தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்


அன்றைய ணா ணோ ணோ ணை எல்லாம் இன்று இல்லை
றா றொ றோ என்பதெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தன என்பது இப்போது பலருக்கும் தெரியவில்லை
இந்த மாற்றங்கள் சரியா பிழையா?
அ இ உ எ ஒ
இந்த ஐந்து எழுத்துக்கள் மட்டுமே தமிழின் மூல உயிர் எழுத்துக்கள்
க எப்படி கால்வாங்கினால் கா ஆகிறதோ
அதேபோல அ பக்கத்தில் ஒரு கால்வாங்கினால் அது ஆ என்றாகிவிடும். பிறகு அ போதும் ஆ தேவை இல்லை என்ற காலம் வரக்கூடும்.
எல்லாம் தட்டச்சு இயந்திரத்தின் வசதிக்காகத்தான்
இப்படியே
அ ஆ
இ ஈ
உ ஊ
எ ஏ
ஒ ஓ
பிறகு
அய்
அவ்
இப்போது தமிழின் மூல உயர் எழுத்துக்கள் 5 மட்டுமே என்றாகிறது இது பிற மொழிகளோடு ஒத்துப் போகிறது
a e i o u
ஆனால் தமிழின் கூட்டெழுத்துக்களைக் கைவிடுவது கண்ணையும் கருத்தையும் கொன்று தின்றுவிடும்
க என்பதை க் + அ என்று ஆங்கிலத்தைப் போல எழுதமுடியாது k + a
அன்புடன் புகாரி

No comments: