Showing posts with label Terrorism. Show all posts
Showing posts with label Terrorism. Show all posts
பரம்பொருள் ஒன்று. ஆனால் அதை வெவ்வேறு வடிவில் ஈடுபாட்டுடன்/ பக்தியுடன் வழிபட்டு, இறுதியில் முதிர்ந்த பற்றற்ற ஞானநிலை அடையலாம். அவரவர்கள் மனதால், சொல்லால், உடல் உறுப்புகளால், செய்யும், நல் / தீய செயல்களுக்கேற்ப, இது ஒரு பிறவியிலோ, பல பிறவியிலோ நடக்கலாம்.
-பாஸ்கர்

இறைவன் ஒருவன் தான் என்று இதை நான் உறுதி செய்துகொள்ளலாமா? உங்களுக்கு ஒரு இறைவன் எனக்கு ஒரு இறைவன் என்று இறைவன் பல என்பது பிழைதானே?
-அன்புடன் புகாரி

உருவ வழிபாட்டையும் அதைச் சார்ந்த நம்பிக்கைகளையும் இழிந்துரைக்க, இந்த பரம்பொருள் ஒன்று என்ற ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால் சரி. ஏனென்றால் உருவ வழிபாடு ஈடுபாட்டுடனான பக்தியை வளர்க்கும், அப்படி வழிபடும் தேவதைகளும் கடவுளால் உருவானவை, அந்த வழிபாட்டையும் கடவுள் தனக்கே உரியதாக ஏற்றுக் கொள்கிறார் என்பதும் இந்து சமயத்தின் ஆணிவேரான கோட்பாடு. இதுவே எதிலும் கடவுளைக் காணும்/ ஆராதிக்கும் சுதந்திரத்தையும் வழங்குகிறது.
-பாஸ்கர்

நான் உருவ வழிபாட்டை விமரிசனம் செய்யவில்லை. அது அவரவர் விருப்பம் நம்பிக்கை. அதனால் யாருக்கும் எக்கேடும் இருப்பதாய் நான் உணரவில்லை. இறைவன் ஒருவன் தானா என்பதுதான் என் கேள்வி. அவனை எப்படி வேண்டுமாலும் யார் வேண்டுமானாலும் வர்ணனை வரையறை செய்து கொள்ளட்டும் வணங்கட்டும் நம்பிக்கையில் சிறந்து விளங்கட்டும். அதனால் ஏதும் கேடில்லை.

இறைவன் பல என்றதும் உலக அமைதியில் கீறல் விழுகிறதோ என்று ஐயுறுகிறேன். உன்னைப் படைத்த கடவுள்தான் என்னையும் படைத்தான் என்றால் அதில் ஓர் இணக்கத்திற்கான நூல் தென்படவில்லையா? அதுதானே உண்மை என்றும் தெளிய முடியவில்லையா? நான் இணக்கம்தேடிப் போராடுபவன்!
-அன்புடன் புகாரி

இந்து மதக் கோட்பாட்டில் இந்த இணக்கத்திற்கு எந்தத் தடையும் இல்லை. அல்லாவும், ஏசுவும் பரம்பொருளின் வேறுபெயர்கள் என ஏற்பதில் தவறேயில்லை, அதேபால் சிவனும், திருமாலும் பரம்பொருளின் வேறுபெயர்கள் என்று ஏற்பதிலும் தடையேதுமில்லாமல் இருக்குமானால் இணக்கத்திற்கு தடையேதுமில்லை.
-பாஸ்கர்

அல்லா = இறைவன். அரபு மொழியில் அல்லா. தமிழ் மொழியில் இறைவன். அவ்வளவுதான்.

சிவனும் திருமாலும் பரம்பொருள் என்ற ஓர் இறைவன் இல்லையா? பின்புலமாய் தசாவதாரக் காட்சிகள் கண்முன் வருகிறது. இந்து மதத்திற்குள்ளேயே இறைவன் ஒருவனே என்ற கொள்கை இல்லையா?
-அன்புடன் புகாரி

இருக்கிறது. அந்த ஏதுமற்ற நிலையை அடைய/உணர, எந்த உருவத்தில்/ பெயரில் உங்களால் அசைக்கமுடியா ஈடுபாட்டை/பக்தியை செலுத்த முடியுமோ, அதைச் செய்யலாம் என்ற வழிகாட்டுதலும் / சுதந்திரமும் சேர்த்து வழங்கப் பட்டுள்ளது.
-பாஸ்கர்

ஒன்று என்பதே இறுதி என்பது நன்று. அதைத் துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறது இஸ்லாம்.

ஒன்று என்பதை உணர்ந்துகொண்டால் விரோதங்கள் மனிதர்களுக்கு இடையில் இல்லை.

அசைக்கமுடியா பக்தி என்பதும் சிறப்பு. மிக அவசியம் ஆனதும் கூட. ஆனால் அது மற்றதன்மீதான வெறுப்பாய் ஆகிவிடக் கூடாது.

ஒரே இறைவனின் பிள்ளைகள் என் தாய் வேறு என்று சண்டை போட்டால் இறை கொள்கையே அர்த்தமற்றதாகப் போய்விடும். இறைவனே இல்லை என்ற நிலைக்குத்தான் தள்ளப்படுவோம்
-அன்புடன் புகாரி

மற்றதன் மீதான வெறுப்பு, மனதால் தொடங்கும் தீய செயல். இந்து சமயக் கோட்பாட்டின்படி தீய செயல்கள் ஏதுமற்ற பரம்பொருளை அடைவதற்குத் தடை. ஆனால் தன் நம்பிக்கைகள் மீது குறிவைத்து எறியப்படும் இழிந்துரைகளை கேட்கும்,போது முற்றும் துறந்த ஞானநிலை அடையாத மனது வெகுண்டெழுகிறது.
-பாஸ்கர்

இழிந்துரைகள் தூண்டல்கள். இறைநம்பிக்கையாளர்கள் அதில் சிக்கிவிடக்கூடாது. சிக்கினால் அவர்கள் வென்றுவிடுவார்கள், நல்லவர்கள் நாம் தோற்போம்
-அன்புடன் புகாரி
நான் உருவ வழிபாட்டை விமரிசனம் செய்யவில்லை.

அது அவரவர் விருப்பம் நம்பிக்கை.

அதனால் யாருக்கும் எக்கேடும் ஆவதாய் நான் உணரவில்லை.

இறைவன் ஒருவன் தானா என்பதுதான் என் கேள்வி.

அந்த ஒருவனை எப்படி வேண்டுமாலும் யார் வேண்டுமானாலும் வர்ணனை வரையறை செய்து கொள்ளட்டும், வணங்கட்டும், நம்பிக்கையில் சிறந்து விளங்கட்டும்.

அதனால் ஏதும் கேடில்லை.

இறைவன் பல என்றதும் உலக அமைதியில் கீறல் விழுகிறதோ என்று ஐயுறுகிறேன்.

உன்னைப் படைத்த கடவுள்தான் என்னையும் படைத்தான் என்றால் அதில் ஓர் இணக்கத்திற்கான நூல் தென்படவில்லையா?

அதுதானே உண்மை என்றும் தெளிவு பெற முடியவில்லையா?

நான் இணக்கம்தேடிப் போராடும் எளிய வெண்புறா!

அன்புடன் புகாரி
68 ஆயிரம் கஷ்மீரிகளைக் கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்று கூற உரிமையில்லை.
குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுகூற தகுதியில்லை.
- அருந்ததிராய்
எவரொருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார். வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான். -பகவத்கீதை 7:20
கண்ணால் காணமுடியாதது எவனோ, அவனே படைத்த இறைவன். அவனே கண்களுக்குப் பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண்கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை. -ரிக்வேதம் 6:45:16.
அன்பு நண்பர்களே, மேலே குறிப்பிட்டுள்ள வேதங்கள் இரண்டும் உண்மையானவையா என்று எவராவது எனக்கு அறியத் தருவீர்களா?
இப்பல்லாம் இட்டுக்கட்டி வரும் கதைகளே மிக அதிகம். இது எனக்குக் கடந்த வருடம் வந்த செய்தி.
அன்புடன் புகாரி
20171130
வாட்சப்பில் ஒரு நண்பர் சொல்கிறார். எல்லா கோவில்களும் முகலாயர் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்டுவிட்டன. இப்போது இருப்பவை வெள்ளைக்காரன் கட்டியது என்கிறார். எனக்கு வியப்பளிக்கிறது.
உண்மை என்ன?
நான் தஞ்சாவூர்க் காரன். ஒரத்தநாட்டில் பிறந்தவன். அடிக்கடி தஞ்சை பெரியகோவில் - பிரகதீஸ்வரர் கோவில் சென்று அந்த வளாகத்தில் அமர்ந்திருப்பதை விரும்புபவன். அந்த அமைதி எனக்குப் பிடிக்கும். என் இளவயதில், திசைகள் பத்திரிகைக்காக எழுத்தாளர் கவிஞர்கள் ஓவியர்கள் என்று நாலைந்துபேர் வாரம் ஒரு சந்திப்பு நிகழ்த்துவோம். அதற்கு ஏற்ற இடம் கோவிலின் உள் வளாகம்தான் என்று முடிவெடுத்து அங்கேயே கூடுவோம்.
இப்போது அந்தக் கோவிலுக்கு மிக அருகிலேயே என் வீடு இருக்கிறது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்று நினைக்கிறீர்கள்?
அந்தக் கோவிலைக் கட்டியது வெள்ளைக்காரன் இல்லை. 1003-1010 ல் கட்டப்பட்ட அந்தக் கோவிலைப் போல பெரிய கிருத்துவ ஆலயமோ இஸ்லாமிய பள்ளிவாசலோ இந்தியாவிலேயே கிடையாது.
தாஜ்மகால் ஒரு சமாதி. பள்ளிவாசல் அல்ல. அந்த சமாதியைவிட உயர்வான கட்டிடக் கலையைக் கொண்டது தஞ்சை பெரியகோவில்
ஏன் ஒருசில தமிழர்களின் மனம் இப்படிச் சுருங்கி மதவெறிக்குள் சிக்கிச் சீரழிகிறது சமீபகாலமாக?
அன்புடன் புகாரி
>>>சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனேவின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.<<<

தீவிரவாதிகள் தைரியமாக மேடைபோட்டுப் பேசும் காலத்தில் நாம் வாழ்கிறோம்

தீவிரவாதிகள் எல்லோரும் ஹிரோக்களாக வர்ணிக்கப்படுகிறார்கள்

தீவிரவாதிகளிடம்தான் எல்லா நியாயமும் தர்மமும் இருப்பதாக நம்ப வைக்கப்படுகிறது

தீவிரவாதிகளின் இருப்பினால்தான் அரசியல் சுகப்பயணம் செய்கிறது

தீவிரவாதிகள்தாம் அறம் என்பதற்கான சரியான விளக்கம் சொல்லக் கூடியவர்களாய் இருக்கிறார்கள்

தீவிரவாதிகள் இல்லாவிட்டால் நாடு சுவாரசியம் குன்றியதாய் ஆகிப் போகும்

தீவிரவாதிகள் இல்லாவிட்டால் அரசின் ஓட்டு வங்கிகள் நிரம்பாமல் போய்விடும்

தீவிரவாதிகள் சுதந்திரத்தின் பொருளைச் சரியாக விளக்குகிறார்கள்

தீவிரவாதிகள் மட்டும்தான் நாட்டில் சுதந்திரம் பெற்ற குடிமக்கள்

அன்புடன் புகாரி
20171122


*முஸ்லிம் தீவிரவாதிகள்*

1.6 பில்லியன் முஸ்லிம் உலகில் வாழ்கிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் தீவிரவாதிகள்? விரல்விட்டு எண்ணிவிடலாம். சரி ஒரு கணக்குக்குள் கொண்டுவர முயல்வோம்.

ஒரு (1600) ஆயிரத்து அறுநூறு?

சரி போகட்டும் ஒரு (16,000) பதினாறு ஆயிரம் பேர்?

சரி அதுவும்போகட்டும் மிக மிக அதிகப்படியாக ஒரு (160,000) லட்சத்து அறுபதினாயிரம் பேர்?

1.6 பில்லியனில் 160,000 என்பது எத்தனை விழுக்காடு தெரியுமா?

0.01 % விழுக்காடு.

அதாவது பத்தாயிரம் பேருக்கு ஒருவன்.

இந்த ஒருத்தனையே காரணம்காட்டி மீதம் உள்ள ஒன்பதாயிரத்து தொல்லாயிரத்து தொன்னூற்றி ஒன்பது பேரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது ஏன் என்று எவரேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?

99.99 % விழுக்காடு மக்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்று அன்பும் அமைதியும் சாந்தமும் சமாதானமும் கொண்டு வாழ்கிறார்களே?

அளவற்ற அருளாளனின் நிகரற்ற அன்புடையோனின் கருணை கொண்டு அமைதி வழியில் வாழ்கிறார்களே,

அவர்களை அப்படியே விட்டுவிட்டு ஏன் இந்த உலகம் ஏதோ சில தீவிரவாதிகளைக் கொண்டு இஸ்லாத்தைத் தீவிரவாதம் என்று முத்திரை குத்த நினைக்கிறது?

காரணம் கடந்த 50 ஆண்டுகளில் 235% வளர்ச்சி பெற்று பெருகும் முஸ்லிம்களின் மக்கள்தொகையாகத்தான் இருக்க வேண்டும்.

இஸ்லாம் தொடங்கும்போதே எதிர்ப்புகளால் பல இன்னல்களைச் சந்தித்தது. ஆனால் அழிந்துவிடவே இல்லை.

இன்று, காழ்ப்புணர்ச்சி கொண்டு துவேச சொற்களை அள்ளிப் பொழியவும், பழிபோட்டு ஒரு மார்க்கத்தையே அழிக்கும் முயற்சியில் சில பல மத மற்றும் அரசியல் அமைப்புகள் முயல்வதும் நாம் தெளிவாகக் காணும் காட்சி.

ஆனால் அழிந்துபோகுமா இஸ்லாம்?

அன்புடன் புகாரி
20160821