80

ஒரு குண்டு மல்லியை
அதன் மென்னிதழ் நோகாமல் கிள்ளி
என் சட்டைப்பைக்குள்
கடத்திக்கொண்டு கிறக்கத்தோடு
நடந்த நாட்கள்

விரல்கள் பூ மல்லியில்
விழிகள் வானமல்லியில்

நிலாக் குட்டியை
வாடீ என்று வாரியணைத்து
வருடிக்கொண்டே
என் வாலிப வாழ்க்கை
கனவுகளுடன் மிதக்கும்
என்றேன்

இன்றுமுதல்
நிலாவை நான் வெறுக்கிறேன்
என்றாள் அமைதியாக

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

பூங்குழலி said...

நிலாக் குட்டியை
வாடீ என்று வாரியணைத்து

செல்லமாக ஒரு கவிதை

sathishsangkavi.blogspot.com said...

//விரல்கள் பூ மல்லியில்
விழிகளோ வானமல்லியில்//

அழகான வரிகள்....

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............