சுயநலம்
விரிந்து விரிந்து
சூறையாடியது
உலகை

பலங்கொண்ட சுயநலம்
பதரான சுயநலங்களைக்
கொன்று மென்று
தின்று செரித்தது

இறுதியாய்...

ஒரே ஒரு
சுயநலம் மட்டுமே
மீந்தது
வாழ்ந்தது

ஒற்றை உயிரைச்
சுமக்கக் கசந்து

தன்னைத் தானே
சுருக்கிச் சுருக்கி

மீண்டும்
கருந்துளைக்குள்ளேயே
காணாமலே போனது
பரிதாபப் பிரபஞ்சம்

அன்புடன் புகாரி
20160505

No comments: