இந்து/இந்துஸ்தான் மைனஸ் தமிழர்கள் = இந்துத்துவா.

அது வேறு எப்படிச் செயல்படும்?

தமிழர்களைப் பிரித்தாள முடிகிறது அவர்களால்

தமிழர்களை, தமிழ் நிலங்களை, தமிழ் வாழ்வாதாரங்களைச் சிறுகச் சிறக அழிக்க முடிகிறது அவர்களால்

தமிழர்களைத் தமிழ் தத்திகளைக் கொண்டே அரசாளவைத்து அழித்துமுடிக்க முடிகிறது அவர்களால்

ஒருங்கிணைந்த உலகத் தமிழர்கள் இந்துத்துவாவின் முதன்மை எதிரிகள் என்பதே அவர்களின் கூற்று

தன் நாட்டுக்குள்ளேயே நாடோடி தமிழன் மட்டும்தான். நாடுவிட்டே ஓடோடச் செய்கிறார்கள்.

உறுதியான தமிழ்த் தலைவர்கள் ஒருவரையும் காணவில்லை இன்று.

தமிழர்களுக்குள் ஒற்றுமை என்பது சும்மா வருமா?

தலைவர்களின் வருகையால்தான் வரும்.

வரலாறுகள் தெளிவாகவே இருந்தும் காந்தியைக் கோட்சேவாகவும் கோட்சேவைக் காந்தியாகவும் திரித்துக் கூறி உண்மையாக்குகிறார்கள்

அற அழிவு உச்சம் தொடும்போதெல்லாம் ஒரு பெரும் மாற்றம் வரவே செய்யும்.

வரவேண்டும்! வரட்டும்!

அன்புடன் புகாரி

No comments: