நீரலையைப் போன்று
புத்தம் புது அலை
வேறு எதிலும்
உருவாவதில்லை

ஓர் அலை கரை தொட்டால்
அந்த அலையின் நீர்
அடுத்த அலை புறப்படும்போது
எங்கோ எங்கோ
தொலைதூரம் சென்றிருக்கும்

புது நீரில்
புதிது புதிதாக உருவாகும்
ஒவ்வொரு நதியலையும்
நதிக்கு மட்டும் பெருமையல்ல
நமக்கும்தான்

ஏனெனில்
அது ஒரு
வாழ்க்கை ரகசியம்

வாழ்வின்
இன்ப அலையோ
துன்ப அலையோ
இடைப்பட்ட அலையோ
யாவுமே புத்தம் புதியனதான்

பழையது என்ற
நம் எண்ணம்தான்
உண்மையில் பழையது

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... உண்மை...

தொடர வாழ்த்துக்கள்...