உலகம் ஜாதி மதம் இனம் மொழி ஆகிய அனைத்து வெறிகளிலிருந்தும் விடுதலை பெறவேண்டும்.

போர் இல்லாத பூமியே வேண்டும்
வன்முறை அற்ற வாழ்க்கையே வேண்டும்
காதல் நிறைந்த உயிர்களே வேண்டும்

அதுவே உலகச் சுதந்திர நாள்
அந்நாள் விரைந்து மலர வேண்டும்

அன்புடன் புகாரி


உயிர்களைக் குடிக்கும் எந்தத் தாக்குதலும் மனிதத்துவம் கொண்டதல்ல.

அந்தத் தாக்குதலை நடத்தியவரும் குற்றவாளி. நடத்தத் தூண்டிய அத்தனைபேரும் குற்றவாளிகள்.

உலகில் வன்முறையால் ஒரு உயிரும் பிரியக் கூடாது.

அப்படி வன்முறையால் ஓர் உயிர் பிரியும்போதெல்லாம் உலக மக்கள் அனைவருமே வெட்கித்தலை குனிய வேண்டும்



அன்புடன் புகாரி


காஷ்மிர் ஓர் இந்து நாடும் அல்ல முஸ்லிம் நாடும் அல்ல. அது காஷ்மிர் மக்களின் நாடு.

காஷ்மீரில் முஸ்லிம் மூன்றில் இரண்டு பங்கு இருக்கிறார்கள் என்பதனாலே அது முஸ்லிம் நாடு என்று சொல்லக் கூடாது.

காஷ்மிர் மக்கள் விரும்பதுவது சுதந்திர காஷ்மீர் மண்ணைத்தான்.

காஷ்மீர் யாருக்கும் சொந்தமானதல்ல, காஷ்மீர் மக்களுக்கே சொந்தமானது.

70 ஆண்டுகளாய் அங்கே மக்களைக் கொத்தித் தின்னும் பிணக் கழுகுகள் வெளியேறவேண்டும்.


அன்புடன் புகாரி

இந்தியாவுக்கு இந்தியப் பார்வை, பாகிஸ்தானுக்குப் பாகிஸ்தான் பார்வை. இந்தப் பார்வைகள் குருட்டுப் பார்வைகள். காஷ்மீர் மக்களின் பார்வையே அவசியமான வாழ்க்கைப் பார்வை

No comments: