நட்பு காதல் கணவன்

நட்பைவிட காதல் ஒருபடியேனும் அதிக நெருக்கம் தரும். ஏதோ புரிந்துணர்வில் இடறல் இருப்பதுபோல் தெரிகிறது. காதலன் வந்து சமாதானம் சொல்லும்போது அந்த ஊடல் வெடிப்பில் அணைப்பூ பூக்குமே அது வரம்.

காதல் கல்யாணத்தில் முடிந்தபின் அன்பின் அபரிமிதமான எதிர்பார்ப்பால் மீண்டும் விரிசல் வருவது சகஜம். ஆனால் ஒரு நாள் சூழல் சரியாக அமையும்போது, காதலனைப்போலவே கணவனின் அக்கறையும் பாசம் அன்பும் வெளிப்படும்.

உரிமை என்று ஆனதும் பலரும் மெத்தனமாய் இருந்துவிடுவது இயல்பு. கிணற்று நீருக்கும் ஆற்று நீருக்கும் உள்ள வித்தியாசம்.

ஆற்றுநீர் நம்நீரல்ல பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஓடிப்போய்விடும். கிணற்றுநீர் சலனமற்றுக்கிடந்தாலும் நம் முகத்தையே பிரதிபளிக்கும்.

No comments: