முரண்கள்

உலகப் புகழ்
மல்லிகைப்
புன்னகைகளுக்குள்
ஒளிந்து கிடக்கின்றன
ஒரு கோடி ரகசியங்கள்

படைத்தவனையே
அடித்து நொறுக்கும்
வசீகர விழிகளில்
கிழிந்து வழிகின்றன
விழிநீர்ப் பேரருவிகள்
...
மென்மையிலும் மென்மை
உண்மையிலும் உண்மை
கருணையிலும் கருணை
கொண்ட இதயங்கள்
எவர்க்கும் தாங்கவியலா
வலிகளைத்
தாங்கிக் கிடக்கின்றன

இணையத்தில் 

என்னைக் கடந்த சில வரிகள்
என்னை இந்த
வரிகளாக்கிப் போயின

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

உண்மை... உண்மை...

mohamedali jinnah said...

சிலையை படைத்தவனையே அடித்து நொறுக்கும் வசீகர விழிகள் இருக்கலாம்
மனிதனை படைத்தவனையே ...!!!!????