை தமிழ்க் கவிதை இலக்கணத்தில் எங்கே வருகிறது?
காக்கா காகம்
இந்த இரண்டு சொல்லின் உச்சரிப்பு என்ன? தலைக்காவுக்கும் ஒற்றுக்குப்பின் உள்ள காவுக்கும் மெலிந்தொலிக்க வழியுண்டா? இப்படியெல்லாம் நான் கேட்டு நேரத்தை வீணடிக்கவில்லை. இதெல்லாம் நன்றாகவே நமக்குத் தெரியும்.
என் கேள்வி ஒன்றுதான். உங்கள் பதில் வருமா?
புதுக்கவிதையை தமிழன் எழுதலாமா கூடாதா? அது எந்தத் தமிழ் இலக்கணத்தில் வருகிறது?
அன்புடன் புகாரி
தமிழன் நன்றாக புதுக்கவிதைகளை இயற்றலாம்.
அதற்காக மரபுக்கவிதைகளை பழிக்கலாகாது.
அதாவது தமிழன் நன்றாகக் கிரந்தம் எழுதலாம், குசுப்பு என்று எழுதுகிறவர்களையும் சானி என்று எழுதுகிறவர்களையும் இடமாசுகசூ என்று எழுதுகிறவர்களையும் பழிக்காமல் இருந்தால் சரி.
அப்படித்தானே?
பழித்தது நானல்ல நண்பரே. ஜெயபாரதன் என்று எழுதாதீர்கள் நீங்கள் தமிழ் இலக்கணம் அறியாத தத்தி செயபாரதன் என்று எழுதுங்கள் என்று பழித்துக் கூறுவது யார்?
அதற்கான பதிலடிகளையே நாங்கள் தருகிறோம்.
கிள்ளிவிட்டவரே தொட்டிலாட்ட வருவதோ?
குஷ்வந்த் சிங் என்று எழுதினால் நீங்கள் தமிழே அறியாதவர், தமிழ் இலக்கணமே தெரியாதவர் ஆகவே குசுவந்த சிங்கு என்று எழுதுங்கள் என்று சொல்வது யார்?
போய் பிழைப்பைப் பாருங்கள் சார், தமிழ் வளரட்டும்.
இளைய தலைமுறையை எப்படித் தமிழில் உரையாட வைப்பது என்பதில் கவனம் செலுத்துங்கள். அதுவே ஆக்கப் பூர்வமானது
என் கேள்வி புரியவில்லையா? இந்த தாராளமா படைக்கலாம் என்ற உரிமையை உங்களுக்குத் தந்தது யார்?
தொல்காப்பியனா?
தமிழ் இலக்கணத்தில் எங்கே இருக்கிறது புதுக்கவிதை, ஹைக்கூ, நவீனகவிதை எல்லாம்?
தமிழ் இலக்கணத்தில் புதுக்கவிதை ஹைக்கூ கவிதை எல்லாம் இல்லாதபோது, கிரந்தம் மட்டும் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
இப்படி ஒவ்வொண்ணா எடுத்துக் கொடுத்து கேட்க வேண்டுமா நான்?
உங்களுக்கே தெரியாதா?
ஆய்வு செய்யமாட்டீர்களா?
கிளிப்பிள்ளையா நீங்கள்?
அன்புடன் புகாரி
>>>ஸிந்தனை ஸம்பவம்
பாஹுபலி முதற்கொண்டு காஹம் பஞ்ஜி வரைக்கும் இன்று எழுத்து மாறிநிற்கின்றது. இந்த இழையில் புகாரியவர்களின் கருத்துகளை மறுக்காவிடில் அவற்றையும் மறுக்கமுடியாது.வேல்முருகன் சுப்பிரமணியன்<<<
இதில் நியாயம் இல்லையே?
நான் நல்ல தமிழ் எழுதுகிறேன். கஷ்டம் என்ற சொல்லை கடினம் என்றே சொல்வேன்
விஷம் என்ற சொல்லை விசம் என்றே பலகாலும் எழுதிவருகிறேன். இன்னும் நஞ்சு என்று முழுதாகவே தவிர்க்கிறேன்.
வேஷ்டி முஷ்டி புஷ்டி என்று எல்லாம் எழுதுவதில்லை
என் பழைய கவிதைகளில் உள்ள நிஜம் என்ற சொல்லையும் மாற்றிவருகிறேன்.
நான் தெளிவான தமிழ்த் திசையில் செல்பவன். ஏனெனில் நான் தமிழின் காதலன்.
ஊரில் நான் தமிழில் ஆங்கிலம் கலவாமல் பேசும்போது என்ன ஒருமாதிரி பேசுகிறாய் என்றுதான் கேட்கிறார்கள்.
மலையாளம் தோன்றியது வடசொற்களை 90% ஏற்றதால். ஏற்றபின் எழுத்தைக் கொண்டுவந்தார்கள்.
நாமும் ஏற்றோம் ஒரு பத்து விழுக்காடு இருக்கும். இன்று அதையும் விரட்டியடிக்கிறோம். அதுதான் உண்மையான தமிழ்த்தமிழ்த் தொண்டு. அது வாழ்க வளர்க.
தமிழ் வாழும் மொழுயாய் வாய்மொழியாய் இருக்க வேண்டும் என்பதே என் தேவை. பேச வருபவனையும் குசுப்பு... இடமாசுகசு... குசுவந்த சிங்கு... என்றெல்லாம் சொல்லி ஓட வைக்க என்னால் முடியாது. தமிழன்னை என்னை மன்னிக்க மாட்டாள்
1.
ini solvatharkku onnum ille. ellaam sollitten
என்று எழுதுபவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்
எனக்கு யார் அப்படி மடல் அனுப்பினாலும், மன்னிக்கவும் என்னால் வாசிக்க முடியவில்லை. ஒன்று
தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று சொல்லிவிடுவேன்
2.
அடுத்து புலம்பெயர் பிஞ்சுகள் முழுதாக அந்த அந்த நாட்டின் மொழிக்குள் சென்றுவிட்டனர். அவர்களை மீட்டெடுக்காமல் தமிழ் வாய்மொழியாய் இருக்காது
3.
அடுத்து தமிழைக் கவிதை மொழியாய் மட்டுமே பாவிப்பது பிழை. அதை அறிவியல் மொழியாய்க் கணித மொழியாய் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு சொற்களை நோண்டிக்கொண்டிருக்காமல், அந்தந்த அயல்சொற்களை அப்படியே ஏற்று அறியல் அறிவை விரைந்து வளரச் செய்ய வேண்டும்.
ஆக்சிஜன் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், ஹீலியம் அப்படியே இருக்கட்டும், மைல் கிலோ என்றெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டு கெட்டா போய்விட்டோம்
4.
இலவசத் தமிழ் வகுப்பு இலவச தமிழ் உணவு இலவச பேருந்துசேவை செய்து புலம்பெயர்த் தமிழ்ப் பிஞ்சுகளை மீட்டெடுப்பதே எல்லாவற்றுக்கும் மேலான என் தொண்டாய் இருக்கும். செய்வேன் இறைவன் அருளால்.
தொடங்கிவிட்டேன், என் பணிச்சுமைகளுக்கிடையில் அதை உலகெங்கும் கொண்டு செல்கிறேன்...
துணை நிற்போரை நற்றமிழர் என்று நெஞ்சாரப் புகழ்வாள் தமிழன்னை என்று திடமாக நம்புகின்றேன்
அன்புடன் புகாரி
Krishnan Ramasamy அவர்களோடு ஒரு உரையாடல்
>>>இற்றை மலையாளத்தில் வடசொற்புழக்கம் அவ்வளவு இருப்பது போல் தெரியவில்லை. எழுத்து மாறியபின்பு தான் அங்கு வடசொற்புழக்கம் கூடியது. (என் மதிப்பீடு 50/60 %) <<<
அன்பின் இராமகி ஐயா, மலையாளத்தை நாம் ஒரே மொழியாகப் பார்க்க முடியாது. பேச்சுவழக்கில் ஒரு மலையாளம். மேடையேறினாலோ அல்லது நூல் எழுதினாலோ கையாளப்படும் மலையாளம் இன்னொன்று.
பேச்சு வழக்கில் உள்ள் மலையாளம் கொடுந்தமிழில்தான் அதிகம் இருக்கும். 30% சமஸ்கிருதம் இருக்கலாம்
எழுத்து மற்றும் மேடை வழக்கில் சுமார் 70 லிருந்து 90 வரைகூட இருக்கும்.
நான் கேரளத் தொடர்பு உடையவன், கொறச்சு கொறச்சு மலையாளம் பேசவும் கூடியவன்.
பிழிச்சல், கிழி போன்ற தமிழன் பயன்படுத்தாத அழகு தமிழ்ச் சொற்களை அவர்கள் பயன்படுத்துவதைக் கேட்டு பெரிதும் மகிழ்பவன்.
மலையாளிகளைப் போல் ‘ழ’ வை வெகு நேர்த்தியாக உச்சரிக்கும் தமிழன் மிக மிகக் குறைவு
>>>>அதேபோல் தமிழில் பிறசொல் புழக்கம் பத்து விழுக்காடு என்பதும் சரியில்லை. நீங்கள் இற்றைக் குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் போன்று எதையும் படிப்பதில்லை போலும். குறிப்பாய்க் குமுதம். 30 விழுக்காடாவது உரையாடல்களில் இருக்கும். <<<
இங்கும் தமிழை அப்படியே ஒரு மொழியாகக் கொள்ளமுடியாது. பிராமணர்கள் பேசும் தமிழ் ஏனையோர் பேசும் தமிழ் என்று பிரிக்க வேண்டும். பிராமணர்களின் தமிழில்தான் வடசொல் புழக்கம் 30 விழுக்காடு. ஏனையோரிடம் 10க்கும் குறைவாகிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது மகிழ்வான செய்தி.
>>>தமிழ் மொழி சிதைந்து ஒரு பொன்விழா ஆகப் போகிறது.<<<<
செம்மொழித் தேர்வில் தமிழ் நின்றபோது, சிதையா தமிழ் என்பதே நிறுவப்பட்டது. இன்றும் வள்ளுவன் குறள் புரிகிறது. ஏனையவற்றையும் மீட்டெடுத்திருக்கிறோம் மகிழ்வோடு.
>>>நீங்கள், உங்கள் காலத்தில் படித்த தமிழிலேயே இருக்கிறீர்கள் போலும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஒரு பண்பலை ஒலிபரப்பு என ஏதொன்றையும் நீங்கள் பட்டறிந்ததில்லை போலும். நிலைமை படு மோசம். <<<
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு குட்டிச்சுவராய் இருந்ததைக் கண்டிருக்கிறேன். இப்போது அது செம்மைப் பட்டுக்கொண்டிருப்பதையும் காண்கிறேன். பேச்சுவழக்கின் பொதுத்தமிழை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இடையிடையே ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனபோதிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஏராளமாகக் காண்கிறேன். அதுவே தமிழை பேச்சுவழக்கிலிருந்து அழியாமல் வைத்திருக்கிறது. புலம்பெயர்ந்த பிஞ்சுகளின் காதுகளில் அந்தத் தமிழ்தான் விழுகிறது. அவர்கள் தமிழில் மெல்ல மெல்ல எழுகிறார்கள். ஊடகம் இல்லாமல் போனால் தமிழின் நிலை கொஞ்சம் கவலைக்கிடம்தான். திரையிசைப் பாடல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் உள்ள தமிழர்களை பேச்சுத் தமிழின்பால் இழுத்து வைத்திருக்கிறது. இல்லாதுபோனால், பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யமட்டுமே தமிழ் என்றாகிப் போகும். நாக்கு எனும் ஈர இருக்கையில் தமிழ் உட்காராமல் வழுக்கிக்கொண்டு விழுந்துவிடும்.
>>>இன்று ஏராளமான தமிழிளையர், “ சமாலிஃபய்” என்று சாத்தாரமாய்ச் சொல்லுகிறார். பிறமொழி வினைச் சொற்களைப் பயன்படுத்துவது கூடுகிறது. இது அழிவின் உயர்கட்டம். பெயர்ச்சொற்கள் ஊடுறுவது இயல்பாய் நடப்பது. என்றைக்கு வினைச்சொற்கள் ஒரு மொழியில் ஊடுறுவுகின்றனவோ, அன்று நோய் முற்றி விட்டதென்று பொருள். <<<
இதைத்தான் நானும் சொல்கிறேன். நாம் இருவரும் ஒன்றைத்தான் சொல்கிறோம்.
>>>பிறமொழி வினைச் சொற்களைப் பயன்படுத்துவது கூடுகிறது. <<<
இது கூடவே கூடாது. நான் இதைத்தான் எங்கும் வலியுறுத்துகிறேன்
>>>பெயர்ச்சொற்கள் ஊடுறுவது இயல்பாய் நடப்பது<<<
இதற்கு மட்டும்தான் நான் அந்த நான்கு எழுத்துக்களுக்கு நன்றி சொல்லி ஏற்கிறேன். இதில் பிழை என்பவர்களை நான் கண்டுகொள்வதே இல்லை
>>>என்றைக்கு வினைச்சொற்கள் ஒரு மொழியில் ஊடுறுவுகின்றனவோ, அன்று நோய் முற்றி விட்டதென்று பொருள். <<<
மிக மிக சரி. இதைத்தான் நான் செய்யச் சொல்கிறேன். அதுதான் உண்மையான தனித்தமிழ் நோக்கம் என்றும் சொல்கிறேன். எந்த தமிழ் வார்த்தையும் தெரியாமல் தமிழர்கூட்டம் நான் shoppin போறேன், எனக்கு Sick leave வேண்டும், என் father engineer, என் அக்கா housewife. என்றெல்லாம் உரையாடுகிறார்கள். எந்த வினைச் சொல்லும் பயன்படுத்தாமல் தமிழ் அதல பாதாளம் சென்றுவிட்டது. அதை மீட்டெடுப்போம்
அதைவிட்டுவிட்டு, ஜார்ஜை சாருசு என்றும் டமாஸ்கசை இடமாசுகசு என்றும் குஷ்வந்த் சிங்கை குசுவந்த சிங்கு என்றும் எழுதியா தமிழை வாழவைக்கப் போகிறோம்
இயல்பாக அறிவியலில் புழக்கச் சொற்களை அதன் மொழியிலேயே பயன்படுத்தி அறிவியல் அறிவை வளர்க்கும் போக்கை துரிதப்படுத்தவும் தூண்டவும் வேண்டும் அல்லவா? அதுதான் தமிழின் சேவை. *****தமிழ் வாழும் மொழியாய் இருக்க வேண்டும் அதுதான் என் தேவை*****
அன்புடன் புகாரி
1, 2, 3, 4.... என்பன தமிழ் எழுத்துக்கள் அல்ல
கிலோ மீட்டர், மைல், லிட்டர் போன்றவை எல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல.
a+b, a2 + b2, x = y-a போன்ற கணிதக் குறியீடுகள் எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல.
H2O, NaHCO3, NaBO3, Na2B4O7.10 H2O ஆகிய வேதிக் குறியீடுகள் தமிழ் எழுத்துக்கள் அல்ல
ஹஜஸஷ எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல
தனித்தமிழர் முதல் மூன்றையும் ஏற்கிறார்கள். கடைசியை ஏற்கமாட்டேன் என்கிறார்கள்.
கட்டாயத் தேவை என்பது எங்கே தலை தூக்கி நிற்கிறதோ அங்கே அடங்கவேண்டுமல்லவா?
ஏற்பதல்லவா வளர்ச்சி?
அன்புடன் புகாரி