துக்கப்படவா வாழ்க்கை

எவ்வழி விரைந்தும் எப்படியேனும்
எட்டிப் பிடித்துக்
கட்டி வைத்துக் கொள்ளல் வேண்டும்
நம்முடனேயே
நமக்குப் பிடித்த யோகங்களை

அன்றி
துக்கப்படவா வாழ்க்கை?

நம்
சந்தோசங்களைக் கொய்ய
நம்மைவிட வேறுயார்
வான்முட்ட
எகிறிக் குதிப்பர்

நம் மகிழ்ச்சிகளை
நாமே மறுக்கும் பாசாங்கு நிலை
பேரவலமல்லவா

இன்றே
இப்பொழுதே
இன்பம் துய்த்து
வாழ்வதே வாழ்க்கை

நாளை என்பது 
உயிரின் தத்துவத்தில்
இல்லவே இல்லை

நேற்றுகளைப்
பாடங்களாக்கி
இன்றுகளை
பரிட்சைகளாக்கி
வென்று வாழ்வதே
வாழ்க்கை

No comments: