கொல்லாப்பாவம்
*
சிதறியடிக்கும் சேறு 
நம் மூக்கில்
வேண்டாம்தான்
கண்டதிலும் கல்லெறிய
*
சாக்கடைப் பன்றி 
உரச வருங்கால் 
ஓடவேண்டும்தான் 
வீட்டிற்குள்
*
ஆனபோதிலும்
உள்ளறைக்குள்ளேயே
வெறிநாய் நுழைந்துவிடின்
தயங்கத்தான் வேண்டுமா
கொன்றுபோட

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

// அக அறைக்குள்ளேயே.. //

சொன்னவிதம் அருமை... தொடர வாழ்த்துக்கள்...