சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் - Edited Version

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

சித்திரையே எழில் முத்திரையே
சொல்லிவிடு உன் சூட்சுமத்தை

அத்தைமகள் விழி மார்கழியும்
அமுதளக்கும் நிலத் தைமகளும்

முத்தமிடும் பொற் கார்த்திகையும்
முகிலவனின் நல் ஐப்பசியும்

எத்தனையோ இம் மாதிரியாய்
முத்தமிழர் தம் மாதங்களும்

சித்திரமாய்ப் பண் பாடிவர
சித்திரையே நீ யாரடியோ

கத்தரியாய்த் துயர் துண்டாடி
கவிபாடும் தீப் பிழம்பரசி

எத்தனையோ இருள் எழுந்தாலும்
எரிப்பாயே அருள் நிறைப்பாயே

சித்திரையே தவப் பொற்கொடியே
சூரியனும் உன் சொற்படியே

முத்தெடுக்கும் நீள் மூச்சழகே
முறைதானே நீ பொன்மகளே

முத்துரதம் மண் ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ் வீற்றிருக்க

எத்திசையும் வளர்த் தூயதமிழ்
எழுந்தோங்க வளம் விண்முட்ட

சித்திரையே நீ வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன் தந்துவிட்டாய்

No comments: