மெய்ப்பொருள்


வாழ்க்கைக் கவிதைக்குப்
பொருள் விளங்காப்
பொழுதுகளில்
படித்துப்படித்துப்
பெருமகிழ்வு

பொருள் புரிந்த
பிற்பொழுதுகளில்
சுக்கல் சுக்கலாய்க்
கிழித்தெறிய
விழைவு

வாழ்வுக் குமிழைக்
கிழித்ததும்
விளைந்த பொருள்
கண்டு
அமைதியின் கர்ப்பத்தில்
தரிப்பு

1 comment:

Anonymous said...

மழலையின் சிரிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.
பொருள் விளங்காத போது தான் படிப்போம் - மகிழ்வோம் - இயற்கை.

அன்புடன் ..... சீனா