நெஞ்சக் குகையில் மரணக் கழுகு


நெஞ்சக் குகையில்
மரணக் கழுகு
நெருப்புச் சிறகை
விரிக்கிறது

கொஞ்சல் வழிந்த
பொந்துகள் எல்லாம்
கொத்திக் கொத்தித்
தின்கிறது

வஞ்சம் அறியா
நெஞ்சின் குமுறல்
வானம் கிழித்துப்
பறக்கிறது

மிஞ்சும் வரமாய்ச்
செத்தச் சவமும்
மீண்டும் மீண்டும்
இறக்கிறது

No comments: