மூன்று வயதில்
என்னை
என் தாயிடமிருந்து
பிரித்தார்கள

பள்ளிக்கு அனுப்பி
வைத்தார்கள்

அ எழுது என்றார்கள்
அ எழுதினேன்

ஆ எழுது என்றார்கள்
ஆ எழுதினேன்

இ எழுது என்றார்கள்
நான் அழுதுவிட்டேன்

முக்காடு
போட்டுக்கொண்டு
சிரித்த முகத்துடன்
இருக்கும்
என் அம்மாவைப் பார்த்தால்
’இ’ என்ற
உயிரெழுத்து போலவே
இருக்கும்

1 comment:

mohamedali jinnah said...

உங்கள் துடிப்புகளோடு என் துடிப்புகள் மெட்டுக் கட்டுகின்றன
அ எழுதி அம்மாவுக்கு நிறைவான கவிதைகள்
ஆ எழுதி அம்மாவை தந்த அந்த ஆண்டவனுக்கு (அல்லாஹ்வுக்கு) நன்றி செய்யும் முகமாக தொழுது வருகிறீர்கள்
இ எழுதி இனிய கவிதைகளை தந்து இனிய மகிழ்வடைவது உங்கள் இன்பம்
அன்புடன்
முகம்மது அலி