தலாக் பற்றிய சுருக்கமான விளக்கம் கீழே: ஒருநாள் அமர்ந்து முழுமையாய் எழுதுவேன்

தலாக் என்றால் ‘விடுவித்தல்’ என்பது பொருளாகும்.

தலாக் கூறி, முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழலாம்.

மூன்றாவது சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது.

இதுதான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டம்.

ஒரு சந்தர்ப்பம் என்பது, சுமார் 4 மாத காலம்

குடும்ப வாழ்க்கையில் பிணக்கம் ஏற்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வருபவன் ”உன்னை தலாக் – விவாகரத்து செய்து விட்டேன்” என்று கூறினால் விவாகரத்து ஆகிவிடும்.

ஆனால் இதனால் திருமண பந்தம் – ஒப்பந்தம் முற்றாக முறிந்து விடாது.

அவனின் மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரைக் காத்திருக்க வேண்டும்.- இந்தக் காத்திருப்பும் அவள் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறிந்து கொள்வதற்காகவே – இந்த அவகாசத்திங்குள் கணவன், மனைவி இருவரும் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.

அவள் கர்ப்பிணி என்றால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை திருமண ஒப்பந்தம் முறியாது என்பதை திருக்குர்அன் 65:4 வசனத்திலிருந்து விளங்கலாம்.

இரண்டுமுறை நான்கு நான்கு மாதங்கள் பிரிந்திருப்பதால் இருவரும் மனம் மாறி ஒன்று சேர்ந்துவிடலாம்.

பிரிந்திருக்கும் காலத்தில் இருவரையும் ஒன்று சேர்க்கும்பொருட்டு உறவுகள் நண்பர்கள் எல்லோரும் கலந்துரையாடுவார்கள் அறிவுரைகள் வழங்குவார்கள்.

இதை எல்லாம் கடந்து இருவரும் திருமண முறிவுக்கே தயாராகிவிட்டால், அது நடந்துவிட்டால், பிள்ளைகள் எல்லாம் கணவனின் பொறுப்புதானே தவிர மனைவியின் பொறுப்பில்லை.

அதோடு மகர் என்று கொடுக்கப்பட்ட பெண்ணின் சொத்தை அவளின் வாழ்வாதாரத்திற்காகக் கணவன் மனைவிக்குக் கொடுக்க வேண்டும்.

பின் அந்தப் பெண் மூன்றாவது தலாக்கின் சுமார் 4 மாதங்கள் முடிவடைந்த நிலையில் மறுமணம் செய்துகொள்ள இஸ்லாம் சொல்கிறது

இதில் பெண்ணுக்கு ஏதும் தீங்குள்ளதா? அல்லது ஆணுக்குத்தான் தீங்குள்ளதா?

No comments: