08 ஆறு ஹதீத் நூல்களுக்கு முன்னும் பின்னும் எத்தனை நூல்கள்?

ஹிஜ்ரி 3ம் நூற்றாண்டில் புகாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய ஆறு ஹதீத் நூல்களும் தொகுக்கப்பட்டன.

இவற்றுக்கு முன்னும் இதே காலகட்டத்திலும், வேறு பல ஹதீத் நூல்கள் "முஸன்னஃப்" என்றும் "முஸ்னது" என்றும் தொகுக்கப்பட்டன .

முஸன்னப் என்றால் தலைப்புகளின் வரிசைப்படி தொகுக்கப்பட்டவை. முஸ்னத் என்றால் அறிவிப்பாளர்களின் வரிசைப்படி தொகுக்கப்பட்டவை.

ஹதீதுகள் வேவ்வேறு நபித்தோழர்கள், தாபியீன்கள் மூலம் கிடைத்தன. தாபியீன்கள் என்றால் நபித்தோழர்களைப் பின்பற்றுபவர்கள் என்று பொருள்.

இன்றைய ஆறு ஹதீத் நூல்களுக்கு 100 வருடங்கள் முந்தைய வேறு பல ஹதீத் நூல்களில் முக்கியமான சிலவற்றின் பெயர்கள்:

1. மாலிக் - 92-179ஹி - மதீனா
2. ஷாபியீ - 150-204ஹி - மக்கா
3. அகமது - 164-241ஹி - ஈராக்
4. தவ்ரீ - 097-161ஹி - ஈரான்
5. அவ்சயீ - xxx-157ஹி - ஈராக்
6. இப்னு முபாரக் - xxx-181ஹி - ஈரான்
7. முகமதுபின் சலமா - xxx-167ஹி - ஈராக்
8. இப்னு உஜன்னா - 107-198ஹி - ஈரான்
9. இப்னு முஅம்மர் - xxx-191ஹி - ஏமன்

இமாம்களான ஹனபி, மாலிக், ஷாபியீ, ஹம்பலி போன்றோரில் ஹனபி எழுதிய ஹதீத் அல்லது மார்க்கச் சட்ட நூல்களில் இன்று எதுவும் தற்சமயம் காணப்படவில்லை என்றும் தற்சமயம் ஹனபி மத்ஹபு பெயரில் வரும் நூல்கள் அபூஹனீபா (ஹனபி) அவர்களால் எழுதப்பட்டவையல்ல என்றும், அவருக்குப் பின் வந்தவர்கள் தொகுத்தளித்ததாகும் என்றும், இந்நூல்களுக்கும் அபூஹனீபா அவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், தங்களது சொந்தக் கருத்துக்கள் மக்களிடம் எடுபடாது என எண்ணி ஹனபி பெயரில் அறங்கேற்றியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இப்படியாய் பல ஹதீத் நூல்கள் உருவாகி பலவகையில் வேறுபாடுகளை உடைய இஸ்லாமியச் சட்டங்கள் மக்களிடையே அரங்கேறிக்கொண்டிருந்தன.

இவற்றுள் எது உண்மையில் முகம்மது நபி அவர்கள் சொன்னது அல்லது செய்தது என்றும் முகம்மது நபி அவர்கள் சொல்லாதது செய்யாதது என்றும் எவரும் அறியாதவர்களாய்க் குழம்பி இருந்தனர்.

இதனால் இம்மாதிரியான ஹதீதுகளைத் தொகுத்து அவற்றுள் சரியானவற்றை எடுத்துக்கொண்டு பிழையானவற்றை நீக்கவேண்டிய தேவை உருவானது.

சுன்னா வழி முஸ்லிம்கள் மட்டும் இச்சேவையில் ஈடுபட்டு அவர்களின் அறிவிற்கும் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும் அவர்களின் ஐயங்களுக்குப் பொருந்தவும் ஹதீதுகளை நீக்கியும் அங்கீகரித்தும் இன்றைய ஹதீது ஆறு நூல்களை உருவாக்கினர்.

ஹதீதுகள் அரபு மொழியிலேயே இருந்தன. முதன் முதலில் சஹீகுல் புகாரி என்ற நூல்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டது.

இது முகம்மது நபி இறந்து சுமார் 1400 வருடங்கள் கழித்து 1959ல்தான் நிகழ்ந்தது.

No comments: