பெரிதினும் பெரிது

நூறு வெறிநாய்களிடம்
ஒற்றை எலும்புத் துண்டு
நீ

ஆயிரம் கொள்ளிக் கட்டைகளிடம்
ஒற்றைப் பஞ்சுப் பொதி
நீ

மில்லியன் புல்டோசர்களிடம்
ஒற்றை மரக் குடில்
நீ

பில்லியன் கொசுக்களிடம்
ஒற்றை நிர்வாணம்
நீ

தப்பத் துடிக்காமல்
கருணைக்கும் அன்புக்கும்
அழுது நின்றால்

மனவீரத்தின் அகரமும் அறியா
உடைந்து ஊற்றும்
சிறு முட்டை
நீ

அடைகாத்துக்கொள்
உன்னை
நீயே

குஞ்சாகு
ஆகு
சிறகாகு
வளர்
பற பற

அதோ
பெரிதினும் பெரிய
வானம்
உன் முன்

No comments: