20160925 முகநூல்

*
நாம்
நம் தமிழை
வேறு இனத்திடமும் சென்று
என்றுமே
திணித்ததில்லை

எங்களிடமே
அதைக்
கட்டிக்காக்கத்
திராணியற்றுத்
திணறுகிறோம்
*


நிசத்தில் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கைதான். ஆனால் கற்பனையில் வாழ்வது பல்லாயிரம் வாழ்க்கை அதுதான் இலக்கிய வாழ்க்கை. அப்படி வாழ்பவன்தான் கவிஞன் கலைஞன்

*

Murugan Arumugam >>>>மந்திரங்களை உச்சரிக்கும்போது நம் உள்ளுக்குள் நிகழும் அதிர்வுகள் நமக்குள் மாற்றம் உருவாக்குபவை. அதன் அர்த்தம் தெரியாவிட்டாலும் பயன் தரும்<<<<<
ஒருவரின் மனம் அப்படி ஒரு நம்பிக்கையில் இருக்கிறது என்பதுதான் உண்மை. அது நெடுங்காலம் நீடிக்காது.
ஒரு மூதாட்டி மருத்துவரைப் பார்க்க வந்தாள்.
என்ன செய்கிறது என்று கேட்டார் மருத்துவர் தலையில் ஒரே வலி என்றால் மூதாட்டி. சரி என்று ஸ்டெத்தை எடுத்து அவள் மார்பில் வைத்து இதயத்துடிப்பைச் சோதிக்க முயன்றார் மருத்துவர்.
டாக்டர் எனக்கு தலையில்தான் வேதனை. என் தலையில் வைத்துப் பாருங்கள். என் நெஞ்சாங்கூடு நன்றாக வே இருக்கிறது என்று கோபமாகச் சொன்னாள் மூதாட்டி.
மருத்துவரும் தலையில் ஸ்டெத்தை வைத்துப் பார்த்துவிட்டு, தலைவலிக்கு மருந்துகொடுத்தார். சட்டென்று மூதாட்டியின் தலைவலி பூரண குணமாகிவிட்டது ;-)
மருத்துவர் முட்டாள் அல்ல, மன இயல்பை உணர்ந்த சாதுர்யக் காரர் 

*
இஸ்லாம் என்பது மதம். மதத்தை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
சாதியை மாற்றமுடியுமா?
கிருத்தவர்கள் இஸ்லாமியர்கள் போன்றே இந்துக்களும்.
ஆனால் இந்துக்களில் சாதி இருப்பதால் யாரும் இந்துமதத்துக்குள் நுழையவே முடியாது. இதுபற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
ஆரியர்களின் வருகையின் பின்னரே தமிழர்களுக்கு இந்துமதம் வந்தது.
காலகட்டம்தான் வேறே தவிர எல்லோரும் மதம் மாறியவர்களே! அதில் பிழையில்லை. இன்றும் மாறலாம். என்றும் மாறலாம். ஏனெனில்

மதம் என்பது
மூர்க்கம் அல்ல
மார்க்கம்
*

மதம்
என்பது
மூர்க்கம்
அல்ல
மார்க்கம்
*

சிலருக்குப் புகழ்ந்து தரப்பட்ட பட்டங்களும் பின்னாளில் சாதியானது. அது அந்தக் காலம்.
இந்தக் காலத்தில்...
கலைஞர் என்று ஒரு சாதி வரமுடியாது.
உலகநாயகன் என்று ஒரு சாதி வரமுடியாது
இசைப்புயல் என்று ஒரு சாதி வரமுடியாது
ஏனெனில் இன்று அறிவு வளர்ந்தவர்களே அதிகம். ஆனாலும் பழயனவற்றை மனரீதியாக்ப் பற்றிக்கொண்டு எப்படி விடுவது என்று அறியாமல் தவிக்கிறார்கள்.

*
Ananthi Ananthi இது எப்போ ! இப்படி எல்லாம் அடுத்தவர்களை வேதனைப்படுத்துவதால் இவர்களுக்கு என்ன லாபம்<<<<
மனித வக்கிரம். அறம் ஆரம்பம் முதலே அழுத்தமாகப் போதிக்கப்படாததின் காரணம். பணம் சம்பாதிக்க கல்வியைப் பயன்படுத்துகிறார்கள். உலக அமைதி வாழ்க்கைக்கு அறவாழ்க்கைக்குக் கல்வி பயன் தரவே இல்லை

*

ஒன்றாக தீண்டாமையில்லாமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
ஆரியம் திராவிடம் மட்டுமல்ல, சீனம், ஈரோப், அரபு எல்லாம் தீண்டாமை இல்லாமல் இருக்க வேண்டும். உலகம் ஒரு குடையின் கீழ் ஏற்றத்தாழ்வுகள் இன்றி இருக்க வேண்டும்

*
ஆரியர் திராவிடர் கலந்து வாழத் தொடங்கிய காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், பல கலாச்சாரங்கள் பண்பாடுகள் காலப்போக்கில் கலந்தநிலை அடைவது இயற்கை.
இன்று கனடாவில் வெள்ளைக்காரனுக்கும் நம் பிள்ளைகளுக்கும் எந்தக் கலாச்சார வேற்றுமையும் இல்லாத நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள்.
என்றால் வெள்ளைக்காரனும் தமிழனும் ஒருவர்தான் என்று முறையிடலாம் சில காலத்தில்
*

கல்வி என்பது அறம் போதிக்க என்றும் ஆகவேண்டும், வெறுமனே வருமானத்திற்கான கருவியாக இருந்தால் உலகம் உருப்படாது

*
Gnana Suriyan

>>>
பிறப்பின் வம்சம் அவர்களது வாழ்வியல் முறையில் வெளியில் அடையாளம் காணப்படுகிறார்கள்
<<<

ஒரே வீட்டில் ஒரே தகப்பன் தாய்க்குப் பிறந்தவர்களின் வாழ்வியல் முறைகள் மாறுபாடானதாக இருக்கும் நண்பரே 

*
Gnana Suriyan

 >>>இரத்தமாதிரியில் தெரிவதல்ல சாதி<<<<
ஒரு பத்து பேரை உங்கள் முன் நிறுத்தினால், அவர்களைப் பார்த்து இவர் இன்ன சாதி என்று சொல்லிவிடுவீர்களா நண்பரே 

*
Gnana Suriyan யார் சொன்னாங்க நயன்தாரா இந்துவாக இடைப்பட்ட காலத்தில் மாறினாரே
எந்த சாதியில்?
Gnana Suriyan இந்துவாக சாதி என்பது தேவையல்ல
என்றால் அவர் சாதியை என்னவென்றுதான் அழைப்பீர்கள்?
Gnana Suriyan அவருக்கு சாதிய அடையாளம் இருந்தால் அதனைக்கொண்டு அழைக்கலாம்
இல்லையெனில் அழைக்க இயலாது
அவர் யாரைத் திருமணம் செய்துகொள்வார்?
Gnana Suriyan அவர் யாரை விரும்புகிறாரோ அவரை யார் விரும்புகிறாரோ அவரை
அவர் எந்தச் சாதிப் பெண்ணையும் போய் பெண் கேட்க முடியுமா?
அவருக்குத்தான் எந்த சாதி அடையாளமுமே இல்லையே ;-)
Gnana Suriyan அது அவரவர் சொந்த விருப்பம். அப்பெண்ணும் அவரின் தந்தையின் சொந்த விருப்பம்
சாதியற்றவரை மணம்முடிக்க அவர்களுக்கு விருப்பம் எனில் செய்வதில் தவறில்லை
விருப்பமில்லையெனில் அதுவும் தவறில்லை
Gnana Suriyan விருப்பமில்லை என்பது தவறில்லை என்றால் அவருக்குப் பெண் கிடைக்காத நிலையையல்லவா தரும்:-)
இந்து மதத்துக்குள் மாறி வந்தவர்கள் திருமணமே செய்யாமல் வாழ வேண்டுமா?
இதற்குப் பதில் சாதிகள் இல்லை என்றீர்கள் என்றால் அவர் எத்தனை ஆனந்தமாய் இந்துமதத்தில் இருப்பார்?
இப்போது அவரை அனாதை ஆக்குகிறீர்களே? அவர் ஏன் மதம் மாறி இந்துவாக ஆகவேண்டும்? தண்டிக்கப்படவா?












                       
;-)


*
*

No comments: