அழுகைதான்
மனித நாகரிகத்தின்
முதல் படி

ஆண் அழுவது
அழகல்ல என்பது
அழகல்ல

அழுவது
முடங்கிப் போய்விட என்றால்
ஒருபோதும் அழுதுவிடாதே

அழுவது
ஆறுதல்கொள்ள என்றால்
அழுதுவிடு

சிரிப்பு வரும்போது
சிரிக்காமல் இருப்பவன்
மட்டுமல்ல

அழுகை வரும்போது
அழாமல் இருப்பவனும்
குறையுள்ளத்தானே

No comments: