புலம்பல் ஓர் புண்ணிய நதி


தானே
தனக்காக இசைக்கும்
கண்ணீர்த் தாலாட்டு

மாண்ட மனத்தை
மடியில் கிடத்திக்கொண்டு
மிச்ச மனம்
உதட்டு வாத்தியத்தில்
உயிரைப் பிழிந்து வைக்கும்
ஒப்பாரி

ஆயினும்
புலம்பல் ஓர்
புண்ணிய நதி

அதில் நீராடும்போது
பரிதவித்துப் படபடக்கும்
உயிர்ச் சருகையும்
தீண்ட வழியற்று
கரைகளில்தான்
காத்துக்கிடக்கிறது
மரணத் தீப்பந்தம்

No comments: