ஒரு நிமிடம் ஒத்திவைத்தால்

அன்பின் சிறப்பே
பேராழம்தான்
பிரிதொரு கருத்தில்லை

அன்புடை நெஞ்சம்
பழகுநாள் பொழுதுகளில்
கொதியுணர்வுக் கோட்டைதான்
குறையேதும் இல்லை

ஆனபோதிலும்
திடீர் உதய உணர்வுகளை
திறம்பட அலசாமல்
தாமதித்துப் பொழியாமல்
பேரன்புடைய உறவுகளிடமே
சட்டெனக் கொட்டிவிடும் துயரம்
உயர்ரக நெய்யில் விழுந்து
உயிரிழக்கும் மரணம்

ஒரு நொடி நாவசைவை
ஒரு நிமிடம் ஒத்திவைத்தால்
உண்மை அன்பு
உடையாத உயரம்
ஏறிக்கொள்ளும்

ஒரு நாள் ஒத்திவைத்தாலோ
அன்பின் வெள்ளத்தில்
அழகிய பாசப் படகில்
அழியாத ஜென்மப் பிணைப்பில்
உறவின் ஆயுள்
அற்புதமாய் அமர்ந்து
அமர்க்கள உலாப்போகும்

அன்புடன் புகாரி

No comments: