மனசாட்சி எனப்படும் ஆழ் உள்ளத்தின் குரலுக்கு உண்மையாகவே செவி சாய்த்து, அதன் வழியில் நேர்மையாக நடப்பதும் வழிபாடு எனப்படும்
இறைவன் வழியைப் பின்பற்றுதல் என்பதும் வழிபாடு எனப்படும்
ஆகவேதான் இறைவன் உன் உள்ளத்தில் இருக்கிறான் என்கிறார்கள்
இறைவனின் அறத்தை காலங்காலமாகக் கேட்டு வளர்ந்த உள்ளத்தில்தான் மனசாட்சி உறுதியாக நிற்கும்
இறைவனைத் தொழுதல் என்றாலும் அவனை வழிபடுதலே
இறைவணக்கம் என்றாலும் அவனை வழிபடுதலே
சொல்லில் ஏதும் இல்லை, வைக்கும் எண்ணத்தில்தான் எல்லாம் இருக்கிறது

No comments: