17

வற்றாக் குற்றாலமான
என் அன்பும்
அணையிடாக் காவிரியான
என் பாசமும்
உப்பிலாப் பசிபிக்கான
என் கருணையும்
கலையா முகிலான
என் கண்ணீரும்
என்னை
உனக்குள் திணித்து
உன்னை
ஏமாற்றி விட்டதாகக்
கோபப்பட்டாய்

உன்
கோபத்தையும்
குற்றச்சாட்டையும்
பரிவோடு ஏற்றுக்கொண்டு
நான் உன்மீது
அளப்பரிய
அன்பும் பாசமும்
கருணையும் கண்ணீரும்
கொட்டுகிறேன்

வேறென்ன
எனக்குத் தெரியும்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

இஸ்மாயில் said...

அழகா சொன்னீங்க....

காலம் காலமா காதலன்கள் இத தானே செய்திட்டு இருக்கோம்....

விஷ்ணு said...

அருமை ..அன்பின் புகாரி ...
நல்ல கவிதை ...