Showing posts with label greetings. Show all posts
Showing posts with label greetings. Show all posts
சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் - Edited Version
சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்
சித்திரையே எழில் முத்திரையே
சொல்லிவிடு உன் சூட்சுமத்தை
அத்தைமகள் விழி மார்கழியும்
அமுதளக்கும் நிலத் தைமகளும்
முத்தமிடும் பொற் கார்த்திகையும்
முகிலவனின் நல் ஐப்பசியும்
எத்தனையோ இம் மாதிரியாய்
முத்தமிழர் தம் மாதங்களும்
சித்திரமாய்ப் பண் பாடிவர
சித்திரையே நீ யாரடியோ
கத்தரியாய்த் துயர் துண்டாடி
கவிபாடும் தீப் பிழம்பரசி
எத்தனையோ இருள் எழுந்தாலும்
எரிப்பாயே அருள் நிறைப்பாயே
சித்திரையே தவப் பொற்கொடியே
சூரியனும் உன் சொற்படியே
முத்தெடுக்கும் நீள் மூச்சழகே
முறைதானே நீ பொன்மகளே
முத்துரதம் மண் ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ் வீற்றிருக்க
எத்திசையும் வளர்த் தூயதமிழ்
எழுந்தோங்க வளம் விண்முட்ட
சித்திரையே நீ வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன் தந்துவிட்டாய்
சித்திரையே எழில் முத்திரையே
சொல்லிவிடு உன் சூட்சுமத்தை
அத்தைமகள் விழி மார்கழியும்
அமுதளக்கும் நிலத் தைமகளும்
முத்தமிடும் பொற் கார்த்திகையும்
முகிலவனின் நல் ஐப்பசியும்
எத்தனையோ இம் மாதிரியாய்
முத்தமிழர் தம் மாதங்களும்
சித்திரமாய்ப் பண் பாடிவர
சித்திரையே நீ யாரடியோ
கத்தரியாய்த் துயர் துண்டாடி
கவிபாடும் தீப் பிழம்பரசி
எத்தனையோ இருள் எழுந்தாலும்
எரிப்பாயே அருள் நிறைப்பாயே
சித்திரையே தவப் பொற்கொடியே
சூரியனும் உன் சொற்படியே
முத்தெடுக்கும் நீள் மூச்சழகே
முறைதானே நீ பொன்மகளே
முத்துரதம் மண் ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ் வீற்றிருக்க
எத்திசையும் வளர்த் தூயதமிழ்
எழுந்தோங்க வளம் விண்முட்ட
சித்திரையே நீ வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன் தந்துவிட்டாய்
ஸ்ருதி மணநாள்
திருநெல்வேலி திருநிறைச் செல்வன்
கார்த்தி கார்த்தி
கார்த்தி கார்த்தி
உன்
பருவ ஆகாயத்தில்
பறந்து வந்தாள்
ஒரு பட்டு நிலா
பருவ ஆகாயத்தில்
பறந்து வந்தாள்
ஒரு பட்டு நிலா
அவள்
தாளலயம் கூட்டி
ராக மழை சிந்தும்
ஸ்ருதி ஸ்ருதி
தாளலயம் கூட்டி
ராக மழை சிந்தும்
ஸ்ருதி ஸ்ருதி
*
வானம் வையம் நெடுகிலும்
நறுமண மலர்கள் தூவி
என் நெஞ்சின்
நிறைவான வாழ்த்துகள்
நறுமண மலர்கள் தூவி
என் நெஞ்சின்
நிறைவான வாழ்த்துகள்
குற்றாலம் வற்றலாம்
வற்றாது உங்கள் தேனருவி
கார்முகில் கலையலாம்
கலையாது உங்கள் கனவுகள்
வற்றாது உங்கள் தேனருவி
கார்முகில் கலையலாம்
கலையாது உங்கள் கனவுகள்
வானவில் நிறம்மாறலாம்
மாறாது உங்கள் காதலுயிர்
வானச் சூரியனும் அணையலாம்
அணையாது உங்கள் வாழ்க்கைத்தீபம்
மாறாது உங்கள் காதலுயிர்
வானச் சூரியனும் அணையலாம்
அணையாது உங்கள் வாழ்க்கைத்தீபம்
அன்று
தகவலும் புறாவும்போல
இன்று
செல்பேசியும் செவியும்போல
தகவலும் புறாவும்போல
இன்று
செல்பேசியும் செவியும்போல
அன்று
வனமும் வேட்டையும்போல
இன்று
முகநூலும் லைக்கும்போல
வனமும் வேட்டையும்போல
இன்று
முகநூலும் லைக்கும்போல
அன்று
கவிதையும் அரசவையும் போல
இன்று
கூகுளும் தேடமும் போல
கவிதையும் அரசவையும் போல
இன்று
கூகுளும் தேடமும் போல
அன்று
அறிவிப்பும் முரசும்போல
இன்று
வாட்ஸப்பும் ஃபார்வர்டும்போல
அறிவிப்பும் முரசும்போல
இன்று
வாட்ஸப்பும் ஃபார்வர்டும்போல
காலத்திற்கேற்ப
காதல் வாழ்வைப்
புதிப்பித்துக்கொண்டே
காதல் வாழ்வைப்
புதிப்பித்துக்கொண்டே
வாழ்க வாழ்க
பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு
நீக்கமற நிறைந்த நிம்மதிச் செல்வத்தோடு
கனவோடு நிறைவோடு கலையாத அன்போடு
வாழ்க வாழ்க
பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு
நீக்கமற நிறைந்த நிம்மதிச் செல்வத்தோடு
கனவோடு நிறைவோடு கலையாத அன்போடு
வாழ்க வாழ்க
- அன்புடன் புகாரி
(அமெரிக்காவில் அழகாக நடந்த கார்த்திக் + ஸ்ருதி திருமண வரவேற்பில் நெஞ்சம் நிறைந்ததால் நிரம்பி வழிந்த வாழ்த்துச் சொற்கள்)
201202 ரிதா காதுகுத்து
ரிதாவின் காதுகுத்து
காது குத்துன நத்தக் குட்டி ஐசு திங்கிறா
ஆமா ஐசு திங்கிறா - அவ
காதப் பாத்துத் தோடப்பாத்து கண்ணு சொக்குறா
ஆமா கண்ணு சொக்குறா
மாலுவனு மாலுக்குள்ள ஆளு போனிச்சு
இந்த ஆளு போனிச்சு
குட்டி ஆளு போனிச்சு
சின்ன ஆளு போனிச்சு - அங்க
காது ரெண்டும் ஓட்டையாயி திரும்பி வந்துச்சு
ஆமா திரும்பி வந்துச்சு
கண்டதுக்கும் கத்திக் கத்தி ஊரக் கூட்டுவா
நல்லா ஊரக் கூட்டுவா - ஆனா
காது குத்தும் போது மட்டும் சிரிச்சி வெக்கிறா
இவ சிரிச்சிக் வெக்கிறா
ஊரு ரொம்ப கெட்டுப் போச்சு ஒண்ணும் புரியல
ஆமாம் ஒண்ணும் புரியல - இவ
அழகப் பாத்து ஆடும் ஆட்டம் தாங்க முடியல
அடடா தாங்க முடியல
மறத்துப் போற மருந்தத் தேடி தாயி ஓடுறா
பாவம் தாயி ஓடுறா - ஆனால்
காதுத்தோட நெனைச்சு நெனைச்சு பொண்ணு மயங்குறா
சும்மா பொண்ணு மயங்குறா
தூளியில ஆடுனவ தோடு போட்டுட்டா
ஆமாம் தோடு போட்டுட்டா - தெனம்
தோடப் பாத்துத் தோடப் பாத்துத் தூக்கம் மறக்குறா
ஆமாம் தூக்கம் மறக்குறா
நாட்டு நெலமை இப்படியா ஆயிப் போச்சுடா
ஆமாம் ஆயிப் போச்சுடா - இந்த
நண்டும் குஞ்சும் ஊரை விக்க வெக்கம் ஆச்சுடா
நமக்கு வெட்கம் ஆச்சுடா
20140222
காது குத்துன நத்தக் குட்டி ஐசு திங்கிறா
ஆமா ஐசு திங்கிறா - அவ
காதப் பாத்துத் தோடப்பாத்து கண்ணு சொக்குறா
ஆமா கண்ணு சொக்குறா
மாலுவனு மாலுக்குள்ள ஆளு போனிச்சு
இந்த ஆளு போனிச்சு
குட்டி ஆளு போனிச்சு
சின்ன ஆளு போனிச்சு - அங்க
காது ரெண்டும் ஓட்டையாயி திரும்பி வந்துச்சு
ஆமா திரும்பி வந்துச்சு
கண்டதுக்கும் கத்திக் கத்தி ஊரக் கூட்டுவா
நல்லா ஊரக் கூட்டுவா - ஆனா
காது குத்தும் போது மட்டும் சிரிச்சி வெக்கிறா
இவ சிரிச்சிக் வெக்கிறா
ஊரு ரொம்ப கெட்டுப் போச்சு ஒண்ணும் புரியல
ஆமாம் ஒண்ணும் புரியல - இவ
அழகப் பாத்து ஆடும் ஆட்டம் தாங்க முடியல
அடடா தாங்க முடியல
மறத்துப் போற மருந்தத் தேடி தாயி ஓடுறா
பாவம் தாயி ஓடுறா - ஆனால்
காதுத்தோட நெனைச்சு நெனைச்சு பொண்ணு மயங்குறா
சும்மா பொண்ணு மயங்குறா
தூளியில ஆடுனவ தோடு போட்டுட்டா
ஆமாம் தோடு போட்டுட்டா - தெனம்
தோடப் பாத்துத் தோடப் பாத்துத் தூக்கம் மறக்குறா
ஆமாம் தூக்கம் மறக்குறா
நாட்டு நெலமை இப்படியா ஆயிப் போச்சுடா
ஆமாம் ஆயிப் போச்சுடா - இந்த
நண்டும் குஞ்சும் ஊரை விக்க வெக்கம் ஆச்சுடா
நமக்கு வெட்கம் ஆச்சுடா
20140222
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நெஞ்சினில் பொன்னும் நாவினில் முத்தும்
நிறைந்தச் சின்னவனே - விண்ணை
விஞ்சிடும் பேரொளி பொன்நிலாக் கண்களில்
விளைந்திடும் பூமகனே
எல்லாம் வல்ல இறையருள் ஓங்க
ஏற்றமே வாழ்வாக - இன்பம்
பிறந்த இந்நாள் இன்னும் இனிதாய்ப்
பிறந்திட வாழ்த்துகின்றேன்
இன்பம் மலரும் பிறந்தநாள்
என்றும் வளரும் பிறந்தநாள்
அன்பில் மிளிரும் பிறந்தநாள்
உள்ளம் குளிரும் பிறந்தநாள்
கண்ணில் ஒளிரும் பிறந்தநாள்
எண்ணம் மணக்கும் பிறந்தநாள்
அன்னை மகிழும் பிறந்தநாள்
தந்தை நெகிழும் பிறந்தநாள்
கண்கள் சிரிக்கும் பிறந்தநாள்
கைகள் அணைக்கும் பிறந்தநாள்
உள்ளம் சிலிர்க்கும் பிறந்தநாள்
உயிரை நிறைக்கும் பிறந்தநாள்
கைகள் ஏந்தும் பிறந்தநாள்
கருணை கேட்கும் பிறந்தநாள்
இன்பம் வழங்கும் பிறந்தநாள்
இறைவன் அருளும் பிறந்தநாள்
ஆண்டுகள் ஆயிரம் உருண்டோட
மீண்டும் மீண்டும் இவ்வினியநாள்
வேண்டும் சுகமுடன் மலரட்டும்
பொன் மகனே வாழ்க
பசுந் தளிரே வாழ்க
மனம் நிறைந்தே வாழ்க
தினம் சிரித்தே வாழ்க
நெஞ்சினில் பொன்னும் நாவினில் முத்தும்
நிறைந்தச் சின்னவனே - விண்ணை
விஞ்சிடும் பேரொளி பொன்நிலாக் கண்களில்
விளைந்திடும் பூமகனே
எல்லாம் வல்ல இறையருள் ஓங்க
ஏற்றமே வாழ்வாக - இன்பம்
பிறந்த இந்நாள் இன்னும் இனிதாய்ப்
பிறந்திட வாழ்த்துகின்றேன்
இன்பம் மலரும் பிறந்தநாள்
என்றும் வளரும் பிறந்தநாள்
அன்பில் மிளிரும் பிறந்தநாள்
உள்ளம் குளிரும் பிறந்தநாள்
கண்ணில் ஒளிரும் பிறந்தநாள்
எண்ணம் மணக்கும் பிறந்தநாள்
அன்னை மகிழும் பிறந்தநாள்
தந்தை நெகிழும் பிறந்தநாள்
கண்கள் சிரிக்கும் பிறந்தநாள்
கைகள் அணைக்கும் பிறந்தநாள்
உள்ளம் சிலிர்க்கும் பிறந்தநாள்
உயிரை நிறைக்கும் பிறந்தநாள்
கைகள் ஏந்தும் பிறந்தநாள்
கருணை கேட்கும் பிறந்தநாள்
இன்பம் வழங்கும் பிறந்தநாள்
இறைவன் அருளும் பிறந்தநாள்
ஆண்டுகள் ஆயிரம் உருண்டோட
மீண்டும் மீண்டும் இவ்வினியநாள்
வேண்டும் சுகமுடன் மலரட்டும்
பொன் மகனே வாழ்க
பசுந் தளிரே வாழ்க
மனம் நிறைந்தே வாழ்க
தினம் சிரித்தே வாழ்க
ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்
அளவற்ற அருளாளனின்
என்றும் - நிகரற்ற அன்பாளனின்
களவற்ற உள்ளங்களில்
நாளும் - குறைவற்று வாழ்பவனின்
நிறைவான அருள்நாளிது
நெஞ்சம் - நிமிர்கின்ற பெருநாளிது
கரையற்ற கருணையினை
ஏந்திக் - கொண்டாடும் திருநாளிது
மண்ணாளும் செல்வந்தரும்
பசியில் - மன்றாடும் வறியோர்களும்
ஒன்றாகக் தோளிணைந்தே
தொழுது - உயர்கின்ற நன்நாளிது
இல்லாதார் நிலையறிந்து
நெஞ்சில் - ஈகையெனும் பயிர்வளர்த்து
அள்ளித்தினம் பொருளிறைக்க
வறுமை - அழிந்தொழியும் திருநாளிது
சொந்தங்கள் அள்ளியணைத்து
நட்பின் - பந்தங்கள் தோளிழுத்து
சிந்துகின்ற புன்னகையால்
உறவைச் - செப்பனிடும் சுகநாளிது
உள்ளத்தின் மாசுடைத்தும்
தளரும் - உடலுக்குள் வலுவமைத்தும்
நல்லின்ப வாழ்வளிக்கும்
வலிய - நோன்பில்வரும் பெருநாளிது
நபிகொண்ட பண்பெடுத்து
அந்த - நாயகத்தின் வழிநடந்து
சுபிட்சங்கள் பெற்றுவாழ
நம்மைச் - சேர்த்திழுக்கும் பிறைநாளிது
சமத்துவமே ஏந்திநின்று
என்றும் - சகோதரத்தைச் சொல்லிவந்து
அமைதியெனும் கொடிகளேற்றி
எவர்க்கும் - அன்புசிந்தும் பொன்னாளிது
அனைவருக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்
இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்
ஈத் முபாரக்
அன்புடன் புகாரி
அளவற்ற அருளாளனின்
என்றும் - நிகரற்ற அன்பாளனின்
களவற்ற உள்ளங்களில்
நாளும் - குறைவற்று வாழ்பவனின்
நிறைவான அருள்நாளிது
நெஞ்சம் - நிமிர்கின்ற பெருநாளிது
கரையற்ற கருணையினை
ஏந்திக் - கொண்டாடும் திருநாளிது
மண்ணாளும் செல்வந்தரும்
பசியில் - மன்றாடும் வறியோர்களும்
ஒன்றாகக் தோளிணைந்தே
தொழுது - உயர்கின்ற நன்நாளிது
இல்லாதார் நிலையறிந்து
நெஞ்சில் - ஈகையெனும் பயிர்வளர்த்து
அள்ளித்தினம் பொருளிறைக்க
வறுமை - அழிந்தொழியும் திருநாளிது
சொந்தங்கள் அள்ளியணைத்து
நட்பின் - பந்தங்கள் தோளிழுத்து
சிந்துகின்ற புன்னகையால்
உறவைச் - செப்பனிடும் சுகநாளிது
உள்ளத்தின் மாசுடைத்தும்
தளரும் - உடலுக்குள் வலுவமைத்தும்
நல்லின்ப வாழ்வளிக்கும்
வலிய - நோன்பில்வரும் பெருநாளிது
நபிகொண்ட பண்பெடுத்து
அந்த - நாயகத்தின் வழிநடந்து
சுபிட்சங்கள் பெற்றுவாழ
நம்மைச் - சேர்த்திழுக்கும் பிறைநாளிது
சமத்துவமே ஏந்திநின்று
என்றும் - சகோதரத்தைச் சொல்லிவந்து
அமைதியெனும் கொடிகளேற்றி
எவர்க்கும் - அன்புசிந்தும் பொன்னாளிது
அனைவருக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்
இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்
ஈத் முபாரக்
அன்புடன் புகாரி
தென்திசை சென்று ஓய்ந்த கதிரவன்
வெற்றித் திலகம்போல்
வடதிசை நகரும் நன்னாள்
தை முதல்நாள்
அதுவே தமிழர் ஆண்டின்
தொடக்க நாள்
பண்டைக்காலத் தமிழர்கள் தமது ஆண்டை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
வெற்றித் திலகம்போல்
வடதிசை நகரும் நன்னாள்
தை முதல்நாள்
அதுவே தமிழர் ஆண்டின்
தொடக்க நாள்
பண்டைக்காலத் தமிழர்கள் தமது ஆண்டை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி-சித்திரை)
3. கார் - (வைகாசி-ஆனி)
4. கூதிர் - (ஆடி-ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி-அய்ப்பசி)
6. பின்பனி (கார்த்திகை-மார்கழி)
2. முதுவேனில் - (பங்குனி-சித்திரை)
3. கார் - (வைகாசி-ஆனி)
4. கூதிர் - (ஆடி-ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி-அய்ப்பசி)
6. பின்பனி (கார்த்திகை-மார்கழி)
பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.
இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிதா
குட்டியம்மா குட்டியம்மா
என் செல்லக் குட்டியம்மா
கட்டியம்மா கட்டியம்மா
என் தங்கக் கட்டியம்மா
சுட்டியம்மா சுட்டியம்மா
என் பவளச் சுட்டியம்மா
பொட்டியம்மா பொட்டியம்மா
என் வைரப் பொட்டியம்மாரிதா ரிதா
ரிதா ரிதா
பலநேரங்களில் எனக்குக் கவிதை எழுதுவது மழை பொழிவதைப்
போல்தான். ஆனால் அது உணர்வுகளின் ஒய்யார மழை. என் உள் முகில்கள் நீர்சுரந்து நீர்சுரந்து
கருத்து நிற்கும் பின் ஒரு தனிமைச் சந்தர்ப்பத்தில் சட்டென்று கொட்டிவிடும். பெரும்பாலும்
அதன்பின் அக்கவிதையில் மாற்றங்கள் தேவைப்படாது. தேவைப்படும்போது நான் மாற்றங்களை நிச்சயமாகச்
செய்வேன். ஆனால் அப்படி எந்த மாற்றமும் செய்யாத கவிதை இது.
.
பனி பொழிந்த ஓர் இரவில்
கத்தி முனையில் கத்தாமல் பிறந்த
சித்தாரமே என் சென்பகமே...
.
என் மகள் பெற்றெடுத்த மகளே
ரிதா ரிதா
.
தேன் மலரா தீஞ்சுவையா
தஞ்சைத் தமிழா தாரகையா
என் தங்க நிலவே பொன் மகளே
ரிதா ரிதா
.
பெண்களெல்லாம் பிறந்தபின்தான்
அழகு நிலையம் செல்வார்கள்
நீ மட்டும்தான் தங்கி இருந்த சொர்க்கபுரியிலேயே
அழகு நிலையப் பணியையும்
முடித்துக்கொண்டு பிறந்திருக்கிறாய்
.
ரிஸ்வானா உன் தாய்
என்பதின் சுருக்கமா உன் பெயர்
ரிதா
.
உன் கண்கள் கண்டேன்
செவிகள் பார்த்தேன்
கைவிரல் தடவினேன்
கன்னம் முகர்ந்தேன்
பனி மென்மை பரிசித்தேன்
பவள இதழ் தொட்டேன்
கன்னங்கரு முடி வருடினேன்
உறங்கும் பேரழகு ரசித்தேன்
.
அடடா நம் குடும்ப அழகை
இப்படி அச்சடித்து அள்ளிக்கொண்டுவர
வயிற்றுக்குள்ளேயே
நீ வரம்கேட்டு வாங்கிவந்தாயா
.
அழுகின்ற குழந்தை
பால் குடிக்கும் என்பார்கள்
பால் குடிக்கக்கூட அளவோடு அழும்
உன் பக்குவத்தை
நீ எங்கிருந்து பாடம் கற்று வந்தாய்
.
பால் பொழியும் உன் பூ முகம் கொண்டு
எனக்குப் பாசம் பொழிய வந்தாயா
உன் அன்னையின் தந்தைக்கு
நீ அன்னையாக வந்தாயா
உன் சிறு கொள்ளைச் சிரிப்பில்
என் சாபங்களைச் சிதறடிக்க வந்தாயா
.
என் தோட்டங்களிலெல்லாம்
இன்று ஒரே ஒரு பூதான்
ரிதா
.
என் இதயத்தைக் கோதிவிடும்
உன் சின்னஞ்சிறு தலையைக் கோதுவதுதான்
இனி எனக்கு எல்லாமும்
என் உயிர் ரிதா ரிதா
தீம்பாவழி தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்
தீம்பாவழி தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்
வாழ்த்து மின்னட்டையாக
அன்பு என்பினும் அறிவு என்பினும் தீபம் தீபம்
அழகு என்பினும் அமுது என்பினும் தீபம் தீபம்
இரக்கம் என்பினும் ஈகை என்பினும் தீபம் தீபம்
உதயம் என்பினும் உச்சம் என்பினும் தீபம் தீபம்
தூளி என்பினும் தாய்மை என்பினும் தீபம் தீபம்
தவம் என்பினும் வரம் என்பினும் தீபம் தீபம்
ஞானம் என்பினும் மோனம் என்பினும் தீபம் தீபம்
கனிவு என்பினும் கருணை என்பினும் தீபம் தீபம்
அகந்தை அறுப்பதும் அமைதி விளைப்பதும் தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும் வஞ்சம் தகர்ப்பதும் தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும் சொர்க்கம் மீட்பதும் தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும் வாழச் சொல்வதும் தீபம் தீபம்
இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம் இன்பமே ஒளிரட்டும்
இனிய இதய தீம்பாவழி தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்
கவிஞர் புகாரி
*
மாசறு தீபாவளி (வைகைச் செல்வி இதழுக்கு)
அன்பு என்பினும் அறிவு என்பினும் தீபம் தீபம்
அழகு என்பினும் அமுது என்பினும் தீபம் தீபம்
இரக்கம் என்பினும் ஈகை என்பினும் தீபம் தீபம்
உதயம் என்பினும் உச்சம் என்பினும் தீபம் தீபம்
கனவு காதல் நளினம் நாணம்
நட்பு நேயம் உறவு ஊக்கம்
பரிவு பாசம் அகரம் ஆதி
எளிமை ஏற்றம் எண்ணம் ஏகம்
யாவும் யாவும் தீபம் தீபம்
தூளி என்பினும் தாய்மை என்பினும் தீபம் தீபம்
தவம் என்பினும் வரம் என்பினும் தீபம் தீபம்
ஞானம் என்பினும் மோனம் என்பினும் தீபம் தீபம்
கனிவு என்பினும் கருணை என்பினும் தீபம் தீபம்
உள்ளம் உயிர் வளமை செழுமை
வண்ணம் மின்னல் தனிமை இனிமை
மனிதம் புனிதம் மஞ்சள் மாட்சி
பக்தி பூசை மாண்பு நோன்பு
யாவும் யாவும் தீபம் தீபம்
அகந்தை அறுப்பதும் அமைதி விளைப்பதும் தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும் வஞ்சம் தகர்ப்பதும் தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும் சொர்க்கம் மீட்பதும் தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும் வாழச் சொல்வதும் தீபம் தீபம்
தீபமென்றால் ஒளி ஆவளி என்றால் வரிசை
அழகு தீபங்களின் அறிவு தீபங்களின்
இதய தீபங்களின் இனிய தீபங்களின்
ஊர்வலம்தான் தீபாவளி
இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம் இன்பமே ஒளிரட்டும்
இனிய இதய தீம்பாவழி தீபவொளி
தீபாவளி வாழ்த்துக்கள்
*கவிஞர் புகாரி*
(முழுக்கவிதை)
அன்பு என்பினும்
அறிவு என்பினும்
தீபம் தீபம்
அழகு என்பினும்
அமுது என்பினும்
தீபம் தீபம்
இரக்கம் என்பினும்
ஈகை என்பினும்
தீபம் தீபம்
உதயம் என்பினும்
உச்சம் என்பினும்
தீபம் தீபம்
0
கனவு காதல்
நளினம் நாணம்
நட்பு நேயம்
உறவு ஊக்கம்
பரிவு பாசம்
அகரம் ஆய்தம்
எளிமை இனிமை
எண்ணம் ஏற்றம்
யாவும் யாவும்
தீபம் தீபம்
0
தூளி என்பினும்
தாய்மை என்பினும்
தீபம் தீபம்
தவம் என்பினும்
வரம் என்பினும்
தீபம் தீபம்
ஞானம் என்பினும்
மோனம் என்பினும்
தீபம் தீபம்
கனிவு என்பினும்
கருணை என்பினும்
தீபம் தீபம்
0
உள்ளம் உயிர்
வளமை செழுமை
வண்ணம் மின்னல்
தன்மை தனிமை
மனிதம் புனிதம்
மஞ்சள் மாட்சி
பக்தி பாசம்
மாண்பு நோன்பு
யாவும் யாவும்
தீபம் தீபம்
0
அகந்தை அறுப்பதும்
அமைதி விளைப்பதும்
தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும்
வஞ்சம் தகர்ப்பதும்
தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும்
சொர்க்கம் மீட்பதும்
தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும்
வாழச் சொல்வதும்
தீபம் தீபம்
0
தீபமென்றால்
ஒளி
ஆவளி என்றால்
வரிசை
தீப ஆவளி
தீபாவளி
அழகு தீபங்களின்
அறிவு தீபங்களின்
இதய தீபங்களின்
இனிய தீபங்களின்
ஊர்வலம்தான்
தீபாவளி
0
இருளகற்றும் தீபமே
இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே
நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி
விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும்
நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம்
தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள்
எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம்
இன்பமே ஒளிரட்டும்
0
இனிய
இதய
தீம்பாவழி
தீபவொளி
தீபாவளி வாழ்த்துக்கள்
கவிஞர் புகாரி
வாழ்த்து மின்னட்டையாக
அன்பு என்பினும் அறிவு என்பினும் தீபம் தீபம்
அழகு என்பினும் அமுது என்பினும் தீபம் தீபம்
இரக்கம் என்பினும் ஈகை என்பினும் தீபம் தீபம்
உதயம் என்பினும் உச்சம் என்பினும் தீபம் தீபம்
தூளி என்பினும் தாய்மை என்பினும் தீபம் தீபம்
தவம் என்பினும் வரம் என்பினும் தீபம் தீபம்
ஞானம் என்பினும் மோனம் என்பினும் தீபம் தீபம்
கனிவு என்பினும் கருணை என்பினும் தீபம் தீபம்
அகந்தை அறுப்பதும் அமைதி விளைப்பதும் தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும் வஞ்சம் தகர்ப்பதும் தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும் சொர்க்கம் மீட்பதும் தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும் வாழச் சொல்வதும் தீபம் தீபம்
இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம் இன்பமே ஒளிரட்டும்
இனிய இதய தீம்பாவழி தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்
கவிஞர் புகாரி
*
மாசறு தீபாவளி (வைகைச் செல்வி இதழுக்கு)
அன்பு என்பினும் அறிவு என்பினும் தீபம் தீபம்
அழகு என்பினும் அமுது என்பினும் தீபம் தீபம்
இரக்கம் என்பினும் ஈகை என்பினும் தீபம் தீபம்
உதயம் என்பினும் உச்சம் என்பினும் தீபம் தீபம்
கனவு காதல் நளினம் நாணம்
நட்பு நேயம் உறவு ஊக்கம்
பரிவு பாசம் அகரம் ஆதி
எளிமை ஏற்றம் எண்ணம் ஏகம்
யாவும் யாவும் தீபம் தீபம்
தூளி என்பினும் தாய்மை என்பினும் தீபம் தீபம்
தவம் என்பினும் வரம் என்பினும் தீபம் தீபம்
ஞானம் என்பினும் மோனம் என்பினும் தீபம் தீபம்
கனிவு என்பினும் கருணை என்பினும் தீபம் தீபம்
உள்ளம் உயிர் வளமை செழுமை
வண்ணம் மின்னல் தனிமை இனிமை
மனிதம் புனிதம் மஞ்சள் மாட்சி
பக்தி பூசை மாண்பு நோன்பு
யாவும் யாவும் தீபம் தீபம்
அகந்தை அறுப்பதும் அமைதி விளைப்பதும் தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும் வஞ்சம் தகர்ப்பதும் தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும் சொர்க்கம் மீட்பதும் தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும் வாழச் சொல்வதும் தீபம் தீபம்
தீபமென்றால் ஒளி ஆவளி என்றால் வரிசை
அழகு தீபங்களின் அறிவு தீபங்களின்
இதய தீபங்களின் இனிய தீபங்களின்
ஊர்வலம்தான் தீபாவளி
இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம் இன்பமே ஒளிரட்டும்
இனிய இதய தீம்பாவழி தீபவொளி
தீபாவளி வாழ்த்துக்கள்
*கவிஞர் புகாரி*
(முழுக்கவிதை)
அன்பு என்பினும்
அறிவு என்பினும்
தீபம் தீபம்
அழகு என்பினும்
அமுது என்பினும்
தீபம் தீபம்
இரக்கம் என்பினும்
ஈகை என்பினும்
தீபம் தீபம்
உதயம் என்பினும்
உச்சம் என்பினும்
தீபம் தீபம்
0
கனவு காதல்
நளினம் நாணம்
நட்பு நேயம்
உறவு ஊக்கம்
பரிவு பாசம்
அகரம் ஆய்தம்
எளிமை இனிமை
எண்ணம் ஏற்றம்
யாவும் யாவும்
தீபம் தீபம்
0
தூளி என்பினும்
தாய்மை என்பினும்
தீபம் தீபம்
தவம் என்பினும்
வரம் என்பினும்
தீபம் தீபம்
ஞானம் என்பினும்
மோனம் என்பினும்
தீபம் தீபம்
கனிவு என்பினும்
கருணை என்பினும்
தீபம் தீபம்
0
உள்ளம் உயிர்
வளமை செழுமை
வண்ணம் மின்னல்
தன்மை தனிமை
மனிதம் புனிதம்
மஞ்சள் மாட்சி
பக்தி பாசம்
மாண்பு நோன்பு
யாவும் யாவும்
தீபம் தீபம்
0
அகந்தை அறுப்பதும்
அமைதி விளைப்பதும்
தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும்
வஞ்சம் தகர்ப்பதும்
தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும்
சொர்க்கம் மீட்பதும்
தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும்
வாழச் சொல்வதும்
தீபம் தீபம்
0
தீபமென்றால்
ஒளி
ஆவளி என்றால்
வரிசை
தீப ஆவளி
தீபாவளி
அழகு தீபங்களின்
அறிவு தீபங்களின்
இதய தீபங்களின்
இனிய தீபங்களின்
ஊர்வலம்தான்
தீபாவளி
0
இருளகற்றும் தீபமே
இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே
நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி
விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும்
நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம்
தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள்
எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம்
இன்பமே ஒளிரட்டும்
0
இனிய
இதய
தீம்பாவழி
தீபவொளி
தீபாவளி வாழ்த்துக்கள்
கவிஞர் புகாரி
பொங்கல் வாழ்த்துக்கள்
இன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க
வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது
வீட்டுப் பசுமாடும்
வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
பொன்னழகுப் பொட்டுவச்சி
தோட்டத் தெருவெல்லாம்
தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
அழகுமணிப் பொங்கலிது
மண்ணைக் கையெடுக்க
மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
பெருமிதத்தில் கண்விரிய
அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்புகழும் பொங்கலிது
நண்பருக்குப் பிறந்தநாள் வாழ்த்து

சொல்ல இனித்தால்தான் சொல்
உண்மைதான் - ஆயினும்
சொல்லாமல் போனாலும்
அது சொல்தானே
புள்ளி சேர்த்தால்தான் கோலம்
உண்மைதான் - ஆயினும்
புன்னகையால் வரைந்தாலும்
அது கோலம்தானே
அல்லி பூத்தால்தான் அழகு
உண்மைதான் - ஆயினும்
அலையலையாய் விரிந்தாலும்
அது அழகுதானே
கல்லை உடைத்தால்தான் சிலை
உண்மைதன் - ஆயினும்
கருத்துக்குள் வடித்தாலும்
அது சிலைதானே
முல்லை மலர்ந்தால்தான் வாசம்
உண்மைதான் - ஆயினும்
மனதுக்குள் மலர்ந்தாலும்
அது வாசம்தானே
உள்ளம் இணைந்தால்தான் உறவு
உண்மைதான் - ஆயினும்
உதிரத்தில் வெடித்தாலும்
அது உறவுதானே
வள்ளல் கொடுத்தால்தான் கொடை
உண்மைதான் - ஆயினும்
வார்தையால் அணைத்தாலும்
அது கொடைதானே
0
இல்லை உனக்குவோர் பரிசு
உண்மைதான் - ஆயினும்
இதயத்தால் ஏந்திவிட்டால்
அது பரிசுதானே
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூற்றாண்டு
எல்லாமும் எல்லாமும்
இனிதாக இசையாக
நல்லோர்கள் புடைசூழ
நாற்திசையும் தமிழ்மணக்க
நடைபோடு நடைபோடு
நல்லதமிழ் மகனாக
சொல்லில்லை சொல்லில்லை
நெஞ்சத்தின் கவிசொல்ல
சொல்லாமல் போனாலும்
சுவையன்றோ நட்புறவில்
உள்ளத்தின் உணர்வுகளை
ஒருமுகமாய்க் குவிக்கின்றேன்
ஓவியமாய்க் காவியமாய்
வாழ்வாங்கு வாழ்கவாழ்க
ஆயுளென்று நூறிருந்தால்
அதுவொன்றே பெரும்பேறு
அடடாவோ நீயதிலே
அரைவாசி வென்றுவிட்டாய்
தாயுள்ளம் தானுனக்குத்
துயர்கண்டு துடிக்கின்றாய்
தங்கத்தால் சொல்லெடுத்துத்
தரணியையே அணைக்கின்றாய்
வாயாரப் புகழ்ந்தாலும்
விடுபட்டுப் போகுதய்யா
வற்றாத புகழோடு
எந்நாளும் வாழ்கவாழ்க
நோயற்ற வாழ்வோடும்
நொடிதவறா சிரிப்போடும்
நயாகராப் பொழிவாக
நெடிதுயர்ந்து வாழ்கவாழ்க
ஆகாயம் பூமி
இடைவெளி நிறைத்து
என் இதயவெளி வாழ்த்து
வளைகாப்பு
மாப்பிள்ளை வாழ்த்து

பூக்களின்
முகங்களில் பொன்னழகு
பொன்னழகோ
இந்தப் பெண்ணழகோ
கண்ணழகும்
இவள் கனிவழகும்
விண்ணளக்கும்
வனத் தேன்விளைக்கும்
மாமகனே
மணிக் கணித்தளமே
தேவனவன்
உன் கவர் முகத்தில்
ஆனவரை
சுடர் ஏற்றிவைத்தான்
தூயநதிக்
குணம் பூட்டிவைத்தான்
கைகோர்ப்பீர்
உணர் மெய்கோர்ப்பீர்
மனங்கோர்ப்பீர்
என்றும் சுகம்சேர்ப்பீர்
வாழ்வாங்கு
இந்த வான்நிறைத்து
வாழ்கவென்றே
நின்று வாழ்த்துகின்றேன்
சேவியர் மகளுக்கு வாழ்த்து
Subscribe to:
Posts (Atom)








