கொரோனா கொலைகாரனா?

2020 ஜனவரி மாத தொடக்கத்தில் எழுதிய கவிதை இது. கொரோனாவைப் பற்றிய அப்போதைய எண்ணங்களும் அச்சங்களும் எனக்கு இப்படித்தான் இருந்தன..
                               
      கொரோனா
      நீ ஒரு கொலைகாரனா?

மதவெறியர்களின்
மறுஜென்மமா?

அரசியல் பொறுக்கிகளின்
அடுத்த ஜென்மமா?

சைனாப் பொருட்கள்
நீடித்து உழைப்பதில்லையாமே
நீ எப்படி?

சட்டென நொறுங்கிப் போ
உன்னைப் பற்றிய
அவசரச் செய்திகளின் அச்சமே
உனக்குமுன் எங்களைக்
கொன்று போட்டுவிடும்
போலிருக்கிறது

திருடர்கள் அணியும் முகமூடி
உன்னால் இன்று
சர்வதேசப் பயணிகளின்
முகத்தில்

நேற்றுவரை
நண்பனாய் கட்டியணைத்த
சைனாக்காரன் இன்று
நச்சுப் பொதியாய்த் தெரிகிறான்

ரகரகமான சைனா உணவை
இனி எந்த சாக்கடைச் சந்தில்
கொட்டி நிறைப்பது?

இது என்ன ஆட்டம்

ஓய்ந்து கிடக்கும்
மருத்துவ மனைகளுக்கு
உற்சாகம் தரவந்த வதந்தி வைரஸா?

நின்ற நிலையில்
தடாலென விழும் மனிதன்
நடிகனா? நோயாளியா?

ண்மையில் நீ
உயிர் மிரட்டும் வைரஸ்தானா

அல்லது….
மக்கள் மனதை திசை திருப்பும்
உலக அரசியல் சதியா?

#கொரோனாகவிதைகள் #கவிஞர்புகாரி

No comments: